இமாமே அஹ்லேசுன்னத் இமாம் அஹ்மத் ரிழா கான் அல்-ஹனஃபீ ரحمه الله [மறைவு: 1340 ஹிஜ்ரீ] அவர்கள் தமது «ஃபதாவா அல்-ஹரமைன்» என்ற நூலில் கூறுகிறார்கள்:
“வஹ்ஹாபிகளைப் பொறுத்தவரை அவர்கள் வழிகெட்ட ஒரு கூட்டத்தார் . அவர்களைக் காஃபிர்கள் என்று அறிவிக்கும் பல நூல்கள் — அரபி மொழியிலும் மற்ற மொழிகளிலும் — தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எமது ஹதீஸ் ஆசானும், எமது எஜமானும், ஆலிம் ஷெய்கு ஸெய்யது அஹ்மத் இப்னு ஸைனி தஹ்லான் அல்-மக்கீ — அல்லாஹ் அவர்களின் ரகசியத்தைப் பரிசுத்தமாக்குவானாக — எழுதிய «அத்-துரர் அஸ்-சனிய்யா ஃபில்-ரத்தி அலல்-வஹ்ஹாபிய்யா» என்ற நூலும் ஒன்றாகும்.
அவர்களைப் பற்றி சொல்லப்பட்ட மிகச் சிறந்த வார்த்தை, மதீனத்துல் முனவ்வராவின் முஃப்தியான மவ்லானா அபூ ஸுத் ( رَحِمَهُ ٱللَّٰهُ ) அவர்கள் கூறியதாகும்:
{ஷைத்தான் அவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டான்; அதனால் அல்லாஹ்வின் நினைவை அவர்கள் மறந்து விட்டார்கள். இவர்கள் தான் ஷைத்தானின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! ஷைத்தானின் கட்சியினர் தான் நஷ்டவாளிகள்»
(திருக்குர்ஆன் 58:19)
— ஃபதாவா அல்-ஹரமைன் பி-ரஜ்ஃபி நத்வதில் மைன், பக்கம் 9, ஹகீகத் கிதாபேவி, துருக்கி பதிப்பு.