இத்தனை ஆதாரங்களை கொடுத்த பின்பும் சவூதி வஹாபிகள் தங்களது பெரும் ஹதீத் அறிஞர் (?) என்று மார்தட்டும் நஸீருத்தீன் அல்பானி தமது தஹ்ரீகுல் மஸாஜித் என்னும் நூலின் ,பக்கம் 101,102 ல் தமக்கே உரிய பிறவி குணத்தை கொண்டு குறை கூறுகிறார் . அதில் அவர் மேற்கண்ட நபிமொழியை நம்பிக்கைக்குரிய ஹதீத் கலை வல்லுநர்கள் யாருமே இது நம்பத்தகுந்த ஒன்றெனக் கூறவில்லை எனவும் , இமாம் ஹைத்தமி رضي الله عنه அவர்கள் இது விஷயத்தில் தவறாக தீர்ப்பளித்து விட்டாரென்றும் கூறுகின்றார் . இவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் .
இவரைச் சேர்ந்தோருக்கு அதை எவ்வளவுதான் விளக்கினாலும் அது விழலுக்கு இரைத்த நீர் போல் தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை . ஆதலால் நல்லடியார்களுக்கு ஹதீதுக் கலையின் வல்லுநர்களான ஹாபிழ் இப்னு ஹஜரும் رضي الله عنه , ஹாபிழ் இமாம் ஹைத்தமியும் رضي الله عنه மஸ்ஜிதுல் கைபில் நபிமார்களின் மண்ணறைகள் இருந்ததாகச் சொல்லப்படும் ஹதீத் நம்பத்தகுந்த ஒன்றுதான் என்பதை ஆதாரப்படுத்துவதே போதுமானதாகும் . இதற்கு மேல் விரிவான விளக்கத்தை பார்க்க விரும்புவோர் கஷ்புஸ்ஸுதூர் அம்மா உஷ்கில மின் அஹ்காமில் குபூர் என்னும் நூலில் 123ம் பக்கத்திலிருந்து 136ஆம் பக்கம் வரை பார்க்க வேண்டுகின்றோம் .
ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்கள் மக்காவில் வைத்து மறைந்ததாகவும் , அவர்களது தயாரான ஹாஜரா அவர்களின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்னும் தகவலை 1999ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக ஸவூதி அரசால் பிரசுரிக்கப்பட்ட 'முஸீருல் வஜ்த் ஃபீ அன்ஸாபி முலூகி நஜ்த் ' என்னும் நூலின் 101வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்க ஒன்றாகும் .
இது மட்டுமா ! திங்களெம் கோமான் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஆயிரக்கணக்கான முஷ்ரிக்கீன்களின் மண்ணறைகளை கொண்ட மயானத்தின் மீதல்லவா கட்டப்படுள்ளது ?
பின்னர் கப்ருகள் இருக்கும் இடத்தில தொழுவது ஹராம் . அது முஷ்ரிக்கீன்களின் செயல் என்று சொல்லப்பட்டால் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அருமை துணைவியார் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக நபியவர்களின் புனித ரவ்லா ஷரீபை உள்ளடக்கிய தமது வீட்டில் தானே தொழுது வந்தார்கள் ? உங்களது குற்றச்சாடுகளுக்கு அவர்களும் தப்ப இயலாதே ? என்ன மோசடி !
இது மட்டுமா ! ஈருலக வேந்தரான அவர்களின் ஈரல் குலை எனப் பேசப்படும் சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியான அன்னை பாத்திமா رضي الله عنها அவர்கள்
"நபியவர்களின் சிறிய தந்தையான ஹழ்ரத் ஹம்ஸா رضي الله عنه அவர்ளின் கப்ரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தரிசிப்பதற்காக சென்று அங்கே தொழுவார்கள் . இன்னும் அழுவார்கள் " என்றும் சொல்லப்படுகின்றதே !
[ நூல் - முஸ்தத்ரக் , 1-533]
இந்த ஹதீதை அறிவித்தவர்களை இமாம் தஹபி முன்கர் ஜித்தன் என்கின்றனர் . ஆதலால் கப்ரடியில் , கப்ருகள் உள்ள இடத்தில் தொழுவது கூடாதெனில் மீறித் தொழுபவர்கள் முஷ்ரிக் எனில் , அன்னை பாத்திமாவுமா ..? நவூது பில்லாஹ் !
பகுத்தறிவற்ற மிருகங்களை விட கேடு கெட்டவர்கள் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் ஏன் செய்து கொண்டிருக்கிண்றீர்கள் ?
இதைவிட இனிமையான சந்தர்ப்பம் கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இப்போதாவது கலிமாவின் கருத்தை உணர்ந்து இஸ்லாத்தை அழிக்க முனையும் யூத , கிறிஸ்தவர்களோடு சமர் செய்யும் நாளை எதிர்பாருங்கள் .
அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் பலா பலன்களை விட கோடான கோடி மேன்மைகுரிய பலன்கள் உங்களை படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்விடம் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து இனியாவது செயல்படுங்கள் . நீங்களெல்லாம் நல்லடியார்களாக மாறிட அல்லாஹ்வின் அருமை தூதரான முஹம்மத் முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களிடம் மனமாற உள்ளமுருகிக் கேட்கின்றோம் . அல்லாஹு வரஸுலுஹு அஃலம் .
எனவே ஒரேயொரு கப்ரை உள்ளடக்கியது மட்டுமல்ல .சொற்ப நபர்களை கொண்ட பல்லைவாசல்களில் தொழுபவர்கள் கூட அவர்கள் பார்வையில் முஷ்ரிக்குகள் எனில், அவர்களனைவரும் யார் என்பதை யோசித்து முடிவு செய்தால் அதற்கு பதில் கூறாமல் மவுனமாக இருந்திருக்கலாம் . அவ்வாறு இல்லையெனில் நாம் மூஃமின்களாக இருப்பதால் அவர்களின் குற்றச்சாட்டு அவர்களைத் தான் சாரும் என்னும் ஹதீதைக் கருத்தில் கொண்டு மவுனத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நினைக்கிறோம் .
" ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் நாயகம் அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள் ,நாங்கள் தாயிப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கப்ருக்கு அருகாமையில் சென்றோம் . அப்போது இது அபூ ரிகால் என்பருடைய கப்ராகும் என நபியவர்கள் கூறினார்கள் ". இவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரை சார்ந்தவராகும் .
[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா , 1-137 ]
இவரைச் சேர்ந்தோருக்கு அதை எவ்வளவுதான் விளக்கினாலும் அது விழலுக்கு இரைத்த நீர் போல் தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை . ஆதலால் நல்லடியார்களுக்கு ஹதீதுக் கலையின் வல்லுநர்களான ஹாபிழ் இப்னு ஹஜரும் رضي الله عنه , ஹாபிழ் இமாம் ஹைத்தமியும் رضي الله عنه மஸ்ஜிதுல் கைபில் நபிமார்களின் மண்ணறைகள் இருந்ததாகச் சொல்லப்படும் ஹதீத் நம்பத்தகுந்த ஒன்றுதான் என்பதை ஆதாரப்படுத்துவதே போதுமானதாகும் . இதற்கு மேல் விரிவான விளக்கத்தை பார்க்க விரும்புவோர் கஷ்புஸ்ஸுதூர் அம்மா உஷ்கில மின் அஹ்காமில் குபூர் என்னும் நூலில் 123ம் பக்கத்திலிருந்து 136ஆம் பக்கம் வரை பார்க்க வேண்டுகின்றோம் .
ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்கள் மக்காவில் வைத்து மறைந்ததாகவும் , அவர்களது தயாரான ஹாஜரா அவர்களின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்னும் தகவலை 1999ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக ஸவூதி அரசால் பிரசுரிக்கப்பட்ட 'முஸீருல் வஜ்த் ஃபீ அன்ஸாபி முலூகி நஜ்த் ' என்னும் நூலின் 101வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்க ஒன்றாகும் .
இது மட்டுமா ! திங்களெம் கோமான் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஆயிரக்கணக்கான முஷ்ரிக்கீன்களின் மண்ணறைகளை கொண்ட மயானத்தின் மீதல்லவா கட்டப்படுள்ளது ?
பின்னர் கப்ருகள் இருக்கும் இடத்தில தொழுவது ஹராம் . அது முஷ்ரிக்கீன்களின் செயல் என்று சொல்லப்பட்டால் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அருமை துணைவியார் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக நபியவர்களின் புனித ரவ்லா ஷரீபை உள்ளடக்கிய தமது வீட்டில் தானே தொழுது வந்தார்கள் ? உங்களது குற்றச்சாடுகளுக்கு அவர்களும் தப்ப இயலாதே ? என்ன மோசடி !
இது மட்டுமா ! ஈருலக வேந்தரான அவர்களின் ஈரல் குலை எனப் பேசப்படும் சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியான அன்னை பாத்திமா رضي الله عنها அவர்கள்
"நபியவர்களின் சிறிய தந்தையான ஹழ்ரத் ஹம்ஸா رضي الله عنه அவர்ளின் கப்ரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தரிசிப்பதற்காக சென்று அங்கே தொழுவார்கள் . இன்னும் அழுவார்கள் " என்றும் சொல்லப்படுகின்றதே !
[ நூல் - முஸ்தத்ரக் , 1-533]
இந்த ஹதீதை அறிவித்தவர்களை இமாம் தஹபி முன்கர் ஜித்தன் என்கின்றனர் . ஆதலால் கப்ரடியில் , கப்ருகள் உள்ள இடத்தில் தொழுவது கூடாதெனில் மீறித் தொழுபவர்கள் முஷ்ரிக் எனில் , அன்னை பாத்திமாவுமா ..? நவூது பில்லாஹ் !
பகுத்தறிவற்ற மிருகங்களை விட கேடு கெட்டவர்கள் செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் ஏன் செய்து கொண்டிருக்கிண்றீர்கள் ?
இதைவிட இனிமையான சந்தர்ப்பம் கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இப்போதாவது கலிமாவின் கருத்தை உணர்ந்து இஸ்லாத்தை அழிக்க முனையும் யூத , கிறிஸ்தவர்களோடு சமர் செய்யும் நாளை எதிர்பாருங்கள் .
அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் பலா பலன்களை விட கோடான கோடி மேன்மைகுரிய பலன்கள் உங்களை படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்விடம் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து இனியாவது செயல்படுங்கள் . நீங்களெல்லாம் நல்லடியார்களாக மாறிட அல்லாஹ்வின் அருமை தூதரான முஹம்மத் முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களிடம் மனமாற உள்ளமுருகிக் கேட்கின்றோம் . அல்லாஹு வரஸுலுஹு அஃலம் .
எனவே ஒரேயொரு கப்ரை உள்ளடக்கியது மட்டுமல்ல .சொற்ப நபர்களை கொண்ட பல்லைவாசல்களில் தொழுபவர்கள் கூட அவர்கள் பார்வையில் முஷ்ரிக்குகள் எனில், அவர்களனைவரும் யார் என்பதை யோசித்து முடிவு செய்தால் அதற்கு பதில் கூறாமல் மவுனமாக இருந்திருக்கலாம் . அவ்வாறு இல்லையெனில் நாம் மூஃமின்களாக இருப்பதால் அவர்களின் குற்றச்சாட்டு அவர்களைத் தான் சாரும் என்னும் ஹதீதைக் கருத்தில் கொண்டு மவுனத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நினைக்கிறோம் .
இனி கப்ருகள் கட்டப்படுத்தல் பற்றி எடுத்துக் காட்டப்படும் சில தகவல்களை இப்போது பார்ப்போம் .
" ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் நாயகம் அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள் ,நாங்கள் தாயிப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கப்ருக்கு அருகாமையில் சென்றோம் . அப்போது இது அபூ ரிகால் என்பருடைய கப்ராகும் என நபியவர்கள் கூறினார்கள் ". இவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரை சார்ந்தவராகும் .
[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா , 1-137 ]
" ஹழ்ரத் ஸெய்யிதினா இப்ராஹீம் عليه السلام ,ஹழ்ரத் ஸெய்யிதினா இஸ்ஹாக் عليه السلام,ஹழ்ரத் ஸெய்யிதினா யஃகூப் عليه السلام ஆகியோரின் கப்ருகள் நாலா புறங்களிலும் சூழப்பட்டதோர் இடத்தில் இருந்தது . அதைக் கட்டியவர் ஹழ்ரத் ஸெய்யிதினா தாவூத் عليه السلام அவர்களின் மைந்தரான ஹழ்ரத் ஸுலைமான் عليه السلام அவர்களாகும் . இந்த இடம் இப்போது அல் கலீல் என்னும் பெயரில் பிரபலமாக உள்ளது . இன்னும் இது பனீ இஸ்ரவேலர்களின் காலந்தொட்டு இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது " எனக் கூறி விட்டு ...
"அந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லையென்றாலும் அங்கே நபி இப்ராஹீம் عليه السلام அவர்களுடைய ,அல்லது அவர்களின் புதல்வர்களில் யாரேனும் ஒரு நபியுடைய கப்ரு இருந்தால் அதற்கு தரப்பட வேண்டிய மரியாதையையும் ,கண்ணியத்தையும் கொடுப்பதோடு அந்த இடத்தை யாரும் மிதித்து விடாமல் பாதுகாக்கவும் வேண்டும் "என்பதாகவும் கூறப்பட்டுள்ளது .
[ நூல் -அல் பிதாயா வந் நிஹாயா , 1-175 ]
இவ்விரு தகவல்களையும் நாம் எடுத்துக் காட்டும் பொழுது இந்த நஜ்திய கொள்கைவாதிகள் ,இவைகள் முன்னிருந்த சமுதாயத்தில் ஆகுமாக்கப்பட்டவைகளாக இருந்திருக்கலாம் . ஆனால் அதன்பின் அண்ணலெம் கோமான் அவர்களின் மார்க்கத்தில் மாற்றப்பட்டு விட்டதென கூறுகின்றனர் .
அவ்வாறாயின் அவை யாரால் எப்போது உடைக்கப்பட்டது என்பதையும் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும் . இவர்கள் விரும்பினால் ஃபுதூஹுஷ் ஷாம் என்னும் நூலையும் , இஹ்யாவுல் மக்பூர் ,பக்கம் 40 யையும் பார்க்கட்டும் . இன்னும் இது பற்றி இவர்களின் மூல வித்து இப்னு தைமிய்யா ....
"ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை குதூஸில் நபிமார்களது கப்ருகளின் மீது கட்டிடம் கட்டப்பட்டிருந்ததாகவும் , அதனுடைய வாயில்கள் மூடப்பட்டிருந்ததாகவும் " தமது அஸ் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் நூலில் பக்கம் 676ல் குறிப்பிட்டிருப்பதாக ' அல் வஹ்ஹாபிய்யா ஃபில் மீஸான் ' என்னும் நூலின் 69ஆம் பக்கத்திலும் , 'ரிஸாலா அல் அவ்ராகுல் பக்தாதியா ' என்னும் நூலின் 9ஆம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது .
இன்னும் இது குறித்து உலக வரலாற்றாசிரியர்களில் பிரபலமான இப்னு பதூதா அவர்கள் புனித பைத்துல் முகத்தஸுக்கு சென்ற போது மேற்குறிப்பிட்ட நபிமார்களின் கப்ருகளை தரிசித்ததாகவும் , அது பற்றி அங்கிருந்த அறிஞர்களிடம் கேட்டறிந்ததாகவும் தமது 'ரிஹ்லத் இப்னு பதூதா 'என்னும் நூலில் 1-74ல் கூறுகின்றார் .
இப்புனித ஸ்தலங்கள் எல்லாம் பாலஸ்தீனில் இருப்பதால் அவைகளை உலகிலுள்ளோர் யாரும் சென்று தரிசித்து விடக் கூடாதென்பதற்காகவும் , அங்கே வாழுகின்ற மக்கள் அவைகளை மதிப்பதாலுமே அந்த இடங்களெல்லாம் யூதர்களால் காப்பற்றப்பட்டு அம்மக்கள் சொல்லொனாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் .
இன்னும் இதற்கு பின்னால் இதை ஊக்குவித்துக் கொண்டிருப்போர் சவூதுடைய வம்சமும் , ஷைகு நஜ்தியுடைய வம்சமும் தான் என்பதை இஸ்லாமிய உலகம் அறியும் வரை வெற்றி என்பது அறவேயில்லை . மேலும் அல்பானி பாலஸ்தீனர்கள் அம்மண்ணை விட்டு ஹிஜ்ரத்துச் செய்வது அவர்கள் மீது கடமையாகும் என்று கூறுகிறார் என்றால் அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்கும் என்று எண்ணி பாருங்கள் .
அடுத்து இந்த ஷைகு நஜ்தியுடைய கொள்கைவாதிகள் , ஈராக்கை அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்கள் வெற்றி கொண்ட போது , ஸெய்யிதினா தானியால் நபி அவர்களுடைய கப்ரின் மீதிருந்த அடையாளங்களையெல்லாம் ஏன் அகற்றினார்கள் எனக் கேட்கின்றனர் .
கலீபா அவர்கள் அவ்வாறு செய்ததற்குரிய காரணம் இவர்களால் எடுத்துக் காட்டப்படும் ஒன்றல்ல என்பது ஒருபுறமிருக்க ,அது பாவமான காரியமென்றோ , இஸ்லாம் கப்ருகளின் மீது அடையாளம் இடப்படுவதை அங்கீகரிக்கவில்லை என்றோ , அதனால் தான் கலீபா அவர்கள் அகற்றினார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் இவர்கள் அதே கலீபா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தராவீஹுடைய தொழுகை இருபது ரக்அத்துகள் தானென்பதை ஏற்றுக் கொள்ளாததுடன் அவர்கள்தான் வழிகேட்டிற்குரிய வாசலை திறந்து வைத்தவர்கள் என்று கொஞ்சம் கூட நாகூசாமல் சொல்கிறார்களே !
வெகு விரைவில் அல்லாஹ்வுடைய தண்டனையை நீங்கள் அனுபவிக்கத் தான் போகின்றீர்கள் . ஆம் . தவ்பாவின் வாசல்படி அடைபடுவதற்குமுன் அண்ணல் நபி அவர்களின் தர்பாரில் ஆஜராகி மண்டியிட்டு நபியவர்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள் . அதன்பின் அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் . இல்லையேல் உங்களின் ஆடைகளோ பாஷையோ அலங்காரமோ ஒன்றுக்கும் உதவாது .
அடுத்து இவர்கள் கப்ருகளை இடிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரங்களில் ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு எடுத்துக் காட்டி, அதற்கு அவர்கள் தருகின்ற விளக்கம் சரியானது தானா என்பதைப் பார்ப்போம் . ஏனெனில் இந்த இடத்தில் அது மிக பொருத்தமாக இருக்கும் என்பதாலே ....
"அபுல் ஹய்யாஜ் அல் அஸதி என்பார் கூறுகிறார் : எந்த காரியத்தை செய்வதற்காக நாயகம் அவர்கள் என்னை அனுப்பினார்களோ அக்காரியத்திற்காக உம்மை நான் அனுப்பட்டுமா ? எனக் கேட்ட ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் ,உயர்ந்துள்ள கப்ருகளை சமப்படுத்துமாறும் , உருவச் சிலைகளை கண்டால் அவைகளை அழித்து விடுமாறும் சொன்னார்கள் ".
[ நூல் -ஸஹீஹ் முஸ்லீம் , கிதாபுல் ஜனாயிஸ் . ஸுனன் திர்மிதி , பாபு மாஜாஅ ஃபீ தஸ்வியத்தில் கப்ரி .ஸுனன் நஸாயீ -பாபு தஸ்வியத்தில் கப்ரி
]
இந்த ஹதீதில் இரு விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் . ஒன்று இதனுடைய அறிவிப்பாளர்கள் பற்றியது . இரண்டாவது இதனுடைய கருத்து பற்றியது . இதில் முதலாவது விஷயத்தில் எதிர்தரப்பார் கையாளும் அதே முறையை நாமும் கையாளுவதற்காக நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் சகோதரர்களிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் . ஏனெனில் அவர்களுடைய் முறையை கையாளுவதன் நோக்கம் உண்மையை கொண்டு வருவதேயாகும் .
அந்த வகையில் மேற்கண்ட ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் வகீஃ , ஸுஃப்யானுஸ் செளரி , ஹபீப் இப்னு அபீ தாபித் , அபூ வாயில் , அபுல் ஹய்யாஜ் அல் அஸதி போன்றோர் இடம் பெறுகின்றனர் . இவர்களைப் பற்றி ஷெய்குல் இஸ்லாம் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி رضي الله عنه அவர்கள் தமது 'தஹ்தீபுத் தஹ்தீப் ' என்னும் நூலில் , ......
ஹதீதுடைய அறிவிப்பாளர்களில் முதல் நபரான வகீஃ என்பவரை எடுத்துக் கொண்டால் ,...
" இவர் 500 ஹதீதுகளில் தவறு இழைத்துள்ளார் " என்பதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்களும் ...
"( வகீஃ ) ஹதீதுகளுக்கு பொருள் சொல்வதில் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் அல்லர் " என்று முஹம்மத் இப்னு நஸ்ருல் மரூஸி அவர்களும் பாகம் -11 ,பக்கம் - 111,114ல் கூறுகின்றனர் .
அடுத்து இரண்டாவது நபரான ஸுப்யானுஸ் ஸவ்ரியைப் பற்றி இப்னு முபாரக் அவர்கள்
"ஸுப்யான் அவர்கள் ஒரு ஹதீதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அந்த ஹதீதை அவர் யாரிடம் இருந்து பெற்றாரோ அவருடைய பெயரைச் சொல்லாமல் மறைத்து பேசிக் கொண்டிருந்தார் . அதுபோது நான் அங்கே செல்ல என்னை கண்டதும் அவரது முகம் வெட்கித்து போயிற்று " என்று பாகம் 4,பக்கம் 104ல் கூறுகின்றார் .
இதேபோல மூன்றாவது நபரான ஹபீப் இப்னு அபீ தாபித் என்பாரைப் பற்றி இப்னு ஹிப்பான் அவர்கள் ,
"யாரிடமிருந்து ஹதீதை பெற்றாரோ அவருடைய பெயரை சொல்லாமல் ,அவருக்கு மேலே உள்ளவரின் பெயரைச் சொல்லி அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதைப் போல் சொல்பவராகும் " என்று கூறுகின்றார் .
இன்னும் இவரைப் பற்றிதான் கித்தான் என்பார் "லா யுதாபஃ அலைஹி வலைஸத் பி மஹ்பூசதின் " என்பதாக பாகம் 2, பக்கம் 165ல் கூறுகின்றார் .
அதற்கடுத்து நான்காவது நபரான அபூ வாயில் என்பவர் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் மீது விரோதம் கொண்டவராக இருந்தார் என்பதாக அபுல் ஹதீதுக்கு சொந்தமான ஷரஹ் நஜ்ஹுல் பலாகாவில் கூறப்படுள்ளது .
அடுத்து ஐந்தாவது நபரான அபுல் ஹய்யாஜ் அல் அஸதி என்பார் ,ஹதீதுகளை நேரடியாக அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் கூறியதாக அறிவித்தவராகும் என்று கூறப்பட்டுள்ளது .
மேலும் ஸிஹாஹ் ஸித்தாக்களான அங்கீகரிக்கப்பட்ட புஹாரி , முஸ்லீம் ,திர்மிதி , இப்னு மாஜா ,நஸாயி , அபூ தாவூத் போன்ற கிரந்தங்களில் இவரால் அறிவிக்கப்பட்ட ஒரேயொரு ஹதீது மட்டும் கூறப்பட்டுள்ளது . இந்த வகையில் இவர் ஒரு நபிமொழி அறிவிப்பாளரே அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் . ஆதலால் மேற்கண்ட ஹதீதில் சந்தேகத்திற்கு இடமான ஒன்றைக் கொண்டு தீர்ப்பு சொல்வது கூடாது .
















