Saturday, 14 December 2019

முஹம்மத் பின் சவூத்

தனது நோக்கத்தை நிறைவேற்றி வைக்கும் ஒருவனை தேடி கண்டுபிடிக்கும் எண்ணத்தில் ஷைகு நஜ்தி தர்யிய்யா என்னும் ஊருக்கு பயணமானார் . இது ஹிஜ்ரி 1160 ல் நடந்த சம்பவமாகும் .அந்த ஊருக்கு போய் சேர்ந்த பொழுது அங்கே இருந்த தனது சிஷ்யர்களில் ஒருவனான அப்துல்லாஹ் இப்னு ஸுவைலிம் என்பானின் வீட்டுக்கு வந்தார் . இந்த ஊரின் அமீராக அப்போது இருந்தவர் தான் முஹம்மத் பின் சவுத் .

ஷைகின் வருகையைக் கண்டு அஞ்சிய சிஷ்யன் அவருடைய  உபதேசத்தால் சிறிது அமைதி பெற்றான் . ஷைகைப் பற்றி அமீரிடம் சொல்வதற்குரிய தைரியம் அவனுக்கு இல்லாததால் அமீருடைய சகோதரர்களான முஷாரி , ஸனிய்யான் ஆகிய இருவரிடமும் முதலில் சொன்னான் . அவ்விருவரும் அமீரின் மனைவிகளான மெளழா , மூழா பின்த்து  அபீ கஹ்தானிடம்  ஷைகு நஜ்தியைப் பற்றியும் ,அவருடைய திறமையை பற்றியும் சொல்ல ,தனது கணவர் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் இவர்தான் என்பதை தெரிந்து கொண்டவளாக தனது கணவனிடம் சென்று ,

" எழும் . இவர் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட அருட்கொடையாகும் . நீர் அவருக்கு உதவி செய்யும் . உமது இரு உலகப் பிரச்சனையும் தீர்ந்து விடும் என்றாள்  "  .

[ நூல் - முஹம்மத் பின் அப்துல் வஹாப் , பக்கம் - 34 ]


மனைவியின் சொல்லே மந்திரம் என்பது போல இப்னு சவூதும் அவரைப் பார்ப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் . இருவரும் தங்களின் காரியம் நிறைவேறுவதற்காக எடுத்த ஆயுதம் திருக்கலிமாவாகும் . இதனால் இவ்விருவரின் சுயரூபத்தை அறியாதவர்கள் இவர்களோடு கை சேர்ந்தனர் . இவர்களை புரிந்தவர்கள் தமது உயிரைக் கூட தியாகம் செய்யத் துணிந்தனர் . அப்போது இப்னு சவுத் ஷைகு நஜ்தியை நோக்கி ....


"பெரியவரே ! நீங்கள் சொன்ன கருத்துக்களனைத்தும் சந்தேகத்திற்கிடமின்றி அல்லாஹ் மற்றும் அவனுடைய மார்க்கம் தான் . ஆகையால் உமது கட்டளைக்கு உதவி செய்வதைக் கொண்டு உமது சொல்லுக்கு நாம் கட்டுப்படுகின்றோம் . உம்மை எதிர்ப்பவர்களோடு நாம் போர் புரிவோம் என்று சுபச்செய்தி கூறுகிறோம் . இருப்பினும் அதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு .

ஒன்று , உமக்கு நாம் உதவி செய்து போர்புரிந்து நாடுகள் கைப்பற்றப்பட்டால் எங்களை விட்டு நீர் போகக் கூடாது . எங்களுக்கு பதிலாக வேறு யாரையும் அரசராக நியமிக்கக் கூடாது .

இரண்டாவது ,  தர்யிய்யாவில் எனக்கு வரவேண்டிய சொத்துக்களை கைப்பற்றும் விஷயத்தில் என்னை தடுக்கக் கூடாது   என்றார் . "

அதைக் கேட்ட ஷைகு நஜ்தி ....


" கையைக் கொடு என்று சொல்ல , இப்னு சவூதும் தனது கையைக் கொடுக்க அதைப் பற்றி பிடித்த ஷைகு நஜ்தி , முதல் நிபந்தனை பிரகாரம் எனது இரத்தம் உமது இரத்தமாகும் .எனது தோல்வி உமது தோல்வியாகும் என்றார் . அடுத்து இரண்டாவது நிபந்தனை பிரகாரம் உமக்கு நீர் கற்பனை செய்து பார்க்க முடியாத சொத்துக்கள் எல்லாம் உம்மை வந்தடையும் என்றார் " இதனையடுத்து ஷைகு நஜ்தியின் கரத்தில் இப்னு சவூத் பைஅத்துச் செய்து கொடுத்தார் . இதன்பின் இப்னு சவூதின் அட்டூழியம்  ஆரம்பம் ஆயிற்று .

மேற்கண்டவாறு இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்ட போது ஷைகு நஜ்தியுடைய வயது 46 ஆகத்தான் இருந்தது . இதைத் தொடர்ந்து முதன் முதலாக இவர் ரியாதைக் கைப்பற்ற முயன்று இப்னு தவ்வாஸுக்கு எதிராக போர் தொடுத்தார் . இப்போர் சுமார் 30 ஆண்டுகள் வரை நீடித்தது . இறுதியில் இப்னு சவூதுடைய மைந்தன் அப்துல் அஜீஸுடைய காலத்தில் 1773ஆம் ஆண்டு ரியாத் கைப்பற்றப்பட்டது .

இப்னு சவூத் , தவ்வாஸுடன் போர் புரிந்து கொண்டிருந்த போதே ஷைகு நஜ்தியை கொல்ல வேண்டுமென்றும் இல்லையேல் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்றும் மடல் எழுதியவரின் பிரதேசமான அல் அஹ்ஸாவுடன் போரிட்டார் . அப்போரில் அந்த ஊரும் கைப்பற்றப்பட்டது .

இப்படி அவர் எதிபாராத அளவுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து  குவிந்து கொண்டிருப்பதைக் கண்ட அவரும் ,அவருடைய குடும்பத்தாரும் நஜ்தைச் சேர்ந்த மக்களும் இவையனைத்தும் நஜ்த் உடைய ஷைகால் தான் என்றெண்ணி அவரை பெரிதும் மதிக்க துவங்கினர் .

இது பற்றி மஹமூத் ஷுக்ரி என்பார் தமது தாரீக் நஜ்த் - அரபி நூலின்  119வது பக்கத்திலும்  , மஸ்வூத் ஆலிம் என்பார் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்னும் நூலின் 42வது பக்கத்திலும் கீழ்கண்டவாறு கூறுகின்றனர் ,


" சவூதுடைய குடும்பத்தார் எதைச் செய்தாலும் ஷைகைவர்கள் சொல்வதற்கொப்பவே செய்தனர் . நஜ்த் உடைய மக்கள் அருமை நாயகம் அவர்களுக்கு அவர்களது தோழர் பெருமக்கள் வழிப்பட்டதைப் போல வழிப்பட்டனர் . ஷைகை யாரேனும்  தப்பாகப் பேசினால் அவரை கொலையும் செய்தனர் . "

இன்னும் ,....

" சவூதும் ,அவருடைய குடும்பத்தாரும் ஷைகுன் நஜ்த் அவர்களின் காலடியில் தம்மை அர்ப்பணித்துவிட்டனர் . அவர்களுக்கு கிடைத்த இப்பாக்கியம் ஷைகவர்களின் செருப்புடைய பரக்கத்தால் கிடைத்ததென்று கருதினர் . முஹம்மத் இப்னு சவூதும் அவருடைய குடும்பத்தாரும் ஷைகவர்களின் ஆலோசனையின்றி எதையும் செய்வதில்லை . ஷைகைவர்களை உலகிலுள்ள எந்த பொருளின் தேவையுமற்ற மாபெரும் புண்ணியவானாக அவர்கள் கண்டார்கள் " .

இதே அடிப்படையில் தான் இன்று நம்முடைய நாட்டில் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் , இப்னு தைமிய்யாவையும்  எதிர்ப்போருக்கு ஹஜ்ஜுக்குக்குரிய விசா மறுக்கப்படுகின்றது . வஹ்ஹாபியக் கொள்கைகளை எதிர்ப்போருக்கு குத்பாக்கள் வழங்கப்படுவதில்லை . பள்ளிவாசல்களில் இருந்து விரட்டப்படுகின்றனர் .  சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களை அடிக்கவும் முற்படுவதோடு , சந்தர்ப்பம் கிடைத்தால் கொலையும் செய்வதோடு அவர்களால் மிரட்டப்படவும் செய்கின்றனர் .

அதன்பின் முஹம்மத் பின் சவூத் ஹிஜ்ரி 1179ல்  இறந்து போக ,அவருடைய மைந்தன் அப்துல் அஜீஸ் அதே ஆண்டு ஷைகுன் நஜ்தியுடைய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது .அப்துல் அஜீஸ் பின் சவூதிற்கு ,  முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் உடைய மகளை மணமுடித்து இரு குடும்பத்தாருக்கும் இரத்த பந்தமும் உண்டானது .

அப்துல்லாஹ் பின் சவூத் கைவரைந்த ஓவியம்  ,நூல் : முஹம்மத் அலி ஆட்சியில் எகிப்திய வரலாறு , 1823 

இவ்விரு குடும்பத்தாரால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சனை புண்ணிய பூமிகளான மக்கா முகர்ரமா ,மதீனா முனவ்வராவையும் விட்டு வைக்கவில்லை . அங்கேயும் அவர்கள் போர் தொடுத்தனர் . அவர்கள் விளைவித்த அராஜகங்கள் பற்றி  'அல் பஜ்ருஸ் ஸாதிக் 'என்னும் நூலின் 22ஆம் பக்கத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது ....


" முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபை பின்தொடர்ந்த வஹாபிகள் எனப்படுவோர் புரிந்த ஆகமோசமான கீழ்த்தரமான செயல்களில் ,அவர்கள் புனித தாயிப் நகரைச் சென்றடைந்த பொழுது நடத்தப்பட்ட கொடுங்கோன்மையாகும் . அங்கே அவர்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை ,ஆண்கள் முதல் பெண்கள் வரை பாகுபாடு பார்க்காமல் எல்லோரையும் கொன்று குவித்ததாகும் . தாயுடைய மடியில்  பாலருந்திக் கொண்டிருந்த குழந்தையை அத்தாயின் கண் முன்னாலேயே அறுத்தனர் .

குர்ஆனை ஓதும் ஒரு கூட்டத்தாரை கண்ட பொது அவர்களனைவரையும் கொலை செய்தனர் . இன்னும் கடைகளில் இருந்தவர்களையும் ,கடைத்தெருவில்  இருந்தவர்களையும் கொன்று குவித்தனர் . பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை கொஞ்சங்கூட ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்தனர் . திருமறை ,புஹாரி ,முஸ்லிம் போன்ற கிரந்தங்களையும் ,சட்டக் கிரந்தங்களையும் நடைபாதையில் பரப்பி அவைகளையெல்லாம் தங்களின் காலினால் மிதித்துக் கொண்டே சென்றனர் . ஒரு காகிதத்தைக் கூட அங்கிருந்தவர்களில் யாராலும் எடுக்க முடியவில்லை . இவையனைத்தும் சுமார் ஹிஜ்ரி 1217ல் நிகழ்ந்த சம்பவங்களாகும் . "

திங்களெம் கோமான் நபிகள் நாயகம்  صَلّى اللهُ عليهِ واٰله وسلّم
    அவர்களுக்கு தாயிப்வாசிகளால் அநீதம் இழைக்கப்பட்ட போது நபியவர்கள் , அவர்கள் செய்த  தவறை அவர்களே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்பார்கள் என்று கூறிய பூமியில் இவர்கள் எப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா !

    இன்னும் இப்படியெல்லாம் நடந்த உண்மை வரலாற்றை சொல்லும் பொழுது இவர்களை ஆதரிக்கும் திருட்டுக் கூட்டம் இவர்களால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் பொய்யானதாக இருக்குமாயின் 250 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இவர்களின் ஆட்சி அழிந்து போகாமல் மேலும் மேலும் விரிந்து கொண்டல்லவா இருக்கிறதென்று கேட்கின்றனர்  ?

    இதைவிட பைத்தியக்காரமான சிந்தனை வேறு ஏதாவது இருக்கு முடியுமா என்ன ? இவர்கள் சொல்வதைப் போல் இப்பூமியிலுள்ள பிற சமயவாதிகளை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் . மக்கள் தொகையிலும் ,ஆயுத பலத்திலும் ,பொருளாதாரத்திலும் உயர்ந்தவர்களாக இவர்கள் இப்போது இருப்பதாலும் அல்லாஹ்வை வணங்குபவர்களை விட அவனுக்கு மாறு செய்யும் இவர்கள் தான் மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக இவர்கள்தான் சத்தியத்தில் இருக்கிறார்கள் என்று சொல்வீர்களா என்ன ? ஒருவேளை இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள் . ஏனெனில் இவர்களுக்கு இவர்களின் மனோ இச்சை தானே இரட்சகன்  !

    அதன்றி காபிர்களால் முறியடிக்கப்பட  முடியாமல் அவர்களுக்கெல்லாம் பெரும் சவாலாக இருந்த உஸ்மானியாக்களின் ஆட்சி இவ்விரு குடும்பத்தாரால் தான் மண்ணோடு மண்ணாகிப் போனது . நஜ்த் உடைய ஷைகும் , இப்னு சவூதும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் இஸ்லாத்தை அளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளாகும் .

    அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீனக் கொள்கைதான் அதற்குரிய அணு ஆயுதம் என்பதாக ஆங்கிலேயர்களால் மத்திய கிழக்கு நாடுகளில் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட உளவாளி ஹம்ப்ரே என்பவர் கூறுகிறார் .

    அரபுலகின் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாசிரியரும் , விமர்சகருமாகிய பேராசிரியர் ஜலால் கிஸ்க் அவர்கள் தமது ம்  " சவூதியர்களும் ,இஸ்லாமியத் தீர்வு" எனும் நூலில் ஷைகுன் நஜ்தி இப்னு அப்துல் வஹ்ஹாபை ஒரு சமூகத் துரோகி என்று கூறுகிறார் . பிரித்தானியரின் பிடியில் சிக்கி மார்க்கத்திற்குப் புறம்பாக புரிந்த செயல்களனைத்தும் உளவாளி ஹென்றியின் டைரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதை இலங்கை ,காத்தான்குடி ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபிக் கல்லூரியின் ஆசிரியரும் ,இலங்கை முஸ்லீம் சேவை வரலாற்றில் ஓர் ஏடு புகழ் மவ்லவி எம் .ஹெச்.எம் .புஹாரி ஒத்துழைப்போடு எழுதப்பட்டு அல் ஹஸனிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் எம் .ஐ.எம் .அப்துல் லத்தீப் ஆலிம் அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்த " வஹாபிகளுக்கோர் மறுப்பு " என்னும் நூல் சுட்டிக் காட்டுகின்றது .

    இதுபற்றி விரிவான விஷயங்கள் "இஃதிராஃபாத் அல் ஜாஸுசுல் இங்கிலீசி "என்னும் அரபு நூலில் .அல்லது அதனுடைய கருத்துக்களைச் சுமந்துள்ள தமிழ்நாடு மஜ்லிஸுல் உலமாயே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் தின் செயலாளரும் , 'அஹ்லே ஸுன்னத் 'மாத இதழ் ஆசிரியருமான மவ்லானா மவ்லவி அல்ஹாபிழ் எப் .எம் .இப்ராஹீம் ரப்பானி ஹழ்ரத்  رحمه الله  அவர்களால் எழுதப்பட்ட " வஹாபியத் தோற்றம் " என்னும் நூல் பார்க்க வேண்டுகின்றோம் .     

    அன்று ஷைகு நஜ்தியுடைய குடும்பமும் , இப்னு சவூதுடைய குடும்பமும் இணைந்து உலகிலுள்ள முஸ்லிகளெல்லாம் முஷ்ரிக்குகள் என்றும் , கப்ருகளை முஸ்லிம்கள் வணங்குவதாகவும் பழிசுமத்தி கொன்று குவித்தனர் . அவர்களின் பொருட்களையெல்லாம் சூறையாடினர் . குப்பாக்களையும்     கப்ருகளையும் உடைத்து தரைமட்டமாக்கிய நிகழ்ச்சிகளையெல்லாம் உண்மையான முஸ்லீம் ஒருபோதும் மறக்க மாட்டான் . அன்று தொடங்கப்பட்ட இவர்களின் கொடுங்கோன்மை இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது .

    ஷைகு நஜ்த் உடைய குடும்பத்தாருக்கும் , சவூதுடைய குடும்பத்தாருக்கும் கப்ருகள் அழிக்கப்பட வேண்டும் , கப்ருகளுக்கு மரியாதை செய்வோர் அழிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் குறிக்கோளாகும் . அதேபோல் வல்லரசுகளுக்கு இஸ்லாம் அழிக்கப்பட வேண்டும் என்பது குறிக்கோளாகும் . இவ்விரு நோக்கத்திற்காகவும் அவர்களுடைய முன்னோடிகளால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ,தற்போது நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அதை உண்மைப்படுத்திக் கொண்டுள்ளது .

    அவ்வாறு இல்லையேல் உண்மை முஸ்லிகளான இவர்களுக்கு இஸ்லாமிய அரசான கிலாஃபத் ஆட்சியை அழிக்க துடித்துக் கொண்டிருந்த வல்லரசுகளோடு என்ன நட்புறவு ? அல்லாஹ்வின் நேசர்களான நபிமார்களிடமும் ,வலிமார்களிடமும் உதவி தேடுவதை ஷிர்க் என்று சொல்லும் இவர்கள் காபிர்களிடம் உதவி தேடலாமா ?

    இன்னும் இவர்களாக அப்புனித பூமியில் இருந்து அவர்களை வெளியேற்ற மாட்டார்கள் . ஆனால் ஒருநாள் அவர்கள் மட்டுமல்ல , இவர்களும் சேர்ந்து விரட்டி அடிக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மட்டும் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

    அத்துடன் யாரை இவர்கள் தங்களின் நண்பர்களாக கருதிக்கொண்டு அவர்களின் பாதுகாப்பில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ  அவர்களாலேயே , அவர்களின் ஆயுதத்தாலேயே இவர்களுக்கு பாதிப்பு ஏற்படப் போகின்றது என்பதை மட்டும் இவர்கள் மறக்காமல் இருந்தால் சரி . காலம் இன்னும் கடந்துவிடவில்லை . இப்போதாவது உண்மையை உணர்ந்து இஸ்லாத்தை பாதுகாக்க முன்வந்தால் சரி .

    இதுமட்டுமா ! இதுவரை இஸ்லாத்தின் முதல் கிப்லா புண்ணிய பூமியான பைத்துல் முகத்தஸ் உள்ள பலஸ்தீனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதற்குரிய காரணமும்  இந்த வல்லரசுகளுக்குப் பின்னால் இவ்விரு குடும்பத்தாரும் அதற்கு தூண்டுகோலாய் இருப்பது தான் . சொல்வதற்கு கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை நிலவரமாகும் . இதற்கான காரணத்தை நாம் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?


    Thursday, 28 November 2019

    புனித மதீனா முனவ்வராவின் விஸ்தரிப்பு

    88ஆம் ஆண்டு ரபீயுல் அவ்வல் மாதம் வலீதிடமிருந்து ஆளுநரான ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களுக்கு மடலொன்று வந்து சேர்ந்தது . அதில் ....

    புனித மஸ்ஜிதுன் நபவியை புணர் நிர்மாணம் செய்வதற்காக அங்குள்ள நாயகம் அவர்களின் துணைவியர்களின் வீடுகளையும் அம்மஸ்ஜிதோடு இணைத்து உள்ளடக்கி ஆக்குமாறு எழுதப்பட்டிருந்தது .

    உடனே முன்னர் கூறப்பட்ட பத்து அறிஞர்களையும் ,மதீனாவிலுள்ள மக்களையும் அழைத்து கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததைச் சொல்ல , அதுகேட்ட அவர்கள் அக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர் . அவ்வாறு செய்யக்கூடாதென எதிர்த்தனர் . அனைவருடைய எதிர்ப்புக்கு மத்தியிலும் கட்டுமானப் பணி துவக்கப்பட்டபோது நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த போது அழுவதைப் போல அவர்களெல்லாம் அழத் துவங்கினர் . ஏன் அழுதனர் ? எதற்காக மறுப்பு தெரிவித்தனர் ? புரியவில்லை அல்லவா ! இதோ அதற்கான காரணத்தை அவர்களே கூறுகின்றனர் ...



     "இப்போது இருப்பதைப் போலவே விட்டு விடுவதுதான் நல்லது . அப்போதுதான் ஹாஜிகளும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை தரிசிக்க வருவோரும் ,பிரயாணிகளும் அவைகளை காணும் பாக்கியம் பெற முடியும் . அத்துடன் அதைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள்வதற்குமுரிய வாய்ப்புண்டு எனக் கூறினர் . "

    [ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம்  -9, பக்கம் - 74 . அல் ஹுஜுராதுஷ் ஷரீபா , பக்கம் - 189 ] 

    அப்போது ஹழ்ரத் ஸயீத் பின் முஸைய்யப் رضي الله عنه அவர்கள் பள்ளியின் உள்பகுதியில் நபியவர்களின் ரவ்லா ஷரீபை உள்ளடக்கப்படுவதை எதிர்த்தார்களென்று சொல்லப்படுகின்றது . இவர்கள் கீல் , கால் , யுஹ்கா , ஹுகிய என்பதையெல்லாம்  எப்போது ஆதாரமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள் என்பதுதான் நமக்கு புரியவில்லை .

    இனி ஹழ்ரத் ஸயீத் பின் முஸைய்யப் رضي الله عنهஅவர்கள்  உண்மையில் அச்செயலை எதிர்த்தார்களெனில் அவரால் மஹ்தி என்று போற்றப்பட்ட ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنهஅவர்களுக்கு அது தெரியாமலா போய் விட்டது ? அத்துடன் அங்கே வாழ்ந்து கொண்டிருந்த அறிஞர்களாலும் , மக்களாலும் அப்பிரச்சினை குறித்த ஓர் பிரேரணை ஏன் கொண்டு வரப்படாமல் விடுபட்டு போயிற்று ?

    மேலும் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டுக்கு முன்னால் மஸ்ஜிதுன் நபவி விஸ்தரிக்கப்பட்டதை குறித்து மேற்படி நாவல் பேசும்போது , அம்மஸ்ஜிதை அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்கள் மூன்றாவது முறையாகவும் , அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உஸ்மான் துன்னுரைன் رضي الله عنهஅவர்கள் நான்காவது முறையாகவும் ஹிஜ்ரி முப்பதாம் ஆண்டு வாக்கில் பெரிதுபடுத்தினார்கள் என்றும் , அப்போது அவ்விரு கலீஃபாக்களும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ரவ்லா ஷரீஃபை உள்ளடக்கிய அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்களின் வீட்டுப் பகுதியை விட்டு விட்டு ,  மற்ற பகுதிகள் மட்டும் விஸ்தரிக்கப்பட்டு விடப்பட்ட பகுதியை பள்ளியோடு சேர்க்கக் கூடாதென்றும் பிரகடனப்படுத்தப்பட்டதாக கூறுகின்றார் .

    முதலில் அப்படியொரு பிரகடனம் வெளியிடப்பட்டதற்குரிய  ஆதாரத்தை அவர் நமக்கு காட்ட வேண்டும்  . அடுத்து அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் ரவ்லா ஷரீபை உள்ளடக்கியது தான் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்களின்  வீடு என்பதை ஏற்றுக் கொள்பவர் நபியவர்களின் புனித கப்ரு இருந்த இடத்தில் தான் அன்னையவர்கள் சுமார் 50 வருடங்களாக வாழ்ந்து வந்தனர் என்பதையும் ஏற்றுக் கொள்கிறாரா ?

    இன்னும் அருமை நபியவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பொழுது அன்னையவர்கள் 18 வயதுடையவர்களாகத்தான் இருந்தார்கள் . இனி அன்னையவர்கள் இவ்வுலகை விட்டு மறையும் போது அவர்களின் வயது 67 ஆக இருந்தது .

    நமது நாயகம் அவர்களின் அருமை துணைவியார் அவர்கள் ஹிஜ்ரி 58 அல்லது 57ல் தான் இவ்வுலகை விட்டு மறைகிறார்கள் . இந்நிலையில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாயில் இறுதியாக ஹிஜ்ரி 30 ல் தான் புனர் நிர்மாணம் செய்யப்படுள்ளது . அதன்பின் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டில் வைத்துதான் மீண்டும் விஸ்தரிக்கப்படுகின்றது .

    இதில்  அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உமர் பாரூக் رضي الله عنه அவர்களும் , அமீருல் மூஃமினீன்  ஸெய்யிதினா உஸ்மான் துன்னுரைன் رضي الله عنه அவர்களும் பள்ளிவாயிலை புனர் நிர்மாணம் செய்தபோது நபியவர்களின் ரவ்லாவை உள்ளடக்கிய அறையில்தான் அன்னை ஆயிஷா رضي الله عنها அவர்கள் வாழ்ந்து வந்தனர் . இப்போது ரவ்லா ஷரீஃப் ஏன் பள்ளியோடு இணைக்கப்படவில்லை என்பது உங்களுக்கு புரிகின்றதா !

    அடுத்து கப்ரு உள்ள இடத்தில் தொழ வேண்டாம் என நாயகம் அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்ததாகக் கூறுகின்றார்களே ....

    "சுமார் ஐம்பதாண்டு காலம் வரை அன்னையவர்கள் கப்ரு உள்ள இடத்தில்தான் தொழுத்திருக்கிறார்கள் "  . இதற்கு என்ன பதில் தருவார்கள் ?

    [ நூல் - கஷ்ஃபுல்  இர்தியாப் ,பக்கம் - 341 ]

    பின்னும் அன்னையவர்கள் மட்டும்தான் கப்ரு உள்ள இடத்தில் தொழுது வந்தார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா   ? இல்லை .இல்லவே இல்லை . அண்ணல் நபியவர்களின் மறைவுக்குப் பின் வாழ்ந்த அனைத்து நபித்தோழர்களும் கப்ரு உள்ள இடத்தில்தான் தொழுது வந்தார்கள் .

    இனி கப்ரு ஜியாரத் உள்ள பள்ளியில் தொழக்கூடாதெனில் , நபித்தோழர்கள் அனைவருடைய தொழுகையும் கூடாதென தான் சொல்ல வேண்டும் .இன்றும்  பல பள்ளிகளில் எப்படி ஒரே வளாகத்தில் பள்ளிவாயிலோடு கப்ருகள் இணைக்கப்பட்டுள்ளதோ அதேபோலத்தான் ஹிஜ்ரி 88ஆம் ஆண்டு வரை நாயகம் அவர்களின் ரவ்லா ஷரீஃபும் பள்ளிவாயிலோடு குறுக்கே ஒரு சுவரை கொண்டு இணைந்திருந்தது .

    ஹிஜ்ரி 88ல் வலீதுடைய ஆட்சியின் கீழ் ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்களது தலைமையின் கீழே மஸ்ஜிதுன் நபவி விஸ்தீரணம் செய்யப்பட்ட பொழுது ரவ்லா ஷரீஃப் பள்ளியின் உட்பகுதிக்குள் கொண்டு சேர்க்கப்பட்டது .

    மேலும் புராதனைச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கும் நீங்கள் பிறகு ஏன் அவைகளை முன்னோர்கள் உடைத்தார்கள் என வினவலாம் . இதில் உடைக்கப்பட்டவை அனைத்தும் நபியவர்களுக்கே அர்ப்பணிக்கப்பட்டது . அப்புனிதர்களால் அவ்வாறு செய்யப்பட்டதற்காக நாம் அல்லாஹ்வை புகழுகின்றோம் . இல்லையெனில் அசுத்தமான இவர்களுடைய கரங்கள் அல்லவா அதில் பட்டிருக்கும் !


    இப்போது சொல்லுங்கள் . மேற்படி நாவலாசிரியர் குர்ஆன் ,ஹதீதை ஆதாரமாக காட்ட தகுதியானவரா ? இஸ்லாமிய வரலாற்றை கூட தெரியாத இவரா கலாநிதி ? இவரும் ,இவருடைய மூதாதையரும் கேள்விப்படாத புதிய புதிய புதிய விளக்கத்தையெல்லாம் சொல்லும் இவர்கள் தஜ்ஜாலுடைய கூட்டத்தையல்லவா சேர்ந்தவர்கள் .  இவர் மட்டுமல்ல ? இவருடைய சகாக்களான சவூதியின் முப்திகள் சொன்னாலென்ன ? அதென்ன மார்க்கமாகி விடுமா ? இவர்கள் அனைவரும் இஸ்லாத்தின் ஆணிவேர் மீது வெந்நீர் ஊற்றி அதன் புனிதத்தன்மையை சுத்தமாகத் துடைத்தெறிய வந்த சியோனிசவாதிகளின் பொம்மைகள் . இன்னும் இவர்களுடைய தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோமாக !

    இனி  "நல்லடக்கம் செய்யப்பட்ட  இடம் சொந்த இடமாக இருக்கமாயின் அங்கே குப்பாக்களை கட்டிக் கொள்ளலாம் "  எனக் கூறுகிறார் இப்னு தைமிய்யயாவின் மாணவரான இமாம் இப்னுல் முஃப்லிஹ் رحمه الله அவர்கள் . இவரைக் குறித்து இப்னு கையிம்      கூறும்போது ,


    " இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்களின் மத்ஹபுக்குரிய சட்ட மேதைகளில்  இப்னுல் முஃப்லிஹை விட சிறந்த ஒருவரை நான் காணவில்லை "என்றார் .

    [ நூல் -  இஹ்யாவுல் மக்பூர் , பக்கம்  9 ] 

    குறிப்புக்கு: - நான்கு மத்ஹபுகளின் ஏகோபித்த முடிவு என்னவெனில் அசுத்தங்களை விட்டும் நீங்கியதாக மையவாடி இருக்குமாயின் அந்த இடத்தில் தொழலாம் . அத்தொழுகை நிறைவேறும் . அதற்கு மாறாக அசுத்தம் எந்த இடத்தில இருந்தாலும் அங்கே தொழப்படும் தொழுகை நிறைவேறாது .

    மேலும் நாம் கப்ருகளை கவுரவப்படுத்தி அவைகளுக்கு மரியாதை செய்வதை பாவமான காரியமென்றும் , ஸியாரத்துச் செய்வதற்காக பயணம் செய்வதை கூடாதென்றும் இவர்கள் கூறுகின்றனர் . மாறாக இதுபற்றி நபித்தோழர்கள் என்ன கூறுகிறார்களென்று பார்ப்போம் ,


    "ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுபதாயிரம் மலக்குகள் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களுடைய ரவ்லாவிற்கு வருகைதந்து தங்களின் இறக்கைகளால் நபியவர்களின் ரவ்லாவை சூழ்ந்தவர்களாக மாலைவரை நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கின்றனர் . மாலையானதும் அவர்கள் வானத்திற்குச் செல்ல , அவர்களைப் போன்ற எண்ணிக்கையைக் கொண்ட வேறு மலக்குகள் வானத்திலிருந்து ரவ்லாவை நோக்கி வருகை தந்து காலைவரை ஸலவாத்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் .இந்நிலை நபியவர்கள் தமது கப்ரிலிருந்து   எழுப்பப்படும் வரை நடந்து கொண்டிருக்கும் என்பதாக ஹழ்ரத் ஸெய்யிதினா கஃபுல் அஹ்பார் رضي الله عنه அவர்கள் அறிவிக்கின்றனர் "

    [ நூல் - ஸுனன் தாரமி , 1-44 ]

    இதற்குப் பிறகும் மாநபி அவர்களின் புனித மிகு கப்ரை    தரிசிப்பதற்காக பயணம் செய்வதை பாவமான ஒன்றென்றா இவர்கள் சொல்லப் போகின்றனர் ! பாருங்கள் , நபியவர்களின் ரவ்லாவை அல்லாஹ் வானவர்களைக் கொண்டல்லவா கவுரவப்படுத்துகின்றான் .   ஆனால் மனிதன் அதை பாவமான காரியமென்று சொல்கின்றான் . இதுதான் காலத்தின் கோலம் என்பதோ ! சரி . நாம் விஷயத்திற்கு வருவோம் .

    உஸ்மானாலும் கைவிடப்பட்டதால் ஷைகு நஜ்தி அங்குமிங்குமாக அலைந்தார் . தொடர்ந்து அவமரியாதையாக நடத்தப்பட்டதால் மிகவும் மனம் நொந்து போனார் . இந்நிலையில் அவரை அரவணைக்கவும் ,அவருடைய நோக்கத்திற்கு ஆதரவளித்து ஊக்கமளிக்கவும் படைபலமும் ,ஆயுதபலமும் கொண்ட ஒருவர் அவருக்கு சீக்கிரம் தேவைப்பட்டார் .

    தன்னிடம் அறிவிறிக்கின்றது . ஆனால் ஆயுதபலமோ , படைபலமோ இல்லையே என்று யோசித்தவராக ,அதற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது  இன்னொரு பக்கத்தில் வல்லரசுகளின் ஆயுத பலத்தோடு தமது காரியத்தை நிறைவேற்றக் கூடிய ஒரு அறிஞன் தனக்கு கிடைக்கவில்லையே என்று இன்னொருவன் யோசித்துக் கொண்டிருந்தான் . அவன்தான் நபியவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஷைத்தானின் இரண்டாவது கொம்பாகும் . அவன் ....

    Wednesday, 20 November 2019

    கொள்கை பிரச்சாரம் - 3

    அடுத்து மேற்கண்ட ஹதீதுக்கு அவர்களால் தரப்படும் விளக்கத்தில் அந்த ஹதீதில் உள்ள 'முஷ்ரிபூன்' மற்றும் 'ஸவ்வைதஹு ' என்னும் வாக்கியம் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும் . இதில் முஷ்ரிபூன் என்னும் வாக்கியம் உயரமான ஒரு பொருளுக்கு சொல்லப்பட்டாலும் கூட இது ஒட்டகத்தின் திமில் வடிவத்தின் உயரத்திற்கு மட்டுமே சொல்லப்படும் வாக்கியமாகும் .

    அடுத்து      ஸவ்வைதஹு என்னும் வாக்கியமானது ஸவ்வா எனும் மூலத்தில் இருந்து திரிந்த ஒன்றாகும் . இதற்கு சமம் , பரிபூரணம் என்பது அதற்குரிய பொருளாகும் . இவ்விரு வாக்கியத்தின் பொருளுக்குரிய அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது இதற்கு இப்படி விளக்கம் சொல்லலாம் ....

    1) அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه‎ அவர்கள் உயரமாக காணப்படும் கப்ருகளை பூமியோடு சமப்படுத்துமாறு அபுல் ஹய்யாஜை ஏவினார்கள் என்பது ஒருவகை  விளக்கமாகும் .   இது பொய்யான (பாத்திலான ) விளக்கமாகும் . ஏனெனில் ஸவ்வா என்னும் வாக்கியத்திற்கு உடைத்தல் என்னும் பொருளாகாது . அவ்வாறு பொருள் தரப்பட்ட வேண்டுமாயின் (பூமியுடன் ) என்னும் வாக்கியத்தை சேர்ந்து உபயோகப்பட்டிருக்க வேண்டும் . அடுத்து கப்ரு பூமியுடன் சமமாக ஆக்கப்பட வேண்டும் என்பதாக நம்முடைய அறிஞர் பெருமக்கள் நமக்கு கற்றுத் தரவில்லை .மாறாக ....


    "ஒரு சான் அளவுக்கு உயரமானதாக கப்ருடைய மேலேயுள்ள மண் உயர்த்தப்படிருக்க வேண்டும் . அதுதான் ஸுன்னத்தாகும் " என்பதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது . இதையொட்டித் தான் நாமும் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . அத்துடன் கப்ரு உயர்த்தப் பட்டதற்குரிய ஆதாரம் ஹதீதிலும் உள்ளது . ஆம் .கப்ரு சமதரையாக இருக்கக் கூடாதென்று தான் இஸ்லாம் கூறுகின்றது .

    2)  ஒட்டகத்துடைய திமில் வடிவத்தில் கூம்பையாக உயர்த்தப்பட்டிருக்கும் கப்ருடைய வடிவத்தை மாற்றி அவைகளை சமப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள்  என்பது இரண்டாவது விளக்கமாகும் .

    3) இந்த ஹதீதானது முஷ்ரிக்கீன்களுடைய விஷயத்தில் சொல்லப்பட்டதாகும் . ஆதலால் எந்த வகையிலும் இது நபிமார்கள் மற்றும் வலிமார்களின் கப்ருகள் மீது கட்டபட்டுள்ள குப்பாக்களை உடைத்து தரையோடு தரையாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

    ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه‎ அவர்களால் சொல்லப்பட்டதை சரியாக விளங்கிக் கொள்ளாமல் அதனுடைய ஆழம் புரியாமல் திட்டமிட்டு வேண்டுமென்றே இவர்கள் முஃமின்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் . இது இங்கே சுருக்கமாக சொல்லப்பட்ட நமது விளக்கமாகும் .  அனால் அதே நேரம் தேவையான நேரத்தில் விரிவாக விளக்குவோம் இன்ஷா அல்லாஹ் !

    கப்ருகள் கட்டப்பட்ட கூடாது . குப்பாக்கள் அமைக்கப்பட கூடாது .அவைகள் உடைத்து தரை மட்டமாக்கப் படவேண்டும் என்பதெல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தின் ஷரீஅத்து கற்றுத் தரும் ஒன்றல்ல . அதற்கு மாறாக கப்ருகள் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.நபிமார்கள் ,வலிமார்களின் கப்ருகளைச் சூழ சுவர்கள் அமைக்கப்பட்டு அவைகள் முகடுகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே ஷரீஅத்து தருகின்ற தீர்ப்பாகும் .

    ஒரு பெரிய குண்டை தூக்கி போடுவதாக யோசிக்கின்றீர்களா  ?  இதோ நாயகம் صلى الله عليه و سلم  அவர்கள் சொன்ன வார்த்தையை கூர்ந்து பாருங்கள் .


    " நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படும் இடத்தில் தான் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் "  என்று கூறுகின்றனர் .

    அவ்வாறாயின் நான்கு சுவர்களும் அதன் மீது முகடும் கொண்ட வீட்டுக்குள் தான் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நபியவர்கள் கூறுவதைக் கவனியுங்கள் .இதைத் தழுவி கண்மணி நாயகம் صلى الله عليه و سلم  அவர்களை அவ்வாறு நல்லடக்கம் செய்யவில்லையா ? கப்ருகளுக்கு முகடுகள் கட்டப்படக்கூடாது என்றிருந்தால் மேல் முகட்டை கொண்ட வீட்டுக்குள் இவ்வையகத்தின் வாழ்கை முடிவை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ?

    இதற்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லப்படுமாயின் அதன்பின் நபியவர்களின் தோழர் பெருமக்கள் அதை ஏன் விட்டு வைத்தார்கள் ? என்னும் கேள்விக்கெல்லாம் இவர்கள் பதில் தந்தாக வேண்டும் . ஆகையால் கப்ருகள் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே ஷரீஅத்தின் தீர்ப்பாகும் என்பதை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .

    அடுத்து கப்ரஸ்தானில் தொழுவது பற்றியும் , கப்ருள்ள பள்ளியில் தொழுவது பற்றியும் வேறு சில கருத்துக்களை இப்போது பார்ப்போம் . இங்கு நாம் மூன்று விஷயங்களை நமது ஆய்வுக்கு உட்படுத்துவோம் .

    1 .மையவாடியில் தொழுதல் :  அதாவது நாற்புறங்களிலும் கப்ருகளால் சூழப்பட்டுள்ள ஒரு இடத்தின் மத்தியில் கட்டிடமொன்றை அமைத்துக் கொண்டு தொழுதல் . அல்லது திரை ஏதுமில்லாமல் தொழுதல் .

    விசாலமான மையவாடியாக இருந்து அதற்குள் ஒரு இடம் மீதமாக இருந்து அவ்விடத்தில் ஒரு இடம் அமைக்கப்பட்டிருந்தால் அங்கே தொழுதல் .

    2.  கப்ரை உள்ளடக்கிய பள்ளியில் தொழுதல் : அதாவது பள்ளிவாயிலுக்கு பக்கத்தில் ,அல்லது பள்ளியின் முற்றத்தில் , அல்லது பள்ளியின் ஒரு பகுதியில் கப்ரு இருப்பதாகும் . அதை மையவாடி என்று சொல்லப்பட மாட்டாது . அன்றி மையவாடியில் தொழுவதைத்தான் கூடாதென்று ஹதீத் சொல்லிக் கொண்டிருக்கின்றது .

    3. கப்ரை முன்னோக்கி தொழுவதாகும் : அதாவது தனக்கு முன்னால் கப்ரை வைத்துக் கொண்டு அதை முன்னோக்கி ஸுஜூது செய்வதாகும் .

    முதலாவது மையவாடியில் தொழுதல் : 

    மண்ணறைகள் தோண்டப்பட்டிருந்தாலும் , மூடப்பட்டிருந்தாலும் அவைகள் மீது ஒரு விரிப்பை விரித்து தொழுவதை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் رحمه الله அவர்கள் ஹராம் என்றும் அத்தொழுகை பாத்திலாதென்றும் குறிப்பிடுகின்றார்கள் . இக்கருத்துக்கு .....



    "மையவாடி மற்றும் குளியலறை தவிர்த்த ஏனைய எல்லா இடங்களுமே மஸ்ஜிதாகும் என்ற ஹதீதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர் . "

    இங்கே மையவாடி தோண்டப்பட்டதாக மட்டுமே இருக்குமாயின் அங்கே தொழுவது ஹராமாகும் எனக் கூறுகின்றனர் இமாம் ஷாபிஈ رحمه الله அவர்கள் ,அன்றி மூடப்பட்டுள்ள கப்ரின் மீது தொழுவது வெறுக்கத்தக்க செயலாகும் என்றும் குறிப்பிடுகின்றனர் .

    மண்ணறைகள் தோண்டப்பட்டிருந்தாலும் ,மூடப்பட்டிருந்தாலும் அந்த இடத்தில் தொழுவது நல்லதல்ல . மாறாக வெறுக்கத்தக்க செயலாகும் எனக் கூறுகின்றனர் இமாம் அபூ ஹனீஃபா رحمه الله அவர்கள் . இதற்கு ....



    " எந்த இடத்தில் தொழுகை உன்னை வந்தடைந்தாலும் அவ்விடத்திலேயே தொழுது கொள் . அந்த இடம் மஸ்ஜிதாகும் என்னும் ஏந்தல் நபி அவர்களின் ஹதீதை ஆதாரமாகக் காட்டுகின்றனர் "

     [ நூற்கள்  -ஸஹீஹ்  புஹாரி ,முஸ்லீம் ]

    அடுத்து பொதுவாக மையவாடியில் தொழலாம் எனக் கூறுகின்றனர் இமாம் மாலிக் رحمه الله  அவர்கள் . இதற்கு ....



    "மஸ்ஜிதுன் நபவியை துப்பரவு செய்த ஏழை பெண்மணி  -அல்லது வாலிபன் இறந்து விடுகின்றனர் . நாயகம்  صلى الله عليه و سلم  அவர்கள் அவரைப் பற்றி விசாரிக்கின்றனர் . அப்போது அவர் இறந்து விட்டார் என சொல்லப்படுகின்றது . அதுகேட்ட நபி  صلى الله عليه و سلم  வர்கள் எனக்கு ஏன் சொல்லவில்லை என்றவர்கள் ( இதையும் சொல்ல வேண்டுமா என்ன எனக் கருதிக் கொண்டார் என்பதாக அறிவிப்பாளர் கூறுகின்றார் ) அவருடைய கப்ரை காட்டுங்கள் எனக் கூறிய நபியவர்கள் அந்த இடத்திற்குப் போய் சேர்ந்தவர்கள் அங்கே தொழுதபின் இந்த கப்ருகளனைத்தும் இருளால் சூழப்பட்டிருந்தது . என்னுடைய தொழுகையால் அல்லாஹ் அவர்களின் நிலையை ஒளியாக்கினான் என்றும் கூறியதை ஆதாரமாக காட்டுகின்றனர் "

    [ நூல் - ஸஹீஹ் முஸ்லீம் , இக்மால் ,பாகம் 3 ,பக்கம் 420 . ஷரஹ் நவவி ,பாகம் 7,பக்கம் 25 ]


    இனி மையவாடியில் தொழுவது குறித்து சொல்லப்பட்ட கருத்துக்களை பார்க்க விரும்புவோர் ஷரஹ் ஸுனன்  இப்னு மாஜா ,பாகம் -1,பக்கம்- 412 லும் , துஹ்பதுல் அஹ்வதி ஷரஹ் திர்மிதி ,பாகம் -2,பக்கம் -219லும் , ஆரிழதுல் அஹ்வதி ஷரஹ் திர்மிதி ,பாகம் - 3,பக்கம் - 113லும்  , பத்லுல் மஹ்ஜூத் ஷரஹ் அபீ தாவூத் ,பாகம் -3,பக்கம் 336லும் , அவ்னுல் மஃபூத் ஷரஹ் அபீ தாவூத் ,பாகம்- 2,பக்கம்- 112லும் பார்க்க வேண்டுகிறோம் .

    மேலும் இங்கே சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும் போது மையவாடியில் கப்ரடியில் தொழலாம் என்பது தெளிவாகிறது . இன்னும் மையவாடியில் தொழக்கூடாதென்னும் ஹதீதை இமாம் திர்மிதி  رحمه الله முர்ஸலானது எனக் கூறுகின்றனர் . அத்துடன் பூமி முழுவதும்    எனக்கு மஸ்ஜிதாக ஆக்கித் தரப்பட்டுள்ளது என்னும் ஸஹீஹான ஹதீதுக்கும் இது மாற்றமாக இருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும் .

    இரண்டாவது கப்ருள்ள பள்ளியில் தொழுதல் : 

    கப்ரை உள்ளடக்கி பள்ளியில் தொழக்கூடாதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை . கப்ரு உள்ள இடத்தில் பள்ளி கட்டப்பட்டிருந்தாலும் சரியே . அல்லது அப்பள்ளி கட்டப்பட்ட பின்னர் பள்ளிக்குள் கப்ரு ஏற்படுத்தப்பட்டாலும் சரியே . பின்னும் கப்ரை உள்ளடக்கிய பள்ளியில் கூடாதென்பதற்காக எடுத்துக் காட்டப்படும் ஹதீஸ்கள் அவர்களின் அறியாமையை தான் நமக்கு புலப்படுத்துகின்றது . மாறாக அந்த ஹதீதுகளை புரிந்து கொள்வதற்குரிய திறமை அவர்களிடம் இல்லை என்பதும் இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது .

    மேலும் கப்ருகள் உள்ள இடத்தில் தொழமுடியாதெனில் பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாக ஆக்கித் தரப்பட்டுள்ளது என்னும் ஹதீதுக்கொப்ப இறந்து போவோர் அனைவரையும் ஒன்று எரிக்க வேண்டும் ,அல்லது கடலில் வீசி எறியப்பட வேண்டும் . இப்படியொரு பத்வாவை இவர்கள் தந்தாலும் ஆச்சரியமில்லை .

    அடுத்து ஹதீதில் கூறப்பட்டுள்ள மஸாஜித் என்னும் வாக்கியத்தை ஒரு இடத்திற்குரிய பெயராகக் கொள்ள வேண்டுமாயின் ஹதீதானது ' லா தத்தகிதூ அலல்  குபூரி மசாஜித ' என்பதாக பதிவாகியிருக்க வேண்டும் . அப்படி இல்லாததால் அந்த வாக்கியத்தை மஸ்தர் மீமியாகத்தான் கணிக்கப்படும் . இதெல்லாம் இவர்களுக்கு புரியவா போகிறது .

    அடுத்து கப்ரை வணங்கும் எண்ணத்தில் அல்லது கப்ரை கிப்லாவாக ஏற்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் அதற்கு முன்னால் ஸுஜூது செய்வதாகும் . இதைத்தான் இவர்களால் எடுத்துக் காட்டப்படும் ஹதீதுகள் அனைத்தும் கூறுகின்றன .

    அவ்வாறின்றி வணக்கத்துடைய எண்ணமின்றி கிப்லாவாக ஆக்க வேண்டுமென்னும்     நிய்யத்  இன்றியும் திரையிடப் பட்ட நிலையில் ஒரு கப்ரு பள்ளிக்குள் இருக்குமாயின் அங்கே தொழுவதில் ஆட்சேபனை இல்லை . இதுதான் இஸ்லாம் நமக்கு கற்றுத் தரும் உண்மையாகும் . அதற்கு மாறாக மக்காவிலுள்ள இமாம் சொல்லிவிட்டார் என்பதற்காக அது வேதவாக்காக ஆகிவிடாது .

    அத்துடன் அவர் அரேபியர் என்பதற்காக   அவர் சொல்வதையெல்லாம் கேட்பதற்கு நாங்கள் என்ன ஜாஹிலியீன்கள் காலத்தவர்களா ? யூதர்கள் கூட அரபிதான் பேசுகின்றனர் . அதற்காக அவர்கள் குரானை ஓதுகின்றனர் என்றா சொல்ல முடியும் ?

    இனி கப்ரை உள்ளடக்கிய பள்ளியில் தொழுவது குறித்து எழுதப்பட்ட வஹாபிகளின் "வணக்கஸ்தலங்களும் ,அடக்கஸ்தலங்களும் " என்னும் நாவலில் (!) கதைக்குதவாத உப்பு சப்பற்ற வெறும் வாதங்கள் தான் உள்ளன . இன்னும் அந்த நாவலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் குர்ஆனையும் ,ஹதீதையும் கொஞ்சம்கூட விளங்கிக் கொள்ளாத தான்தோன்றித்தனமான அதே சமயம் சமுதாயத்தில் மிகக் கீழ்த்தரமான தரத்தைக் கொண்ட ஆலே ஷைகும் , ஆலே சவூதும் இணைந்து உருவாக்கிய வடிகட்டிய வழிகேடர்களால் சொல்லப்படும் வெறும் சொத்தைக் கருத்துக்களாகும் . இருந்த போதிலும் அக்கதை புத்தகத்தில் கூறப்பட்டுள்ள  , ஒரேயொரு கதையைப் பற்றி இப்போது நாம் பார்ப்போம் . அவர் கூறுகிறார் ,

    "அதன்பின் ஹிஜ்ரி 88வரை எந்த விஸ்தரிப்பு வேலையும்  நடைபெற வில்லை . 88க்குப்பின் வலீத் பின் அப்துல் மலிக் பள்ளியை விஸ்தரிப்பு செய்தார் . முன்னோர்களான ஸெய்யிதினா உமர் அவர்களும் , ஸெய்யிதினா உஸ்மான்  அவர்களும்  செய்யாததை இவர் செய்து நாயகம் அவர்கள் எதைக் குறித்து அஞ்சினார்களோ , சபித்தார்களோ , மரண வேளையில் கூட அடிக்கடி எச்சரித்தார்களோ அதை இவர் செய்து விட்டார் . இவர் செய்த பாதகத்தை அன்று இருந்த மிகப்பெரும் அறிஞரும் , தாபியீனுமான ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் அவர்கள் வன்மையாகக் கண்டித்தார்கள் .

    பள்ளி வேறாகவும் , கப்ரு வேறாகவும் இருந்ததை இவர் தான் ஒன்றாக இணைத்தார் . அன்றைய சூழ்நிலையில் நபித்தோழர்கள் யாரும் இருக்கவில்லை . மதீனாவில் அவ்வாறு இருந்திருப்பின் கண்டிப்பாக விஷயம் வேறாக இருந்திருக்கும் . ஆட்சியின் மமதையில் இவர் சமகாலத்தவர்களை சட்டை செய்யவில்லை . இதன் விபரீதமே இன்று இந்நிலை தோன்றுவதற்கு காரணமாகிவிட்டது . "
     

    அவர் என்ன கூறுகிறார் எனில் வலீத் பின் அப்துல் மலிக் நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் புனிதப் பள்ளிவாசலை விஸ்தரித்த போதுதான் நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரவ்லா ஷரீஃபை பள்ளியின் உட்பகுதியில் வந்து இணைத்தார் . இதோர் பாவமான காரியமாகும் . அப்போது அங்கிருந்த ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்கள் அச்செயலை வன்மையாக கண்டித்ததாகவும் , நபித்தோழர்கள் யாரும் அப்போது இல்லையென்றும் , இருந்திருந்தால் அப்படிப்பட்டதோர் நிலை ஏற்பட்டிருக்காதென்றும் ரத்தம் கொதித்துப் போகிறார் . இவரும் ஒரு கலாநிதியாம் !

    அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அருமை இஸ்லாமிய சகோதர்களே ! அல்லாஹ்வுடைய ரஸுலும்   நமது உயிரினும் உயிர் நாடியான மழ்ஹருல் அதம்மான   நாயகம் صلى الله عليه و سلم அவர்களால் சிறப்புக்குரிய காலங்கள் என உத்திரவாதமளிக்கப்ட்ட காலங்களைப் பற்றிய ஹதீது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான் . நபியவர்களால் சுபச்செய்தி தரப்பட்ட அப்புனிதமான காலத்தில் வாழ்ந்தவர் தான் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه‎ அவர்களாகும் . அத்துடன் இவர்கள் இரண்டாம் உமர் என்று போற்றப்பட்ட பெரியாருகும் .  இவருடைய தாயார் அமீருல் மூஃமினீன்   ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்  பாரூக் رضي الله عنه அவர்களின் புதல்வரின் புதல்வியாகும் . நமது நபியவர்களின் துணைவியர்களில் ஒருவரான அன்னை மைமூனா رضی اللہ عنھا அவர்கள் மறைந்த வருடமான ஹிஜ்ரி 63 ஆம் ஆண்டில் பிறந்தவர்களாகும் .

    அன்றிருந்த மிகப்பெரும் அறிஞரும் , தாபியீனுமான ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்கள்   வலீத் செய்த காரியத்தை வன்மையாக கண்டித்தார் என மேற்படி நாவலில் கூறப்பட்டுள்ளதல்லவா ? அதே ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்களிடம் ஒருவர் மஹ்தி எனப்படுபவர் யார் என்று கேட்டபோது , அதற்கவர் ....



    "நீர் மர்வானுடைய வீட்டுக்கு சென்றதுண்டா  என்று அவரிடம் கேட்க , அதற்கவர் ;இல்லையென்று சொல்ல , அதற்கந்த அறிஞர் முதலில் அங்கே சென்றுவா என்று சொன்னார்கள் . அந்த வீட்டுக்குச் சென்ற அவர் அங்கே மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த தலைவரைப் பார்த்துவிட்டு திரும்பி வந்தவர் , அங்கே மஹ்தி என்று சொல்லப்படும் யாரையும் நான் பார்க்கவில்லை என்று சொன்னார் . அதுகேட்ட  அறிஞர் ;  அங்கே கட்டிலில் அமர்ந்திருந்த மாவீரரைப் பார்த்தாயா எனக்கேட்க , அதற்கவர் ; ஆம் என்று சொல்ல ,அவர்தான் மஹ்தி என்று அறிஞர்  கூறினார் . அவர்தான் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه‎ அவர்களாகும்  . "

    [ நூல்  - தபகாத் இப்னி ஸஃத் , பாகம்  5 ,பக்கம் - 333 ]

    இன்னும் இதே  ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் رحمه الله அவர்கள் தான் ஹர்ராவுடைய நாட்களில் நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரவ்லா ஷரீபிலிருந்து பாங்கொலி கேட்டதை வைத்து தொழுகைக்குரிய நேரங்களை தெரிந்து கொண்டதாக கூறுகிறார் .இதை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா ? இவர்கள் பணத்திற்காகவும் ,பதவிக்காகவும் பசப்புகின்ற அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள் .

    மாபெரும் அறிஞர்களால் மஹ்தி என்று போற்றப்பட்ட ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ்  رضي الله عنه‎ அவர்கள் 25து வயதுடையோராக இருக்கும் போதுதான் மேற்படி நாவலில் சபிக்கப்பட்ட வலீத் பின் அப்துல் மலிக் அவரை புனித மதீனா முனவ்வராவின் அதிகாரியாக ஹிஜ்ரி 87ஆம் ஆண்டு நியமித்தார் . அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட பின் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ் رضي الله عنه அவர்கள் அவ்வூர் அறிஞர்களை எல்லாம் அழைத்து பின்வருமாறு உபதேசம் செய்தார் . அதாகிறது ......


    " அல்லாஹவை புகழந்த பின் நிச்சயமாக நான் உங்களை அழைத்ததெல்லாம் சத்தியத்தை நிலைநாட்ட நீங்கள் எல்லாம் எனக்கு உத்தசையாக இருக்க வேண்டும் . உங்களுடைய அபிப்பிராயம் இல்லாது நான் எதையும் செய்ய மாட்டேன் " என்று சொன்னார் . அந்த அறிஞர்கள் யார் தெரியுமா ? .....

    ஹழ்ரத் உர்வா பின் ஸுபைர் , ஹழ்ரத் உபைதுல்லாஹ் பின்  அப்துல்லாஹ் பின் உர்வா , ஹழ்ரத் அபூபக்கர் பின் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் , ஹழ்ரத் அபூபக்கர் பின் சுலைமான் பின் அபீ ஹத்மா , ஹழ்ரத் சுலைமான் பின் யஸார் , ஹழ்ரத்காஸிம் பின் முஹம்மத் , ஹழ்ரத் ஸாலிம் பின் அப்துல்லாஹ் , ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர் , ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ , ஹழ்ரத் காரிஜா பின் ஸைத் பின் தாபித் رضی اللہ عنھم போன்றோராகும் .

    [ நூல்  - தபகாத் இப்னி ஸஃத் , பாகம்  5 ,பக்கம் - 334  . அல் பிதாயா வன் நிஹாயா ,பாகம் 9, பக்கம் - 71 ]

    மதீனா முனவ்வராவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ்  رضي الله عنه‎ அவர்கள் ஹஜ்ஜுக்காக தயாராகின்றனர்



    "வலீத் பின் அப்துல் மலிக்கின் ஆட்சியின் கீழ் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ்  رضي الله عنه‎ அவர்கள் மதீனா முனவ்வராவின் அதிகாரியாக இருக்கும்போது புனித ஹஜ்ஜுப் பயணத்திற்காக தயாராகின்றனர் . அப்போது அங்கே வருகை தந்தது நபித்தோழரான ஹழ்ரத் ஸெய்யிதினா  அனஸ் பின் மாலிக் رضي الله عنه‎ அவர்கள்தான்  "  இன்னும்  ....



     " நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் பின்னால் தொழுவதைப் போன்ற ஓர் உணர்வை இந்த வாலிபரான  உமர் பின் அப்துல் அஜீஸ் உடன் தொழும்போது மட்டும் தான் நான் பெற்றுக் கொண்டேன் . அதன்றி வேறு யாரிடமும் அப்படிப்பட்டதோர் உணர்வை நான் பெறவில்லை எனக் கூறுகின்றனர்  ஹழ்ரத் ஸெய்யிதினா  அனஸ் பின் மாலிக் رضي الله عنه அவர்கள் ".

    இதில் ஹழ்ரத் ஸெய்யிதினா  அனஸ் பின் மாலிக் رضي الله عنه‎ அவர்களை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . நமது காருண்ய நபி صلى الله عليه و سلم அவர்களுக்கு பத்தாண்டு காலம் பணியாளராக ஊழியம் புரியும் நற்பாக்கியத்தை பெற்றவர்கள் . இவர்கள் ஹிஜ்ரி 93ல் பஸ்ராவில் வைத்து இறையடி சேர்ந்தனர் . இன்னும் இவர்களையன்றி ஹழ்ரத் ஸெய்யிதினா அபுத் துபைல் ஆமிர் பின் வாஸிலா رضي الله عنه‎ என்ற நபித்தோழரும் அக்காலத்தில் வாழ்ந்தவராகும் . இவர்கள் ஹிஜ்ரி 110ல் மக்கா முகர்ரமாவில் வைத்து இறையடி சேர்ந்தனர் . நபித்தோழர் பெருமக்களில் இறுதியாக  இவ்வுலகத்திற்கு பிரியாவிடை கொடுத்த தோழர்இவர்களே ஆகும் .


    [ நூல்  - அல் பிதாயா வன் நிஹாயா ,பாகம் 9, பக்கம் - 190 , அல் இஸ்தீஆப் , பாகம் -4 ,பக்கம் - 259 , அல் இஸாபா , உஸுதுல் காபா      ]

    இன்னும் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர் பின் அப்துல் அஜீஸ்  رضي الله عنه‎ அவர்களின் காலத்தில் மதீனா முனவ்வராவில் தாபியீன்களில் உள்ள மிகப்பெரும் சட்டக்கலை மேதைகள் எனப் போற்றப்பட்ட ஏழு நபர்கள் வாழ்ந்தனர் . அவர்கள் ...


    1 .ஹழ்ரத் ஸெய்யிதினா ஸயீத் பின் முஸய்யப்  رحمه الله

    2. ஹழ்ரத் ஸெய்யிதினா காஸிம் பின் முஹம்மத்  رحمه الله

    3. ஹழ்ரத் ஸெய்யிதினா உர்வா பின் ஸுபைர்  رحمه الله

    4. ஹழ்ரத் ஸெய்யிதினா காரிஜா பின் ஸைத்  رحمه الله

    5. ஹழ்ரத் ஸெய்யிதினா அபூ ஸல்மா பின் அப்துர் ரஹ்மான்  رحمه الله

    6. ஹழ்ரத் ஸெய்யிதினா உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உமர்  رحمه الله

    7. ஹழ்ரத் ஸெய்யிதினா ஸுலைமான் பின் யஸார்  رحمه الله

    ஆகியோர்களாகும் . அடுத்து நாயகம் அவர்களின் ரவ்லா ஷரீஃப் வலீதைக் கொண்டு பள்ளியின் உட்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது நபித்தோழர்களில் யாருமே இல்லை என்று மேற்படி நாவலின் ஆசாமி கதை அளப்பது உண்மையா என்ன ? யோசியுங்கள் ! 

    Sunday, 18 August 2019

    கொள்கை பிரச்சாரம் - 2

    இத்தனை ஆதாரங்களை கொடுத்த பின்பும் சவூதி வஹாபிகள் தங்களது பெரும் ஹதீத் அறிஞர்  (?)  என்று மார்தட்டும் நஸீருத்தீன் அல்பானி தமது தஹ்ரீகுல் மஸாஜித் என்னும் நூலின் ,பக்கம் 101,102 ல் தமக்கே உரிய பிறவி குணத்தை கொண்டு குறை கூறுகிறார் . அதில் அவர் மேற்கண்ட நபிமொழியை நம்பிக்கைக்குரிய  ஹதீத் கலை வல்லுநர்கள் யாருமே இது நம்பத்தகுந்த ஒன்றெனக் கூறவில்லை எனவும் , இமாம் ஹைத்தமி رضي الله عنه அவர்கள் இது விஷயத்தில் தவறாக தீர்ப்பளித்து விட்டாரென்றும் கூறுகின்றார் . இவரது குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் .

    இவரைச் சேர்ந்தோருக்கு அதை எவ்வளவுதான் விளக்கினாலும் அது விழலுக்கு இரைத்த நீர் போல் தான் முடியும் என்பதில் சந்தேகமில்லை . ஆதலால் நல்லடியார்களுக்கு ஹதீதுக் கலையின் வல்லுநர்களான ஹாபிழ் இப்னு ஹஜரும் رضي الله عنه , ஹாபிழ் இமாம் ஹைத்தமியும் رضي الله عنه மஸ்ஜிதுல் கைபில் நபிமார்களின் மண்ணறைகள் இருந்ததாகச் சொல்லப்படும் ஹதீத் நம்பத்தகுந்த ஒன்றுதான் என்பதை ஆதாரப்படுத்துவதே போதுமானதாகும் . இதற்கு மேல் விரிவான விளக்கத்தை பார்க்க விரும்புவோர் கஷ்புஸ்ஸுதூர் அம்மா உஷ்கில மின் அஹ்காமில் குபூர் என்னும் நூலில் 123ம் பக்கத்திலிருந்து 136ஆம் பக்கம் வரை பார்க்க வேண்டுகின்றோம் .

    ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلام அவர்கள் மக்காவில் வைத்து மறைந்ததாகவும் , அவர்களது தயாரான ஹாஜரா அவர்களின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்னும் தகவலை 1999ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக ஸவூதி அரசால் பிரசுரிக்கப்பட்ட 'முஸீருல்  வஜ்த்  ஃபீ  அன்ஸாபி முலூகி நஜ்த் ' என்னும் நூலின் 101வது பக்கத்தில்   குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்க ஒன்றாகும் .

    இது மட்டுமா ! திங்களெம் கோமான் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் மஸ்ஜிதுன் நபவி ஆயிரக்கணக்கான முஷ்ரிக்கீன்களின் மண்ணறைகளை கொண்ட மயானத்தின் மீதல்லவா கட்டப்படுள்ளது ?

    பின்னர் கப்ருகள் இருக்கும் இடத்தில தொழுவது ஹராம் . அது முஷ்ரிக்கீன்களின் செயல் என்று சொல்லப்பட்டால் முஹம்மது முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களின் அருமை துணைவியார் அன்னை ஆயிஷா ஸித்தீக்கா رضي الله عنها அவர்கள் சுமார் 50 ஆண்டுகளாக நபியவர்களின் புனித ரவ்லா ஷரீபை உள்ளடக்கிய தமது வீட்டில் தானே தொழுது வந்தார்கள் ? உங்களது குற்றச்சாடுகளுக்கு அவர்களும் தப்ப இயலாதே ? என்ன மோசடி !

    இது மட்டுமா ! ஈருலக வேந்தரான அவர்களின் ஈரல் குலை எனப் பேசப்படும் சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியான அன்னை பாத்திமா  رضي الله عنها அவர்கள்


    "நபியவர்களின் சிறிய தந்தையான ஹழ்ரத் ஹம்ஸா رضي الله عنه அவர்ளின் கப்ரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தரிசிப்பதற்காக சென்று அங்கே தொழுவார்கள் . இன்னும் அழுவார்கள் " என்றும் சொல்லப்படுகின்றதே !

    [ நூல் - முஸ்தத்ரக் , 1-533]

    இந்த ஹதீதை அறிவித்தவர்களை இமாம் தஹபி முன்கர் ஜித்தன் என்கின்றனர் . ஆதலால் கப்ரடியில் , கப்ருகள் உள்ள இடத்தில் தொழுவது கூடாதெனில் மீறித் தொழுபவர்கள் முஷ்ரிக் எனில் , அன்னை பாத்திமாவுமா ..? நவூது பில்லாஹ் !

    பகுத்தறிவற்ற மிருகங்களை விட கேடு கெட்டவர்கள்  செய்யும் வேலைகளையெல்லாம் நீங்கள் ஏன் செய்து கொண்டிருக்கிண்றீர்கள் ?
    இதைவிட இனிமையான சந்தர்ப்பம் கிடைக்குமா என்று உறுதியாக சொல்ல முடியாத நிலையில் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு இப்போதாவது கலிமாவின் கருத்தை உணர்ந்து இஸ்லாத்தை அழிக்க முனையும் யூத , கிறிஸ்தவர்களோடு சமர் செய்யும் நாளை எதிர்பாருங்கள் .

    அவர்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் பலா பலன்களை விட கோடான கோடி மேன்மைகுரிய    பலன்கள் உங்களை படைத்த இரட்சகனாகிய அல்லாஹ்விடம் உங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து இனியாவது செயல்படுங்கள் . நீங்களெல்லாம் நல்லடியார்களாக மாறிட அல்லாஹ்வின் அருமை தூதரான முஹம்மத் முஸ்தபா صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களிடம் மனமாற உள்ளமுருகிக் கேட்கின்றோம் . அல்லாஹு வரஸுலுஹு  அஃலம் .

    எனவே ஒரேயொரு கப்ரை உள்ளடக்கியது மட்டுமல்ல .சொற்ப நபர்களை கொண்ட பல்லைவாசல்களில் தொழுபவர்கள் கூட அவர்கள் பார்வையில் முஷ்ரிக்குகள் எனில், அவர்களனைவரும் யார் என்பதை யோசித்து முடிவு செய்தால்    அதற்கு பதில் கூறாமல் மவுனமாக இருந்திருக்கலாம் . அவ்வாறு இல்லையெனில் நாம் மூஃமின்களாக   இருப்பதால் அவர்களின் குற்றச்சாட்டு அவர்களைத் தான் சாரும் என்னும் ஹதீதைக் கருத்தில் கொண்டு மவுனத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று நினைக்கிறோம் .

    இனி கப்ருகள் கட்டப்படுத்தல் பற்றி எடுத்துக் காட்டப்படும் சில தகவல்களை இப்போது பார்ப்போம் . 



    " ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் رضي الله عنه அவர்கள் நாயகம் அவர்களைக் கொண்டு அறிவிக்கின்றார்கள் ,நாங்கள் தாயிப் பக்கமாகச் சென்று கொண்டிருக்கும் போது ஒரு கப்ருக்கு அருகாமையில் சென்றோம் . அப்போது இது அபூ ரிகால் என்பருடைய கப்ராகும் என நபியவர்கள் கூறினார்கள் ". இவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்பு வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரை சார்ந்தவராகும் .

    [ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா , 1-137 ]


    " ஹழ்ரத் ஸெய்யிதினா இப்ராஹீம் عليه السلام ,ஹழ்ரத் ஸெய்யிதினா இஸ்ஹாக் عليه السلام,ஹழ்ரத் ஸெய்யிதினா யஃகூப் عليه السلام ஆகியோரின் கப்ருகள் நாலா புறங்களிலும் சூழப்பட்டதோர் இடத்தில் இருந்தது . அதைக் கட்டியவர் ஹழ்ரத் ஸெய்யிதினா தாவூத் عليه السلام    அவர்களின் மைந்தரான ஹழ்ரத் ஸுலைமான் عليه السلام அவர்களாகும் . இந்த இடம் இப்போது அல் கலீல் என்னும் பெயரில் பிரபலமாக உள்ளது . இன்னும் இது பனீ இஸ்ரவேலர்களின் காலந்தொட்டு இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது " எனக் கூறி விட்டு ... 


    "அந்த இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது  என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லையென்றாலும் அங்கே நபி இப்ராஹீம் عليه السلام அவர்களுடைய ,அல்லது அவர்களின் புதல்வர்களில் யாரேனும் ஒரு நபியுடைய கப்ரு இருந்தால் அதற்கு தரப்பட வேண்டிய மரியாதையையும் ,கண்ணியத்தையும் கொடுப்பதோடு அந்த இடத்தை யாரும் மிதித்து விடாமல் பாதுகாக்கவும் வேண்டும் "என்பதாகவும் கூறப்பட்டுள்ளது .

    [ நூல்  -அல் பிதாயா வந் நிஹாயா , 1-175 ] 

    இவ்விரு தகவல்களையும் நாம் எடுத்துக் காட்டும் பொழுது இந்த நஜ்திய கொள்கைவாதிகள் ,இவைகள் முன்னிருந்த சமுதாயத்தில் ஆகுமாக்கப்பட்டவைகளாக இருந்திருக்கலாம் . ஆனால் அதன்பின் அண்ணலெம் கோமான் அவர்களின் மார்க்கத்தில் மாற்றப்பட்டு விட்டதென கூறுகின்றனர் . 

    அவ்வாறாயின் அவை யாரால் எப்போது உடைக்கப்பட்டது என்பதையும் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும் . இவர்கள் விரும்பினால்  ஃபுதூஹுஷ் ஷாம் என்னும் நூலையும் , இஹ்யாவுல் மக்பூர் ,பக்கம் 40 யையும் பார்க்கட்டும் . இன்னும் இது பற்றி  இவர்களின் மூல வித்து இப்னு தைமிய்யா ....

        
    "ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டு வரை குதூஸில் நபிமார்களது கப்ருகளின் மீது கட்டிடம் கட்டப்பட்டிருந்ததாகவும் , அதனுடைய வாயில்கள் மூடப்பட்டிருந்ததாகவும் " தமது அஸ் ஸிராத்துல் முஸ்தகீம் என்னும் நூலில் பக்கம் 676ல் குறிப்பிட்டிருப்பதாக  ' அல் வஹ்ஹாபிய்யா ஃபில்  மீஸான் ' என்னும் நூலின் 69ஆம் பக்கத்திலும் , 'ரிஸாலா   அல் அவ்ராகுல் பக்தாதியா ' என்னும் நூலின் 9ஆம் பக்கத்திலும் கூறப்பட்டுள்ளது .

    இன்னும் இது குறித்து உலக வரலாற்றாசிரியர்களில் பிரபலமான இப்னு பதூதா அவர்கள் புனித பைத்துல் முகத்தஸுக்கு சென்ற போது மேற்குறிப்பிட்ட நபிமார்களின் கப்ருகளை தரிசித்ததாகவும் , அது பற்றி அங்கிருந்த அறிஞர்களிடம் கேட்டறிந்ததாகவும் தமது 'ரிஹ்லத்  இப்னு பதூதா 'என்னும் நூலில் 1-74ல் கூறுகின்றார் . 

      இப்புனித ஸ்தலங்கள் எல்லாம் பாலஸ்தீனில் இருப்பதால் அவைகளை உலகிலுள்ளோர் யாரும் சென்று தரிசித்து விடக் கூடாதென்பதற்காகவும் , அங்கே வாழுகின்ற மக்கள் அவைகளை மதிப்பதாலுமே அந்த இடங்களெல்லாம் யூதர்களால் காப்பற்றப்பட்டு அம்மக்கள் சொல்லொனாத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் . 

    இன்னும் இதற்கு பின்னால் இதை ஊக்குவித்துக் கொண்டிருப்போர் சவூதுடைய வம்சமும் , ஷைகு நஜ்தியுடைய வம்சமும் தான் என்பதை இஸ்லாமிய உலகம் அறியும் வரை வெற்றி என்பது அறவேயில்லை . மேலும் அல்பானி பாலஸ்தீனர்கள் அம்மண்ணை விட்டு ஹிஜ்ரத்துச் செய்வது அவர்கள் மீது கடமையாகும் என்று  கூறுகிறார் என்றால் அவருக்கு எத்தனை துணிச்சல் இருக்கும் என்று எண்ணி பாருங்கள் . 

    அடுத்து இந்த ஷைகு நஜ்தியுடைய கொள்கைவாதிகள் , ஈராக்கை அமீருல் முஃமினீன் ஹழ்ரத் உமர் رضي الله عنه அவர்கள் வெற்றி கொண்ட போது , ஸெய்யிதினா தானியால் நபி அவர்களுடைய கப்ரின் மீதிருந்த அடையாளங்களையெல்லாம் ஏன் அகற்றினார்கள் எனக் கேட்கின்றனர் .

    கலீபா அவர்கள் அவ்வாறு செய்ததற்குரிய காரணம் இவர்களால் எடுத்துக் காட்டப்படும் ஒன்றல்ல என்பது ஒருபுறமிருக்க ,அது பாவமான காரியமென்றோ , இஸ்லாம் கப்ருகளின் மீது அடையாளம் இடப்படுவதை அங்கீகரிக்கவில்லை என்றோ , அதனால் தான் கலீபா அவர்கள் அகற்றினார்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் இவர்கள் அதே கலீபா அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தராவீஹுடைய தொழுகை இருபது ரக்அத்துகள் தானென்பதை ஏற்றுக் கொள்ளாததுடன் அவர்கள்தான் வழிகேட்டிற்குரிய வாசலை திறந்து வைத்தவர்கள் என்று கொஞ்சம் கூட நாகூசாமல் சொல்கிறார்களே ! 

    வெகு விரைவில் அல்லாஹ்வுடைய தண்டனையை நீங்கள் அனுபவிக்கத் தான் போகின்றீர்கள்  .  ஆம் . தவ்பாவின் வாசல்படி அடைபடுவதற்குமுன் அண்ணல் நபி அவர்களின் தர்பாரில் ஆஜராகி மண்டியிட்டு நபியவர்களிடம் முதலில் மன்னிப்பு கேளுங்கள் . அதன்பின் அவர்களுடைய  பொருட்டால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள் . இல்லையேல் உங்களின் ஆடைகளோ பாஷையோ அலங்காரமோ ஒன்றுக்கும் உதவாது . 

    அடுத்து இவர்கள் கப்ருகளை இடிக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரங்களில்  ஒரே ஒரு ஆதாரத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு எடுத்துக் காட்டி, அதற்கு அவர்கள் தருகின்ற விளக்கம் சரியானது தானா என்பதைப் பார்ப்போம் . ஏனெனில் இந்த இடத்தில் அது மிக பொருத்தமாக இருக்கும் என்பதாலே ....


    "அபுல் ஹய்யாஜ் அல் அஸதி என்பார் கூறுகிறார் :  எந்த காரியத்தை செய்வதற்காக நாயகம் அவர்கள் என்னை அனுப்பினார்களோ அக்காரியத்திற்காக உம்மை நான் அனுப்பட்டுமா ? எனக் கேட்ட ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் ,உயர்ந்துள்ள கப்ருகளை சமப்படுத்துமாறும் , உருவச் சிலைகளை கண்டால் அவைகளை அழித்து விடுமாறும் சொன்னார்கள் ". 

    [ நூல் -ஸஹீஹ் முஸ்லீம் , கிதாபுல் ஜனாயிஸ் . ஸுனன் திர்மிதி , பாபு மாஜாஅ ஃபீ தஸ்வியத்தில் கப்ரி .ஸுனன் நஸாயீ -பாபு  தஸ்வியத்தில் கப்ரி

    இந்த ஹதீதில் இரு விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் . ஒன்று இதனுடைய அறிவிப்பாளர்கள் பற்றியது . இரண்டாவது இதனுடைய கருத்து பற்றியது . இதில் முதலாவது விஷயத்தில் எதிர்தரப்பார் கையாளும் அதே முறையை நாமும் கையாளுவதற்காக நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் சகோதரர்களிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் . ஏனெனில் அவர்களுடைய் முறையை கையாளுவதன் நோக்கம் உண்மையை கொண்டு வருவதேயாகும் .

    அந்த வகையில் மேற்கண்ட ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் வகீஃ , ஸுஃப்யானுஸ் செளரி , ஹபீப் இப்னு அபீ தாபித் , அபூ வாயில் , அபுல் ஹய்யாஜ் அல் அஸதி போன்றோர் இடம் பெறுகின்றனர் . இவர்களைப் பற்றி ஷெய்குல் இஸ்லாம் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி رضي الله عنه அவர்கள் தமது  'தஹ்தீபுத் தஹ்தீப் ' என்னும் நூலில் , ......

    ஹதீதுடைய அறிவிப்பாளர்களில் முதல் நபரான    வகீஃ  என்பவரை எடுத்துக் கொண்டால் ,...

      " இவர் 500 ஹதீதுகளில் தவறு இழைத்துள்ளார் " என்பதாக இமாம் அஹ்மத் பின் ஹன்பல் رضي الله عنه அவர்களும் ...


    "( வகீஃ  )  ஹதீதுகளுக்கு பொருள் சொல்வதில் அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் அல்லர் "  என்று முஹம்மத் இப்னு நஸ்ருல் மரூஸி அவர்களும் பாகம் -11 ,பக்கம்  - 111,114ல் கூறுகின்றனர் .

    அடுத்து இரண்டாவது நபரான ஸுப்யானுஸ் ஸவ்ரியைப் பற்றி இப்னு முபாரக் அவர்கள் 

       
    "ஸுப்யான் அவர்கள் ஒரு ஹதீதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அந்த ஹதீதை அவர் யாரிடம் இருந்து பெற்றாரோ அவருடைய பெயரைச் சொல்லாமல் மறைத்து பேசிக் கொண்டிருந்தார் . அதுபோது நான் அங்கே செல்ல என்னை கண்டதும் அவரது முகம் வெட்கித்து போயிற்று " என்று பாகம் 4,பக்கம் 104ல் கூறுகின்றார் .

    இதேபோல மூன்றாவது நபரான ஹபீப் இப்னு அபீ தாபித் என்பாரைப் பற்றி இப்னு ஹிப்பான் அவர்கள் ,


    "யாரிடமிருந்து ஹதீதை பெற்றாரோ அவருடைய பெயரை சொல்லாமல் ,அவருக்கு மேலே உள்ளவரின் பெயரைச் சொல்லி அவரிடமிருந்து நேரடியாகக் கேட்டதைப் போல் சொல்பவராகும் " என்று கூறுகின்றார் .

    இன்னும் இவரைப் பற்றிதான்  கித்தான் என்பார் "லா யுதாபஃ அலைஹி வலைஸத் பி மஹ்பூசதின் " என்பதாக பாகம் 2, பக்கம் 165ல் கூறுகின்றார் .

    அதற்கடுத்து நான்காவது நபரான அபூ வாயில் என்பவர் அமீருல் முஃமினீன் ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள் மீது விரோதம் கொண்டவராக இருந்தார் என்பதாக அபுல் ஹதீதுக்கு சொந்தமான ஷரஹ் நஜ்ஹுல் பலாகாவில்   கூறப்படுள்ளது .

    அடுத்து ஐந்தாவது நபரான அபுல் ஹய்யாஜ் அல் அஸதி என்பார் ,ஹதீதுகளை நேரடியாக  அமீருல் முஃமினீன்    ஹழ்ரத் ஸெய்யிதினா அலீ இப்னு அபீதாலிப் رضي الله عنه அவர்கள்  கூறியதாக அறிவித்தவராகும் என்று கூறப்பட்டுள்ளது .

    மேலும் ஸிஹாஹ் ஸித்தாக்களான அங்கீகரிக்கப்பட்ட புஹாரி , முஸ்லீம் ,திர்மிதி , இப்னு மாஜா ,நஸாயி  , அபூ தாவூத் போன்ற கிரந்தங்களில் இவரால் அறிவிக்கப்பட்ட ஒரேயொரு ஹதீது மட்டும் கூறப்பட்டுள்ளது . இந்த வகையில் இவர் ஒரு நபிமொழி அறிவிப்பாளரே அல்ல என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம் . ஆதலால் மேற்கண்ட ஹதீதில் சந்தேகத்திற்கு இடமான ஒன்றைக் கொண்டு தீர்ப்பு சொல்வது கூடாது . 



    Sunday, 4 August 2019

    கொள்கை பிரச்சாரம் - 1

    கூண்டில் அடைபட்ட குருவி போல தந்தையின் காலத்தில் தனது கருத்துக்களை பகிரங்கமாக சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஷைகு நஜ்திக்கு தந்தையின் மரணம் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்தது . அந்த மகிழ்ச்சியில் அவரது கொள்கையை ஹுரைமலாவில் பகிரங்கமாக அறிவித்தார் . ஏற்கனவே இவருக்கும் ஊருக்கும் இடையே பூசல் ஏற்படும் போதெல்லாம் தந்தையின் முகத்துக்காக அவர் மீது கொண்டிருந்த மரியாதைக்காக சகித்துக் கொண்டிருந்த அம்மக்கள் இப்பொது அவரை கொல்ல வேண்டுமென   திட்டம் தீட்டினர் . இது தெரியவே ,இரவோடிரவாக சொந்த ஊரான உயைனாவிற்கு பயணமானார் .

    அவர் உயைனா வந்து சேர்ந்த போது உஸ்மான் பின் ஹம்த் இப்னு முஃமர் என்பவன் அந்த ஊரின் தலைவனாக இருந்தான் . அவன் அவரை வரவேற்று கண்ணியப்படுத்தினான் . அதைக் கண்ட அவர் தலைவனைப் பார்த்து ....


    " லா இலாஹா இல்லல்லாஹ்   எனும் கலிமாவிற்காக எனக்கு நீ உதவி செய்தால் அல்லாஹ் உனக்கு வெற்றியைத் தருவான் . அத்துடன் நஜ்தும் அதன் சுற்றுப் புறங்களும் உன்னுடைய அதிகாரத்திற்கு வந்து சேரும் "என்றார்  . அதைக் கேட்ட உஸ்மான் ,அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்தான் . அதன்பின் அவனுடைய ஒத்தாசையோடு ,முன்னை விட முனைப்போடு ஷைகு நஜ்தி செயல்படத் துவங்கினார் .

    நன்மையை ஏவி தீமையை தடுக்கும் இயக்கமென்று தனது இயக்கத்திற்கு பெயர் சூட்டினார் .  சூடான அதேநேரம் சாதுர்யமான பிரச்சாரத்தின்  பயனாக மக்கள் கவரப்பட்டார்கள் . அதனால் இன்னும் அதிக உற்சாகத்தோடு தனது முதல் பணியாக குப்பாக்களை உடைத்து ஏறியத்   தொடங்கினார் . இதுபற்றி உஸ்மான் இப்னு பஷீர் அந்நஜ்தி என்பார் உன்வானுல் மஜ்த் ஃபீ  தாரீகி நஜ்த் என்னும் நூலின் 9வது மற்றும் 10வது பக்கத்தில் பின்வருமாறு சொல்கிறார் .....


    "ஷைகு நஜ்தி ஜுபைலா என்னும் ஊரில் ஹழ்ரத் ஸைத் இப்னு கத்தாப் رضي الله عنه அவர்களது கப்ரின் மீது கட்டப்பட்டிருந்த குப்பாவை  உடைக்க எண்ணங்கொண்டு ,மக்களின் நேர்வழிக்கு இடையூறாக இருந்து வழிகெடுத்துக் கொண்டிருக்கும் இந்த குப்பாவை உடைத்தெறிவோம் வாரீர் என உஸ்மானிடம் சொல்லவே ,அதற்கவர் :அதை நீரே செய்து கொள்ளும் என்றான் . அதற்கவர் ஜுபைலாவுடைய மக்கள் படை எடுப்பார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்  .  ஆதலால் உன்னுடைய உதவியின்றி என்னால் செய்லபட முடியாதென்று சொல்ல ,உஸ்மான் 600 பேர்களை கொண்ட ஒரு குழுவை தயார் செய்து கொண்டு அங்கே போய் சேர்ந்த போது ஜுபைலாவுடைய மக்கள் வேறு வழியின்றி வழிவிட்டனர் . அதன்பின் குப்பாவை நெருங்கியதும் அதன் மீது நான் கை வைக்க மாட்டேன் என்று உஸ்மான் சொல்லவே ஷைகு நஜ்தி தன்னிடம் கோடரியைத் தருமாறு வாங்கி தன்னுடைய கையால் குப்பாவை உடைத்து தரைமட்டமாக்கினார் ".

    மேலும் இந்த ஊரில் வைத்துதான் ஷைகு நஜ்தியால் 'கிதாபுத் தவ்ஹீத் ' என்னும் நூல் தொகுக்கப்பட்டது . இந்த நூல் இன்றும் கூட சவூதி அரசாங்கத்தால் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது . பல்வேறு மொழிகளில் இந்நூல் அச்சிடப்பட்டாலும் இந்தியாவில் இந்நூலை முதன் முதலில் மொழி பெயர்த்தவர் தேவ்பந்த் இயக்கத் தலைவர்களில் ஒருவரான மவ்லவி இஸ்மாயீல் திஹ்லவி என்பரவாகும் .

    குப்பா தகர்த்தெறியப்பட்ட செய்தி அப்பகுதியின் பக்கத்திலுள்ள ஊர்களான அல் அஹ்ஸாஃ , அல் கதீஃப்      போன்றவைகளின் தலைவரான சுலைமான் இப்னு முஹம்மத் இப்னு அஸீஸ் அல் ஹுமைதி என்பாருக்குத் தெரியவரவே அவர் உஸ்மானுக்கு மடலொன்றை எழுதினார் . அதில் அவர் .....


    "எனது மடல் உம்மை வந்தடைந்தால் அவரை கொன்று விடும் . இல்லையேல் எம்மிடமிருக்கும் உமது சொத்துக்கள் அனைத்தையும் நாம் முடக்கிவிடுவோம் " என்பதாக அதில் எழுதப்பட்டிருந்தது .

    [ நூல் - தாரீகுன்  நஜ்த் -அரபி , பக்கம் 114 ] 

    மடல் உஸ்மானை வந்தடைந்த போது அதில் கூறப்பட்டிருந்த விஷயத்தை ஷைகு நஜ்தியிடம் எடுத்துக்காட்டி அவரை எதிர்க்கும் சக்தி தனக்கு இல்லையென்றும் , அதேநேரம் உம்மை கொல்லவும் நான் விரும்பவில்லை .ஆதலால் நீர் இவ்வூரை விட்டு போய் விடும் என்றான் . அதற்கு ஷைகு நஜ்தி ,உஸ்மானிடம் திரும்பவும் ,நீ எனக்கு உதவி செய்தால் நஜ்த் உனக்கு கிடைக்குமென்று சொல்ல ,அவன் அதை மறுத்து விட்டான் .

    இப்படி குப்பாக்களை உடைப்பதும் ,கப்ருகளை தரை மட்டமாக்குவதும் , கப்ருகள் உள்ள மஸ்ஜிதுகளில் தொழுவது ஹராம் என்னும் பல்வேறு கருத்துக்கள் இவர்களுடைய கொள்கை திட்டங்களில் உள்ளவைகளாகும் . இதனை இன்றுள்ள அவர்களின் ஏஜெண்டுகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அமுல்படுத்தவும் செய்கின்றனர் .

    இதே போன்று இப்னு சவூதும் ,ஷைகு நஜ்தியும் இணைந்து அமுல்படுத்திய விஷயங்களைத் தான் இன்றுள்ள சவூதி அரசாங்கமும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது . இதை நாம் நிரூபிக்க வேண்டுமாயின் ....

    தமிழகத்தில் இவர்களின் எடுபிடி ஏஜெண்டுகளாக இருந்து இன்று சிதறி சின்னா பின்னாமாகியுள்ள , விபச்சார காமுகன் பீ.ஜே என்ற ஷைத்தானின் தலைமையில் சமீப காலம் வரை தமுமுக , தவ்ஹீத் ஜமாத் என்று இயங்கிய இவர்கள் தமது பத்திரிக்கைகளிலும் ,இணைய தளங்களிலும் , தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் எடுத்துள்ள நிலைப்பாட்டை கவனித்தவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும் . இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் இவர்கள் கண்மணி நாயகம் அவர்களது புனித குப்பாவை இடிக்க வேண்டும் என்று சவடால் விட்ட பொழுது , ஒரு வழியாக தமிழக இஸ்லாமிய சமூகம் பொறுத்து பொறுத்து பொறுமை இழந்து இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது சமீபத்திய வரலாறு .



    இதே போன்று இலங்கையிலுள்ள இவர்களின் ஏஜெண்டுகள் வெளியிட்டிருந்த மக்கா ஹரம் ஷரீபின் இமாம்  திட்டமிட்டவாறு கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் ஏன் ஜும்மா தொழுகை நடத்தவில்லை ? என்று பிரசுரம் ஒன்றின் கருத்தை கீழே தருகின்றோம் .பாருங்கள் ....

    "கொள்ளுப்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் கப்ரு இருப்பதால் அதில் தொழுவது ஹராம் " எனக்கூறி அதற்காதாரமாக இரண்டொரு ஹதீதுகளையும் எடுத்துக் காட்டியிருந்தனர் . அந்த ஹதீதுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு மிகப் பகிரங்கமாக சொல்லப்பட்டிருந்த விஷயம் என்னவென்றால் அதில் தொழுவோர் அனைவரும் முஷ்ரிக்குகள் என்பதேயாகும் .

    அதன்பின் புனித மதீனா ஷரீப் பள்ளிவாயிலின் பிரதம இமாம் கலாநிதி ஸலாஹ் முஹம்மத் அல் புதைர் ,இலங்கையின் வேறொரு சாராரால் அழைக்கப்பட்டு வருகை தந்தவர்  நாட்டின் பல பாகங்களுக்கும் சென்ற பொழுது கல்முனை அல் ஹாமியாவிற்கும் சென்று உரையாற்றிய அவரது உரையாடல் 8-10-2002 ல் வெளியான தினகரன் நாளேட்டின் 2ஆம் பக்கத்தில் "ஈமானை பாதிக்கும் கப்ரு வணக்கம் நரகத்தில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  வெளியிடப்பட்டிருந்தது .

    இப்படிப்பட்டதொரு மாபெரும் குற்றச்சாட்டை அவர்களால் சொல்லப்பட்ட பொழுது நம்மவர்கள் மவுனம் சாதித்தது ஏன் என்று புரியவில்லை ? அதற்குரிய காரணம்  என்னவாக இருக்குமென்று நாம் யோசித்த பொழுது நமக்கு கிடைத்த காரணம் இதுதான் ....

    கப்ரு ஜியாரத் இருக்கும் பள்ளியில் தொழுவது ஹராம் என்றும் அதில் தொழுபவர்களெல்லாம் முஷ்ரிக்கீன்கள் என்றும் சொன்னவர்கள் அத்துணை பேரும் மக்கா முகர்ரமாவிலுள்ள ஹரம் ஷரீபில் தானே தொழுகின்றனர் ?

    அத்துடன் அங்கே இலட்சக் கணக்கான மக்கள் சதா வருகை தந்த வண்ணம் உள்ளனர் . காரணம் அதிகமான  நன்மை கிடைக்குமென்றால் அங்கு தொழுவதற்குத்தான் கிடைக்கும் . அப்பேற்பட்ட பள்ளியில் ....

    AL-BIDAYAH WAN-NIHAYA



    "ஹழ்ரத் ஸெய்யிதினா இஸ்மாயீல் عليه السلامஅவர்களும் ,அவர்களுடைய தாயாருமான அன்னை ஹாஜரா عليه السلامஅடக்கப்பட்டிருப்பதாகவும் " இன்னும் ...


    " ஹழ்ரத் ஸெய்யிதினா நூஹ் நபி عليه السلام அவர்களின் கப்ரும் இருப்பதாகவும் " இன்னும் .....


     " ஸெய்யிதினா நூஹ் நபி عليه السلام அவர்களின் கப்ரு கர்க் என்னும் ஊரில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே அங்கே ஒரு மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது " என்றும் சொல்லப்படுகிறதே !

    [ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம் 1 , பக்கம் 120 ,193 ]

    மஸ்ஜிதுல் ஹரமில்  பல நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதை ஸஹீஹான , ஹசனான ,ளயீபான பல தகவல்கள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன .

    இமாம் அஸ்ரகீ அவர்கள் அக்பார் மக்கா என்னும் நூலிலும் , ஹாபிழ் இப்னு ஜரீர் ,  ஹாபிழ் இப்னு அபீ  ஹாத்திம் , ஆகிய இருவரும் தத்தம் தனது தப்ஸீர்களிலும்  நபிமார்களான நூஹ் ,ஹுத் , ஸாலிஹ் , ஷுஐப் போன்றோர் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் .

    இத்தகவலை ஹாபிழ் இப்னு ஜரீர் அத்திப்ரீ  முர்ஸலான ஒன்றெனக் கூறுவதோடு இது நம்பிக்கைக்குரிய தகவலென்றும் கூறுகின்றார் . ஹாபிழ் இப்னு கதீர் அவர்களும் இதனை முர்ஸல் எனக் கூறுவதோடு இதில் பலவீனம் இருப்பதாகவும் கூறுகின்றார் . எனினும் இத்தகவலை வேறுபல தகவல்களைக் கொண்டு ஊர்ஜிதப்படுத்துவதை எவராலும் மறுக்க முடியாது .    

    உதாரணமாக இமாம் பாகிஹானி அவர்கள் ஃபழாயிலு மக்கா என்னும் நூலிலும் ,  ஹாபிழ் தகியுத்தீன் பாஸி அவர்கள் ஷிபாவுல்    ஃகராம் என்னும் நூலிலும் , ஹாபிழ் அஸ்ரகீ அவர்கள் தாரீக் மக்கா என்னும் நூலிலும்   , ஹாபிழ் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் முஸன்னப் என்னும் நூலிலும் , இமாம் முஹம்மத் பின் ஹசன் அவர்கள் அல் ஆஸார் என்னும் நூலிலும் ,  இமாம் அபூ யூசுப் அவர்கள் தமது அல் ஆஸார் என்னும் நூலிலும் ,  இமாம் ஹாகிம் அவர்கள் முஸ்தத்ரக் என்னும் நூலிலும் , ஹாபிழ் இப்னு ஸஃத் அவர்கள் அத்தபகாத் என்னும் நூலிலும் , ஹாபிழ் அபூ நயீம் அவர்கள் ஹுல்யா என்னும் நூலிலும் மேற்கண்ட தகவலை பதிவு செய்துள்ளனர் .

    இவ்வனைத்து தகவல்களிலும் பன்னிரண்டு நபர்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள் .  அவர்களில் இருவர் ஸஹீஹானவர்கள் . இருவர் ஹஸனானவர்கள் . ஐவர் ளயீபானவர்கள் . ஒருவர் ஸஹீஹ் அல்லது ஹஸனானவர் .  இன்னும் ஒருவர் ஹசனுடைய     படித்தரத்துக்கு  ஒப்பாவார் . ஆதலால் மஸ்ஜிதுல் ஹராமில் நபிமார்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்னும் தகவல் ஏற்கத்தக்க ஒன்றாகும் .

    இதுதவிர நபியுல்லாஹ் இஸ்மாயீல்  عليه السلام அவர்களும் ,அவர்களுடைய அருமை தாயார் ஹாஜரா  عليه السلام அவர்களும் கஃபத்துல்லாவிற்கு பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்டுள்ளர்கள் என்பதை இப்னு ஜவ்ஸி அவர்கள் அல் முன்தழம் , பாகம் 1 ,பக்கம் 305 ழும் , இமாம் அப்துர்ரரஹ்மான் ஸுஹைலி அவர்கள் அர்ரெளழுல் உன்ப் .பாகம் 1,பக்கம் 88ழும் , சீறத் இப்னு ஹிஷாம் , பாகம் 1,பக்கம் 42 ழும் , ஹாபிழ் தகபி தாரீகுல் இஸ்லாம் , பாகம் 1 , பக்கம் 20ழும் ,அபுல் ஹசன் அலீ பின் ஹுசைன் மஸ்வூதி அவர்கள் அல் முரவ்வஜித் தஹப் ,பாகம் 2,பக்கம் 48ழும் , ஹாபிழ் இப்னு அதீர் அல் காமில் ,பாகம் 1,பக்கம் 102ழும் , அபுர் ரஃபீஃ சுலைமான் பின் மூஸா அல் கலாயி அவர்கள் - அல் இத்திபா பீ மகாஸீ ரசூலுல்லாஹ் வஸ்ஸலாஸத்தில் குலபா ,பாகம் 1,பக்கம் 63ல் குறிப்பிட்டுள்ளதை நாம் காணலாம் .

    ஹழ்ரத் அப்துர்ர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உபைதுல்லாஹ் அல் குறைஷிய்யீ  அத்தமீமி رضي الله عنه என்னும் நபித்தோழர் பற்றி  கூறப்படும் தகவல் என்னவெனில் , ஸஹாபா தோழர் அவர்கள் கொல்லப்பட்ட போது ஹஸ்வரா என்னுமிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள் .அதன்பின் மஸ்ஜிதுல் ஹராம் விஸ்தரிக்கப்பட்ட பொழுது அவருடைய கப்ரும் பள்ளியின் உட்பகுதியிலேயே அமைக்கப்பட்டது .

    [ நூல் - அல் இஸாபா ,பாகம் 2,பக்கம் 410 . தஹ்தீபுத் தஹ்தீப் ,பாகம் 6,பக்கம் 227. அல் இக்துஸ் சமீம் , பக்கம் 1758 . இத்ஹாபுல் வரா , பாகம் 2,பக்கம் 102    ]

    இத்ஹாபுல் வரா பி அக்பாரி உம்மில் குரா நூலில் ,பாகம் 2, பக்கம் 454 ல் ஹிஜ்ரி 451ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தை கூறும் போது , மகாமே இப்ராஹீமுக்கும் ஹிஜ்ருக்கும் இடையில் தோண்டப்பட்ட பொழுது பெருவாரியான மண்டை ஓடுகளும் எலும்புகளும் தென்பட்டன . அதைக் கண்ட பொழுது அதை அவ்வாறே வைத்து மூடப்பட்டன என்று கூறுகின்றனர் .  

    மேற்கண்ட தகவலிலிருந்து நமக்கு கிடைக்கும் விஷயம் என்னவெனில் ஹஸ்வரா என்னுமிடம் அருமை ஸஹாபா பெருமக்களின் காலத்தில் நல்லடக்கம் செய்யும் ஓர் இடமாக இருந்ததையும் அதன்பின் மஸ்ஜிதுல் ஹராமுக்குள் இணைக்கப்பட்டது என்பதையும் , கஃபாவின் அருகில் நபிமார்கள் அல்லாதவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்துவதை நாம் காண்கின்றோம் . ஆக தற்போற்துள்ள  ஹரம் ஷரீபின் எல்லைக்குள்   பல கப்ருகள் இருக்கின்றன என்பதே உண்மையாகும் .

    Masjid-Khayf

    இதேபோல மக்காவிற்கு அருகில் இருக்கும் மினா என்னும் இடத்தில அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைபை எடுத்துக் கொண்டால் அப்பள்ளிக்குள் எழுபது நபிமார்களுடைய மண்ணறைகள் இருப்பதாக அருமை நாயகம்  அவர்களது பொன்மொழி முஸ்னதுல் பஸ்ஸார் என்னும் நூலில் ,எண் : 1177ழும் , தப்ரானி கபீர் ,பாகம் -12,பக்கம் 316ழும் கூறப்பட்டுள்ளது .

    இத்தகவலை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் முக்தஸர் ஸவாயித் பஸ்ஸார் என்னும் நூலின் எண் : 813 ல்  ஸஹீஹான அறிவிப்பளர்களைக் கொண்டு கூறப்ப்பட்டதென்றும் , ஹாபிழ் ஹைத்தமி அவர்கள் மஜ்மவுஸ் ஸவாயித் என்னும் நூலின் ,பாகம் 3,பக்கம் 297 ல் ஹாபிழ் பஸ்ஸாரின் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைகக்குறியவர்கள் என்று கூறுகின்றார் .