Tuesday, 16 June 2020

நஜ்திய உலமாக்களுடன் ஒரு நிமிடம் -1

ஷைகுன் நஜ்தி முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபால் தோற்றுவிக்கப்பட்ட மத்ஹபானது வழிகேட்டின் ஊற்றுக்   கண்ணாக திகழ்ந்ததோடு , முஸ்லீம்களும் ,முவஹ்ஹிதீன்களும் காபிர்களெனத் தீர்ப்பளிக்கப்பட்டு ,ஆண்கள் கொல்லப்பட்டும் ,பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் கேவலப்படுத்தப்பட்டனர் .அத்தோடு தாங்கள் விரும்பியவாறு எல்லாம் மனம் போன போக்கில் குர்ஆனுக்கும் , ஹதீதுக்கும் விளக்கமளித்தனர் . இவையனைத்தும் உண்மையிலேயே புண்ணிய பூமியான குர்ஆன் இறங்கிய மண்ணில் நபிகள் நாயகம் அவர்களும் ,அவர்களது அருமைத் தோழர்களும் நடமாடிய மண்ணிலேயே இப்படிப்பட்டதோர் நிலை ஏற்படுத்தப்பட்டதென்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் ?

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை முஷ்ரிக்குகள் என்றும் .அஜமிகளான நம்மை அடிமைகளென்றும் கருதக்கூடிய சவூதிய நஜ்த் உலமாக்களையும் , இப்னு சவூதின் மன்னர்களையும் இப்போதும்கூட மதிப்பவர்கள் ,அவர்கள் தங்களின் நாவால் ஏகத்துவ கலிமாவை உச்சரிக்கிறார்களே என்னும் ஒரே காரணத்திற்காக தான் . நாவால் கலிமாவை உச்சரித்து உள்ளத்தால் முனாஃபிக்குகளாக இருந்தாலும் அவர்களை குறித்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை உடைய , சகல நிலைகளிலும் மூஃமின்களாக உள்ள  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை  உதாசீனப்படுத்தும் வேலையைத் தான் அவர்கள் செய்கின்றனர் .

இவர்களால் முன்னொரு காலத்தில் தானே இப்படியெல்லாம் நடந்தது . இப்போது அப்படியெல்லாம் இல்லையே . முன்பு நடந்ததைச் சொல்லி இப்போது முஸ்லிம்களின் ஒற்றுமையை நாம் சிதைக்கப் பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம் . அதனால் தான் இவர்கள் இஸ்லாமியர்களுக்கு இழைத்த கொடுமைகளை எல்லாம் இவர்களை ஆதரிக்கும் இந்திய உலமாக்களைக் கொண்டே ஆதாரப்படுத்திய நாம் ,அவைகளெல்லாம் அப்பட்டமான உண்மை என்பதோடு இன்னும் அதே நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை குவைத் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சரும் , இஸ்லாமிய சட்டசபை அமைச்சருமாக இருந்த ஷெய்கு அஸ்ஸெய்யித் யூசுப்  இப்னு ஹாஷிமுர்   ரிபாயி அவர்களின் நூலாகிய "நஜ்திய சகோதர உளமக்களுக்கு ஓர் உபதேசம் (நஸீஹா லி இக்வானினா உலமா நஜ்த் )" என்னும் நூலிலிருந்து சில கருத்துக்களை எடுத்து உங்களின் பார்வைக்கு தருகின்றோம் .

ஷெய்கு அஸ்ஸெய்யித் யூசுப்  இப்னு ஹாஷிமுர்   ரிபாயி


* "உங்களோடு தொழுது கொண்டும் , நோன்பு நோற்றுக் கொண்டும் ,ஸகாத் கொடுத்துக் கொண்டும் , திரும்பத் திரும்ப ஆண்டவனே உனக்கே நாங்கள் வழிபட்டோம் . உனக்கு யாரும் நிகரில்லை . நிச்சயமாக புகழனைத்தும் உன்னையே சாரும் . அதிகாரமும் உனக்கே உரியது எனக் கூறும் முவஹ்ஹிதீன்களான முஸ்லிம்கள் மீது பழி சுமத்தக் கூடாது "  என்று சொல்லப்பட்ட பண்புக்குரிய நல்லடியார்களுடைய விஷயத்தில் இப்போதும் முஷ்ரிக்குகள் என்னும் கருத்தில்தான் இவர்கள் இருக்கின்றனரா இல்லையா ?



*  " இஷா தொழுகை முடிந்ததும் நாயகம் அவர்களின் கண்ணியத்திற்குரிய பள்ளிவாசலை மூடி விடுகிறீர்கள் . இது இஸ்லாமிய வரலாற்றில் எங்குமே காணப்படாத ஒன்றாகும் . இவ்வாறே அப்பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதையும் , தஹஜ்ஜத் தொழுவதையும் தடுக்கிறீர்கள் " இது ஏன் ? இதற்கு என்ன காரணம் ? இந்த உரிமையை உங்களுக்கு தந்தது யார் ? உங்களை யாராலும் கேட்க முடியாது என்ற அகம்பாவம் தானே ? உங்களுக்கு உலகத் திருத்தூதர் நாயகம் அவர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு ?


  * " புண்ணிய பூமியான மதீனா முனவ்வரா மற்றும் மக்கா முகர்ரமாவின் வெளிப்பகுதியில் இறப்பெய்தும் முஸ்லிம்களை அங்குள்ள ஜன்னத்துல் முஅல்லாவிலும் ,ஜன்னத்துல் பஃகீ யிலும்   நல்லடக்கம் செய்வதை ஏன் தடுக்கின்றீர்கள்   ? அல்லாஹ்வும் , அவன் றஸுலும் நேசிக்கின்ற அப்புண்ணிய பூமியில் நல்லடக்கம் செய்ய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளை பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம்களை நீங்கள் தடுக்கின்றீர்கள் ".

ஜன்னத்துல் பகீஃ பற்றி அண்ணலெங்கோமான்  அவர்கள் என்ன சொலிகிறார்கள் என்று பாருங்கள் .


" அதிலிருந்து மறுமை நாளன்று பதினான்காம் பக்கத்து நிலவைப் போன்ற தோற்றத்தில் எழுபதாயிரம் பேர் எழுப்பப்படுவார்கள் . அவர்களனைவரும் கேள்வி கணக்கின்றி சுவர்கத்துக்குள் நுழைவார்கள் ".


"எங்களது இம்மையவாடியில் யார் அடக்கம் செய்யப்படுகிறாரோ அவருக்கு நாம் ஷபாஅத்து செய்வோம் . அல்லது அவருக்கு நாம் சாட்சி சொல்வோம் என்கிறார்கள் ஏந்தல் நபி அவர்கள் "

[ நூல் :  அத்துர்ரதுஸ்  ஸமீனா ஃபீ தாரீகில் மதீனா  ,   பக்கம் -229]

ஸவூதியின் வஹாபிய உலமாக்களே ! இந்த நபிமொழிகள் உங்களுக்கு தெரியாதா ? அல்லது நீங்கள் ஷபாஅத்தை பொய்ய்யாக்கும் கூட்டமா ?

" விசுவாசிகளே ! உங்களின் தொனியை நபிகள் நாயகம் அவர்களின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் . இன்னும் உங்களில் ஒருவரை இன்னொருவர் அழைப்பதைப் போன்று நபியவர்களை அழைக்காதீர்கள் . அன்றி அவ்வாறு செய்வீர்களாயின் உங்களது  வணக்கமெல்லாம் தவிடு பொடியாகிவிடும் . ஆனால் அதை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது . "

என்பதாக அல்லாஹ் வன்மையாக எச்சரித்த பின்னும் நாயகம் அவர்களின் தர்பாரில் அவமரியாதையாக நின்று கொண்டு உரத்த குரலில் சப்தமிடுவதற்காக சிலரை அமர்த்தீயுள்ளீர்களே .அல்லாஹ்வை அஞ்சாத யூத ,கிறிஸ்தவர்களின் பொம்மைகளா நீங்கள் ?


* அருமை நாயகம் அவர்கள் தங்கள் முபாரக்கான கரத்தால் சகோதரர் உஸ்மான் இப்னு மழ்வூன் அவர்களின் கப்ரை அடையாளம் கண்டு கொள்வதற்காக கல் ஒன்றை வைத்தார்கள் .

"யார் அக்கல்லை பாய்ந்து தாண்டுகிறாரோ அவர் எங்களில் அதிக  உயரம் தாண்டுபவர் என்று கணிக்கப்படும் அளவுக்கு அக்கல் உயரமானதாக இருந்தது ".

அனால் நீங்கள் அருமை ஸஹாபா பெருமக்கள் , உம்மஹாத்துல் முஃமினீகள் ,அஹ்லுஸ் பைத்தினர்களின் சங்கைமிகு கப்ருகளையெல்லாம்      சுடுகாட்டைப் போலாக்கி விட்டீர்கள் .குப்பாக்கள் மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்வு ?

* " அருமை நாயகம் அவர்களின் தர்பாருக்கு அருகிலேயே காரியாலயம் ஒன்றை அமைத்து நபியவர்களின் முன் அழுது பிரார்த்திப்பவரையும் , உள்ளச்சத்தோடு காணப்படுபவரையும் அதிகமாக ஸியாரத்துச் செய்பவரையும் அழைத்து விசாரணை நடத்துவது ஏன் ? "



* " கொடை வள்ளல்களில் ஒருவர் தமது சொந்த செலவில் கந்தக் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஹழ்ரத் செய்யிதினா ஸித்தீகுல் அக்பர் அவர்களின் அப்பள்ளிவாசலை உடைத்து புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதித்தீர்கள் . ஆனால் பழைய பள்ளிவாசல் உடைக்கப்பட்ட பின் அப்பள்ளியை புனர்நிர்மாணம் செய்யவிடாமல் அவரை ஏன் தடுத்து விட்டீர்கள் . அத்துடன் அப்பள்ளி அடைக்கப்பட்டதைக் கண்டு சந்தோசம் அடைகின்றீர்கள் "

* " ஆரிபுபில்லாஹ் முஹம்மத் ஸுலைமான் ஜஸுலி  அவர்களால் கோர்வை செய்யப்பட்ட  ஸலவாத் நூலை  ஓதுவதை தடுப்பதோடு ,மவ்லித் ,மீலாத் போன்ற நிகழ்ச்சிகளையும் வன்மையாக ஏன் கண்டிக்கின்றீர்கள் ? "

* " நாஸிருல் அல்பானி , முக்பில் இப்னு ஹாதி போன்ற  அல்லாஹ் ரஸூலின் விரோதிகளை அவர்கள் விரும்பும் கருத்துகளை சொல்ல அனுமதித்தது ஏன் ? "

அல்பானி 'அஹ்காமுல்  ஜனாயிஸி வபிதஹியாவிலும் ' , முக்பில் இப்னு ஹாதி   போன்ற அல்லாஹ் ரசூலின் விரோதிகளை அவர்கள் விரும்பும் கருத்துகளை சொல்ல அனுமதித்தது ஏன்


அல்பானி 'அஹ்காமுல் ஜனாயிஸி வபிதயிஹாவிலும்' மற்றும்  

முக்பில் இப்னு ஹாதி ' ஹவ்வில் அல் குப்பத்த மப்னிய்யத அலா கப்ரிர் ரஸூல் ' என்பதிலும் பகிரங்கமாக நபியவர்களின் ரவ்லா ஷரீபின் மீது கட்டப்பட்டுள்ள குப்பா பித்அத் என்று தீர்ப்பளித்து அப்பள்ளியில் இருந்து நபி அவர்களின் கபூரை அப்புறப்படுத்த வேண்டும், குப்பாவை உடைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த பின்னரும் அந்நூலை ஏன் பிரசுரித்து கொண்டு இருக்கிறீர்கள் ?


அப்படி என்றால் நீங்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் காத்தமுன் நபி அவர்களின் திருவுடலை திருட வந்த திருட்டுக் கூட்டத்தின் சகாக்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?


இந்த முக்பில் இப்னு ஹாதியின் மாணவர்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் பின் யஹ்யா என்பார் ' கவாரிவுல் அஸி ன்னத்தி பிர்ரத்தி அலா அதாயிஸ் ஸுன்னத்தி ' என்னும் நூலின் 28 வது பக்கத்தில் சிலை வணங்கிகள் என்னும் தலைப்பில் எங்களுடைய காலத்தில் சிலை வணக்கங்கள் அதிகரித்து விட்டன .அச்சிலைகளில் ஒன்றுதான் நபியவர்களுடைய புனித மிகு ரவ்ழாவாகும் எனக் கூறுகிறார் .

ஷைகு நஜ்தியின் குடும்பத்தார் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களின் புனித ரவ்லா ஷரீப் இனை ஒரு சராசரி மனிதன் கூட சொல்ல முடியாத
வாக்கியங்களைக் கொண்டுகொஞ்சம் கூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர் . அதேநேரம் இவர்களுக்கு முழுக்க முழுக்க உதவிசெய்யும் அந்நாட்டு மன்னர்களில் ஒருவரான அமீர் பைஸல் , அந்த நாட்டின் துணை பிரதமராக இருந்தபோது (1959ஆம் ஆண்டு ) இந்தியாவுக்கு வருகை தந்தவர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக நவாயே வக்த் என்னும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டியிருந்தது கவனிக்கத்தக்கதாகும் .

[ நூல் - தாரீக் நஜ்தோ ஹிஜாஸ் , பக்கம் 424]









No comments:

Post a Comment