Thursday, 27 November 2025

யார் இந்த வஹாபிகள்

இமாமே அஹ்லேசுன்னத் இமாம் அஹ்மத் ரிழா கான் அல்-ஹனஃபீ ரحمه الله [மறைவு: 1340 ஹிஜ்ரீ] அவர்கள் தமது «ஃபதாவா அல்-ஹரமைன்» என்ற நூலில் கூறுகிறார்கள்:
“வஹ்ஹாபிகளைப் பொறுத்தவரை அவர்கள் வழிகெட்ட ஒரு கூட்டத்தார் . அவர்களைக் காஃபிர்கள் என்று அறிவிக்கும் பல நூல்கள் — அரபி மொழியிலும் மற்ற மொழிகளிலும் — தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எமது ஹதீஸ் ஆசானும், எமது எஜமானும், ஆலிம் ஷெய்கு ஸெய்யது அஹ்மத் இப்னு ஸைனி தஹ்லான் அல்-மக்கீ — அல்லாஹ் அவர்களின் ரகசியத்தைப் பரிசுத்தமாக்குவானாக — எழுதிய «அத்-துரர் அஸ்-சனிய்யா ஃபில்-ரத்தி அலல்-வஹ்ஹாபிய்யா» என்ற நூலும் ஒன்றாகும்.

அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட மிகச் சிறந்த வார்த்தை, மதீனத்துல் முனவ்வராவின் முஃப்தியான மவ்லானா அபூ ஸுத் ( رَحِمَهُ ٱللَّٰهُ )  அவர்கள் கூறியதாகும்:

{ஷைத்தான் அவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டான்; அதனால் அல்லாஹ்வின் நினைவை அவர்கள் மறந்து விட்டார்கள். இவர்கள் தான் ஷைத்தானின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! ஷைத்தானின் கட்சியினர் தான் நஷ்டவாளிகள்»
 (திருக்குர்ஆன் 58:19)

— ஃபதாவா அல்-ஹரமைன் பி-ரஜ்ஃபி நத்வதில் மைன், பக்கம் 9, ஹகீகத் கிதாபேவி, துருக்கி பதிப்பு.

Wednesday, 26 November 2025

முஹத்திஸீன்களது வஸீலா

ஷெய்குல் இஸ்லாம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ  رَحِمَهُ ٱللَّٰهُ  மற்றும் இமாம் தஹபீ رَحِمَهُ ٱللَّٰهُ   ஆகிய இரு மகத்தான முஹத்திஸ்களும், ஹதீஸின் உஸூல்கள் மற்றும் அஸ்மாஉர்ரிஜால் அறிவின் அடிப்படையில் வலிமார்களிடம் உதவி கோருவது மற்றும் அவர்களை வஸீலா ஆக்குவது பற்றி விளக்கிய அகீதா (நம்பிக்கை) பின்வருமாறு:

ஹஜ்ரத் அபூ அலீ நைஷாபூரீ رَحِمَهُ ٱللَّٰهُ  (மறைவு: 349 ஹிஜ்ரீ) அவர்கள் கூறுகிறார்கள்:

“நான் மிகவும் கடுமையான கஷ்டத்திலும் துன்பத்திலும் இருந்தேன். அப்போது எனக்கு கனவில் அண்ணல் நபி ரசூலுல்லாஹ்  ﷺ அவர்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போது ஏந்தல் நபி  ﷺ  அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

‘யஹ்யா பின் யஹ்யா அவர்களின் கப்றிடம் செல், அங்கு நீ இஸ்திஃபாரும் (பாவமன்னிப்புக் கோருதலும்) செய், அவரை வஸீலாவாக வைத்து உதவி கோரு; அப்போது உன் கஷ்டம் நீங்கிவிடும்.’

நானும் அவ்வாறே செய்தேன்; மறுநாளே என் துன்பம் நீங்கிவிட்டது.”

( இமாம் யஹ்யா பின் யஹ்யா رَحِمَهُ ٱللَّٰهُ  அவர்களின் மறைவு : 226 ஹிஜ்ரீ)
ஆதார  நூல் 📕தஹ்தீபுத் தஹ்தீப், தொகுதி 4, பக்கம் 398

இப்போது எந்த வஹ்ஹாபியோ, தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினரோ அல்லது அஹ்லே ஹதீஸ் உடையவராவது இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ மற்றும் இமாம் தஹபீ ஆகியோரை கப்ரு வணக்கம் செய்பவர்கள்,ஷிர்க் செய்பவர்கள் ( நவூதுபில்லாஹ் ) என்று  ஃபத்வா கொடுக்கத் துணிவாரா?


Thursday, 20 November 2025

இப்னு தைமிய்யா குறித்து இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ ‎رَحِمَهُ ٱللَّٰهُ

கல்லுடைந்தாலும்  சொல்லுடையாத இமாம் இப்னு ஹஜர் ஹைத்தமீ رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இப்னு தைமிய்யா பற்றி கூறியது:
இப்னு தைமிய்யா என்பவன் அவமானப்படுத்தப்பட்டவனாகவும், குருடனாகவும், செவிடனாகவும், இழிவானவனாகவும் ஆக்கப்பட்டவன் ஆவான். இதை அவரது காலத்து இமாம்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவன் பாசிக் , பொய்யன் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

யார் அவனது சுயரூபத்தைப்  பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாரோ, அவர் இமாம் அபூ ஹசன் அஸ் ஸுப்கீ அல்-முஜ்தஹித் رَحِمَهُ ٱللَّٰهُ அவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். அவரது இமாமத், மகத்துவம், இஜ்திஹாத் அந்தஸ்து ஆகியவற்றில் ஒருமித்த கருத்து உள்ளது. 

மேலும் அவரது மகனார் இமாம் தாஜுத்தீன் அஸ் ஸுப்கீ, ஷைகுல் இஸ்லாம் இஸ்ஸு பின் ஜமாஹ் மற்றும் அவரது காலத்து ஷாஃபிஈ, மாலிகீ, ஹனஃபீ உலமாக்களின் நூல்களையும் படிக்க வேண்டும்.

இப்னு தைமிய்யா பிந்தைய சூஃபிகளுக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை; அவன் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா உமர் இப்னு அல்ஃகத்தாப் رضي الله عنه மற்றும் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீ தாலிப்   كرم الله وجهه ஆகியோருக்கும் எதிராக ஆட்சேபனை தெரிவித்தான்.

சுருக்கமாகச் சொல்வதானால்: அவனுடைய எழுத்துகளுக்கு எந்த மதிப்பும் இல்லை; மாறாக, அவை குப்பையில் வீசப்பட வேண்டியவை. அவனைப் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டியது என்னவென்றால், அவன் ஒரு பித்அத் செய்தவன் , வழிகெட்டவன், அறியாதவன், ஃகுலுவ் (அளவு கடந்து போவது) செய்தவன் ஆவான். அல்லாஹ் அவனுக்கு தனது நீதியின்படி கைமாறு செய்வானாக! அவனுடைய நம்பிக்கைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.

ஆதார நூல் 📕 : அல்-ஃபதாவா அல்-ஹதீஸிய்யா, இப்னு ஹஜர் அல்-ஹைதமீ رَحِمَهُ ٱللَّٰهُ , பக்கம் 114-115

Saturday, 15 November 2025

வஹாபிகளைப் பற்றி இமாம் இப்னு ஆபிதீன்

ஸுல்தானுல் உலமா இமாம் இப்னு ஆபிதீன் ஷாமி رَحِمَهُ ٱللَّٰهُ அவர்கள் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி பற்றி:

“எமது காலத்தில் நஜ்திலிருந்து தோன்றிய இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றுபவர்களிடம் இது நிகழ்ந்தது போன்று; அவர்கள் இரு புனித ஹரம்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அவர்கள் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டனர், ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் முஸ்லிம்களல்ல என்றும், தமது நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பவர்கள் ஷிர்க்கு (  இணைவைப்பவர்கள் ) செய்பவர்கள் என்றும் நம்பினர். 

இதனால் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தில் இருந்தவர்களையும், அவர்களது அறிஞர்களையும் கொல்வது ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என்று கருதினர்; இறுதியில் அல்லாஹ் மிக உயர்ந்தவன் அவர்களது வலிமையையும் ஆற்றலையும் அழித்தான்.”
[📕 ரத்துல் முஹ்தார், இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பின்பற்றுபவர்கள் பற்றிய அத்தியாயம், நமது காலத்தின் காரிஜிய்யூன்]