Sunday, 21 December 2025

வஸீலாவை முதன்முதலாக மறுத்தவர்

🌹  அண்ணல் நபி  ﷺ அவர்களது வஸீலாவை முதலில் மறுத்தவர் 🌹

ஷெய்குல் இஸ்லாம் அல்லாமா ஸுப்கீ அஷ்-ஷாஃபிஈ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் கூறினார்கள்: 

" அல்லாஹ் தஆலாவிடம் ,அண்ணல் நபி  ﷺ  அவர்களை வஸீலாவாகக் கொண்டு துஆ செய்வது முஸ்தஹப் (விரும்பத்தக்கது) ஆகும். இதைத் இப்னு தைமிய்யாவைத் தவிர ,  முன்னர் மற்றும் பின்னர் உள்ள சலஃப் மற்றும் கலஃபில் எவரும் இதை மறுக்கவில்லை. 

இப்னு தைமிய்யா (தான் முதன்முதலாக )  இதை ஒரு பித்அத்தாகக் என்று அறிவித்தார் ; அவருக்கு முன்னர் எந்த இஸ்லாமிய அறிஞரும் இவ்வாறு கூறவில்லை.

(ஹாஷியத்து இப்னு ஆபிதீன்  ரத்துல் முஹ்தார், திபாஅ அல்-ஹலபீ ٦/٣٩٧)

Friday, 19 December 2025

வழிகேடர்களுக்கு மறுப்புரை - 2

ஆக்கம் : முப்தி Dr. தெஹ்ஸீன் ரிழா ஹம்தானி காதிரி நூரி 


ராபிழியாக்கள் ( ஷியாக்கள்) 

ராபிழியாக்கள் குழு என்பது இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஒரு குழுவாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழு தங்கள் நம்பிக்கை அமைப்புகளின் அடிப்படையில் பல துணைக் குழுக்களாகப் பிரிந்தது.

அண்ணல் நபி ﷺ  ஸெய்யிதினா அலீ  كرم الله وجهه அவர்களிடம்  கூறினார்கள்:

"அலீயே ! உம்மில் ஈசா நபி போன்ற ஒரு ஒற்றுமை உள்ளது; யூதர்கள் அவரை எந்தளவு  வெறுத்தனர் என்றால்  அவரது தாயை அவதூறு செய்தனர். கிறிஸ்தவர்கள் அவரை அவ்வளவு நேசித்தனர் என்றால் அவர் தகுதியற்ற ஒரு அந்தஸ்துக்கு ( இறைவனின் குமாரன்)  உயர்த்தினர்."

பின்னர் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் அலீ  كرم الله وجهه அவர்கள்  கூறினார்கள்:

_"என்னால் இரு வகையான மக்கள் அழிவுக்கு உள்ளாவார்கள்: என்னை மிகைப்படுத்தி நேசிப்பவர், எனக்கு இல்லாத குணங்களைப் புகழ்பவர், மற்றும் என்னை மிகைப்படுத்தி வெறுப்பவர், என்னை அவதூறு செய்பவர். எச்சரிக்கை! நான் ஒரு நபி அல்ல, என் மீது வஹீ இறங்குவதில்லை."_

[ஆதார நூல் 📕 அல் முஸ்தத்ரக் லில் ஹாகிம், ஹதீஸ் 4622, ஸஹீஹ்]

இதிலிருந்து தெளிவாகிறது  ஒரு குழு நமது எஜமானர் ஞானத்தின் தலைவாயில் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் அலீ முர்தளா  كرم الله وجهه  அவர்களிடம் மிகைப்படுத்தலால் அழிவுக்கு உள்ளாகும். 

இத்தகைய பண்பு ராபிழியாக்களது பழக்கமாகும். ஷீஆக்களின் இந்த மிகைப்படுத்தல்கள் மற்றும் பிற தவறான நம்பிக்கைகள் பின்வருமாறு:

- ஹழ்ரத் அலீ  رضي الله عنه அண்ணல் நபி ﷺ அவர்களைத் தவிர அனைத்து நபிமார்களையும் விட உயர்ந்தவர்கள்.

- ஹழ்ரத் அலீ  رضي الله عنه அன்ஹுவின் நேசத்தில், சிலரைத் தவிர மற்ற அனைத்து ஸஹாபாக்களையும் காஃபிர்கள் என்று அறிவிக்கின்றனர்.

- அவர்களின்படி, அசல் குர்ஆன் 17,000 வசனங்களைக் கொண்டிருந்தது. இன்றைய குர்ஆன் முழுமையடையாதது.

அவர்களது புத்தகங்களில் உள்ள குறிப்புகள்:

- ரிஜால் அல் காஷி, பக்கம் 12, கர்பலா பதிப்பு, ஈராக்.

- உஸூல் அல் காஃபி, தொகுதி 2, பக்கம் 634, தாருல் கிதாப், தெஹ்ரான்.

இந்த தவறான நம்பிக்கைகளால், ராபிழி ஷீஆ குழு இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டது. இவர்களது நம்பிக்கைகளைத் தெரிந்த பிறகு இவர்களை நேர்வழி பெற்றவர்கள் என்று கருதுபவர் அல்லது இவர்களது நம்பிக்கைகளை வெறும் கருத்து வேறுபாடு என்று கருதுபவர் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்.

_தொடரும்_

Thursday, 18 December 2025

வழிகேடர்களுக்கு மறுப்புரை - 1

ஆக்கம் : முப்தி Dr.தெஹ்ஸீன் ரிழா ஹம்தானி காதிரி நூரி 

இந்த தலைப்பு சுன்னி சஹீஹுல் அகீதா முஸ்லிம்களுக்கு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் மிகவும் முக்கியமானது. உம்மத்திற்குள் பிளவையும், சீர்கேட்டையும் உண்டாக்கியவர்களின் வழிகெட்ட நம்பிக்கைகளை அறியாமல் இருந்தால், ஒருவர் அவர்களின் தீமைகளிலிருந்து ஒருபோதும் பாதுகாக்கப்பட மாட்டார். 

நமது அகீதாக்கள்/கொள்கைகள் அல்லாஹ் தஆலா தன் இறை அருளை அருள்புரிந்த புனிதர்களின் அகீதாக்களுக்கு ஏற்ப இருந்தால்தான் உம்மத்தாக ஒன்றுபட முடியும்.

சூரதுல் ஃபாத்திஹாவில் நாம் தினமும் ஓதுகிறோம்:

_"எங்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக! நீ அருள் புரிந்தவர்களின் வழியை!"_ [அல்குர்ஆன், 1:5-6]

அல்லாஹ் தஆலா யாருக்கு அருள் புரிந்தான்?

அல்லாஹ் தஆலா கூறினான்:

_"யார் அல்லாஹ்வையும், தூதரையும் வழிப்படுகின்றாரோ அவர்கள் அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன் இருப்பார்கள்: நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீதுகள் மற்றும் நல்லடியார்கள் – அவர்கள் எத்துனை சிறந்த தோழர்கள்!"_ [அல்குர்ஆன், 4:69]

ஆகவே, நேர்வழி என்பது நமது நபிமார்கள், சித்தீகீன்கள் (உண்மையாளர்கள்), ஷுஹதா (ஷஹீதுகள்) மற்றும் அவ்லியா-உல்லாஹ் (அல்லாஹ்வின் நேசர்கள்) ஆகியோரின் வழியாகும்.

மேலும், கலிமா தய்யிபாவிலிருந்து நாம் அறிகிறோம்: உண்மையை உறுதிப்படுத்துவதற்கு முன் பொய்மையை மறுப்பது அவசியம். கலிமா ஷரீஃபில் நாம் முதலில் அறிவிக்கிறோம்:

லா இலாஹ:
"இறைவன் இல்லை (பொய்யான/வேறு தெய்வம் இல்லை),"

பின்னர் உறுதிப்படுத்தி கூறுகிறோம்,

இல்லல்லாஹ்:
"அல்லாஹ்வே (உண்மையான இறைவன்)"

ஆகவே, உம்மத்தை அழிவுக்கு உள்ளாக்கியவர்களின் பொய்யான நம்பிக்கைகளை மறுப்பதன் முக்கியத்துவம் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கும் அவசியமானது, தன்னை அதன் தீமைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும், இஸ்லாமின் உண்மையை உண்மையாக உறுதிப்படுத்துவதற்காகவும்.

( தொடரும்)