Monday, 22 June 2020

அல்லாஹ்வின் சின்னமும் வஹாபிஸமும்

ஸவூது உடைய குடும்பத்தாரும் ,ஷைகு நஜ்தியுடைய குடும்பத்தாரும் இணைந்து நடத்திய கொடுமைகளில் புராதான சின்னங்களை அழிப்பதும் முக்கியமான இடத்தை வகிக்கின்றது  .

புராதான சின்னங்கள் பற்றி பேசப்பட்ட போது இலங்கையைச்  சேர்ந்த அப்துல் ஹமீத்பக்ரி என்பவரால்  மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பிரதியொன்று கிடைத்தது.இவர் இலங்கை பரகஹதெனிய என்னும் இடத்தைச் சேர்ந்த வஹாபிய ஏஜெண்டுகளில் ஒருவராகும். இவரைப்பற்றி தனித்தலைப்பில் முன்னால் நாம் கூறியுள்ளோம். அந்த நூல் 50 பக்கங்களை கொண்டது. ஹிஜ்ரி 1380 ஜமாதில் ஆகிர் 24ம் நாள் 'அந்நத்வா'
இதழில் மற்ற மதீனா முனவ்வராவின் புராதனச் சின்னங்கள் என்னும்
தலைப்பில் முஸ்தபா அமீனின் கட்டுரைக்கும் ஹிஜ்ரி 1387ஜமாதில்
அவ்வல் 24ம் நாள் அதே இதழில் இஸ்லாமிய புராதனச்
சின்னங்கள் என்னும் தலைப்பில் ஸாலிஹ் முஹம்மத் ஜமாலுடைய
கட்டுரைக்கு இப்று பாஸால் எழுதப்பட்ட மறுப்புப் பிரதியின்
தமிழாக்கம் தான் அது.

முஸ்தபா அமீனும் , முஹம்மத் ஜமாலும் அப்போது என்ன
எழுதியிருந்தார்கள் என்பது சரியாகத் தெரியாதவரை அவர்கள்
சொன்னதாக இப்னு பாஸ் சொன்னதாகச் சொல்லும் அப்துல்
ஹமீதின் கருத்தை நம்பமுடியாது. முன்னோர்களின் நூல்களிலிருந்தே
அவர்களின் வாசகங்களைத் திருடிய திருட்டுக் கூட்டம் இது.

ஆதலால் ஒன்று மட்டும் நிச்சயம். இன்று நாமும் புண்ணிய பூமிகளான மக்காமுகர்ரமாவிலும் மதீனா முனவ்வராவிலும் எவைகளெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமென, கௌரவப்படுத்தப்பட வேண்டுமென குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோமோ அதைத்தான் சொல்லியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

காரணம் புனித மதீனா முனவ்வராவைப் பற்றி அவர் சொல்வதாவது:-
புனித மதீனா முனவ்வராவில் நினைவில் நிறுத்தக் கூடிய
பல புராதனச் சின்னங்கள் இருக்கின்றன. அரபிகளாக இருந்தும்
அவைகளைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. அதேநேரம் லண்டன்,
பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள புராதனச் சின்னங்களை
அந்நாட்டவர்கள் கௌரவிப்பதைக் காணும்போது
முஸ்லிம்களாகிய நாம் ஏன் அவ்வாறு பழமை வாய்ந்த புராதனச்
சின்னங்களை கௌரவப்படுத்தக்கூடாது? இஸ்லாம் இதை மறுக்க
வில்லையே! என எழுதி நம்மையும் லண்டன்,பாரசீகவாசிகளைப்
போலபுராதனச் சின்னங்களை கௌரவிக்கவும் அதை நினைவூட்டக்
கூடிய கட்டிடங்களை அமைக்க வேண்டுமென்றும் அழைக்கிறார்
என பாஸ் சொன்னதாக சொல்லும் பக்ரி,...


ஒரு முஸ்லிம் இஸ்லாத்திற்கு விரோதமான அல்லாஹ்வுடைய
வும் அவனுடைய தூதருடையவும் பகைவர்களைப் போன்று
நடந்து கொள்ள வேண்டுமெனக் கூறுவது ஆச்சரியமானது
மட்டுமல்ல. அதிசயமானதுமாகும். ஏனெனில் இன்னொரு
சமுதாயத்தை பின்பற்றுபவன் அச்சமுதாயத்தையே சார்ந்தவர் 
ஆவான் என்னும் நபிமொழியைக் கவனித்தல் வேண்டாமா?
என்று ஆவேசப்படுகிறார்.

இவருடைய ஆவேசததைக் கண்டு கையால் வாயை பொத்திக்
கொண்டு சிரிக்கிறோம் .ஏனெனில் புராதனச் சின்னங்கள் கௌரவிப்பது மாற்று சமுதாயத்தின் வேலையாதலால், நாமும் நமது
புராதனச் சின்னங்களை கௌரவப்படுத்தினால் நாமும் அவர்களாகி
விடுவோம் என்னும் அச்சம் இவர்களிடம் இருப்பதைக் கண்டு
உண்மையாகவே ஆச்சரியப்படுகிறோம்.

ஒரு பொருளை  பாதுகாப்பதற்கு  கையாளப்படும் முறை மற்றும்
விதம் மாற்று சமுதாயததைப் போல் இருக்கக் கூடாதென்று
சொல்லும் இவர், மாற்று சமுதாயத்தினரின் வணக்கத்தை நாம்
நம்மீது சாட்டிக் கொள்வது பற்றி என்ன சொல்வாரோ தெரியவில்லை.

ஆஷுரா நோன்பை கவனியுங்கள். இன்னும் அது ஸுன்னத் தாக்கப்பட்ட விதத்தைக் கவனியுங்கள். அந்தத் தினத்தன்று
யூதர்கள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்ணுற்ற பூமான் நபி صلى الله عليه و سلم அவர்கள் அது நமக்குரியது எனக் கட்டளை  பிறப்பிக்கவில்லையா?

இன்னொரு சமுதாயத்தைச் சார்ந்தவர் ஒன்றைச் செய்தால் அதை
செய்வதற்குரிய தடை என்பது நமக்கு இல்லையாயின் நாம் அதை
செய்வதில் ஆட்சேபணையில்லை. இதன் அடிப்படையில் தான்
நாம் நமது புராதனச் சின்னங்களை பாதுகாப்பது என்பதானது
மாற்றுச் சமுதாயத்தைப் பார்த்து செய்யப்படும் ஒன்றாகாது.
இன்னும் அதைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி அவைகளை
அழிப்பதானது மிருகத்தனமான செயலாகும்.

இனி நமது புராதனச்சின்னங்கள் பாதுகாக்கப்படவேண்டுமா
அல்லது அழிக்கப்பட வேண்டுமா என்பதைக் குறித்து அல்லாஹ்
வின் திருமறை வசனங்களைக் கொண்டும் அண்ணலெங்கோமான்
அவர்களின் அமுதவாக்குகளைக் கொண்டும் சுருக்கமாக பார்ப்போம்.

திருமறை கூறுவதை பாருங்கள்.


"மகாமே  இப்றாஹீமை தொழும் இடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்”.
குர்ஆன்.

இந்த வசனம் நபி இப்றாஹீம் عليه السلام அவர்கள் புனித
கஃபாவை புனர் நிர்மாணம் செய்யும்போது நின்றுகொண்டு
பணிபுரிந்த அவர்களின் பாதம்பட்ட இடத்தை கௌரவப்படுத்தும்
வகையில் தொழக்கூடிய இடமாக ஆக்கிக் கொள்ளுமாறு
ஆணையிடுகிறது.

நபி இப்றாஹீம் عليه السلام அவர்களின் பாதம் பதிந்த
இடம் இன்றும் ஹரம் ஷரீபில் கஃபாவின் வாயிலுக்கு எதிரே ஒரு
அடி தூரத்தில் கண்ணாடிப் பெட்டி ஒன்றில் பாதுகாக்கப்பட்டு
வருவதோடு அவ்விடத்தில் பரக்கத்திற்காக தொழவும் செய்கின்ற
னார். நபியுல்லாஹ் இப்ராஹீம் عليه السلام அவர்களின் பாதம்
பட்ட இடம் புராதனச் சின்னமாகும். அதை அல்லாஹ்பாதுகாப்ப
தோடு அதைப்பற்றி குர்ஆனிலும் பேசுகிறான் எனில் அவை
போன்ற புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா?
அல்லது அழிக்கப்படவேண்டுமா?

இன்னும்,...




"அந்தப் பேழையினுள் - நபிமார்களான -  மூஸா  عليه السلام அவர்களுடையவும் , ஹாரூன் عليه السلام அவர்களுடையவும் புராதனச் சின்னங்க இருக்கின்றன. அதனை  அமரர்கள் சுமந்துவருவார்கள். "

குர்ஆன்.

இவ்வசனத்திற்கு விளக்கமளிக்கும் வேத வியாக்யானிகள்
அந்த நபிமார்களுடைய புராதனச் சின்னம் என்பதானது
அவர்களது கைத்தடியும் பாதணிகளுமாகும் என்கின்றனர்.

மேலும் நம் மூஸா  عليه السلام அவர்கள் பயன்படுத்திய
தடியையும், பாதணியையும் அல்லாஹ் பாதுகாத்து அதனை
அமரர்கள் சுமந்து வருவதாககுர்ஆன் கூறுகிறதென்றால் புராதனச்
சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா? அல்லது அழிக்கப்பட
வேண்டுமா?

ஆதலால் புராதனச் சின்னங்களை பாதுகாப்பதானது காபிர்களு
டைய செயலல்ல. மாருக அது அல்லாஹ்வுடைய சுன்னத்தாகும்.
ஆனால் நீங்கள் புராதனச்சின்னங்ககாபாதுகாப்பதற்குப் பதிலாக
அவ்விஷயத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறீர்கள்.

அருமை நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் நபியவர்களின் அருமைத் தோழர்களாலும் தாபியீன்களாலும், தபவுத் தாபியீன்களாலும் பாதுகாக்கப்பட்டதைக் குறித்து எத்தனையோ ஆதாரங்களை நம்மால் எடுத்துக் காட்ட முடியும். விரிவஞ்சி ஒரேயொரு
ஆதாரத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகிறோம்.

ஸெய்யிதுனா ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் வானத்திற்கு உயர்த்தப்பட்ட இடம் யூதர்களால் குப்பை கூளங்கள் போடப்படும் இடமாக இழிவுபடுத்தப்பட்டது. பின்பு அந்த இடம் கிறிஸ்தவர்களால் கைப்பற்றப்பட்ட போது அவர்கள் அந்த   இடத்தை வணக்கஸ்தலமாக ஆக்கிக் கொண்டனர்.

பின்னர்,...



"ஹழ்ரத் ஸெய்யிதினா  உமர் رضي الله عنه  அவர்களால்
பைத்துல் முகத்தஸ் கைப்பற்றப்பட்ட போது கலீஃபா அவர்கள் தாம்
அணிந்திருந்த போர்வையால் அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள்.
அத்துடன் அதனுடைய அமைப்பை மாற்றியமைத்து அந்த இடத்திற்கு
முன்பாக நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் தொழுத
இடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தார்கள்.”
[நூல்: அல்பிதாயா வந்நிஹாயா, 2-96.]

ஆனால் நீங்கள் நாயகம் صلى الله عليه و سلم அவர்கள் இவ்வையகத்திற்கு வருகைதந்து வாழ்ந்த வீட்டை பாதுகாத்து கௌரவப்படுத்துவதற்குப் பதிலாக அவ்வீட்டை உடைத்துத் தரைமட்டமாக்கியது போதாதென்று....


"மிருகங்கள் விற்கப்படும் சந்தையாக அவ்வீட்டை மாற்றி
கேவலப்படுத்துகிறீர்கள். "

இன்னும்,....

அருமை நாயகம் صلى الله عليه و سلم அவர்களுக்கு
முதன் முதல் வஹீ இறக்கப்பட்ட இடமும், நபியவர்களுக்கு
மிகவும் உகப்பான முஃமினீன்களின் தாயாரான அன்னை கதீஜா
 رضی اللہ عنھا அவர்களின் வீட்டையும் தரைமட்ட
மாக்கியதோடு,..



“அந்த இடத்தை மலஜலம் கழிக்கும் இடங்களாகவும் ஒழு செய்யும்
இடமாகவும் தண்ணீர் தொட்டிகளாகவும் ஆக்கப்பட்டதை பொருந்திக்
கொண்டீர்கள்."

 இப்படியெல்லாம் செய்வதற்கு உங்களுடைய
உள்ளங்கள் இடமளித்ததென்றால் நீங்களெல்லாம் நிச்சயமாக
முத்திரையிடப்பட்ட உள்ளங்களை கொண்டவர்கள் தானென்றே
நாம் கூறு வோம்.

இன்னும்,....

இரு கிப்லாக்கள் என பிரபலமாக அழைக்கப்பட்ட மஸ்ஜிதில்
காணப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸா கிப்லா என்பதை தெளிவுபடுத்தும்
அடையாளத்தை வழிகேடு எனக்கூறி அழித்தது ஈமான் என்றால் ,.

ஹழ்ரத் உஸ்மான் رضي الله عنه‎ அவர்களால் யூதர்களிடமிருந்து வாங்கி அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணம் செய்த
கிணற்றை பாதுகாப்பது பாவமான காரியம் என்பதுதான்
இஸ்லாம் என்றால்,...

நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் முபாரக்கான
திருக்கரத்தால் நடப்பட்ட ஈச்சை மரத்தைக் கொண்ட ஹழ்ரத்
ஸல்மான் பார்ஸி رضي الله عنه‎  அவர்களின்
தோப்பையே இல்லாமலாக்குவது தான் மார்க்கம் என்றால்,...

அண்மைக்காலம் வரை மதீனா முனவ்வராவில் மஸ்ஜிதுல்
குபாவில் காணப்பட்ட அருமை நாயகம் صلى الله عليه و سلم
அவர்களின் ஒட்டகத்துடைய அடையாளத்தை அழித்தது
தான் அறிவுடையோரின் செயலென்றால்,...

இது உண்மையான மார்க்கமேயல்ல என்று அழுத்தமாகச்
சொல்லுவோம். உங்களுடைய சுயவிருப்பம் ஒரு போதும்
மார்க்கமாகாது. உங்களுடைய மனோ இச்சையிலிருந்து பிறந்து
வரும் விளக்கமெல்லாம் ஒருபோதும் குர்ஆன் ,ஹதீதுக்குரிய
விளக்கமாகாது. மாறாக முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபும்
இப்னு சவூதும் பிரிட்டானிய ஏகாதிபத்தியமும் இணைந்து தோற்று
வித்த ஓர் புதிய மார்க்கமாகும். அதுதான் வஹ்ஹாபிஸம், இந்நிலை
யில் உங்களை நாங்கள் என்னவென்று அழைக்க வேண்டும்
என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அதுசரி, எதற்குமே
லாயக்கில்லாதவனை என்னவென்று அழைத்தால் தானென்ன.
அதனால் குடியா முழுகி விடப்போகிறது.

மேற்கண்டவைகளில் சில கருத்துகள் அஸ்ஸெய்யித் ஹாசிம் 
அர்ரிபாயி அவர்களால் சொல்லப்பட்டவைகளாகும்.இதே 
போன்று இன்னும் பல விஷயங்களை  அவர்கள் கூறியுள்ளார்கள்,
அவர்களுடைய உபதேசத்தோடு தமது உள்ளத்தின் ஆக்ரோஷத்
தையும் வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே இத்தோடு
போதுமாக்கிக் கொண்டோம். தேவையான நேரத்தில் இந்த நூல்
தமது கரத்திற்கு வந்து சேர்ந்ததற்காக அல்லாஹ்வைப் புகழுகிறோம் .

இறுதியாக அல்லாமா லாவி ரஹிமஹல்லாஹ் அவர்கள்
தமது தப்சீர் ஸாவியில் 35ம் அத்தியாயமான சூரா ஃபாத்திரின் 
மூன்றாம் வசனமான

 "திடனாக உங்களுக்கு ஷைத்தான் பகைவராக 
இருக்கிருன். ஆதலால் நீங்களும் அவனை பகைவனாகவே எடுத்துக்
கொள்ளுங்கள்"

என்னும் பொருள் கொண்ட வசனத்திற்கு
அவர்கள் தரும் விளக்கத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு
எடுத்துக்காட்டிவிட்டு ஸவாத்துச்சொல்லலாமென்று நினைக்கிறோம்.
அவர்கள் கூறுகின்றனர்...



"இந்த வசனம் குர்ஆனுடைய வசனங்களுக்கும் நாயகம்
صلى الله عليه و سلم அவர்களின் சுன்னாவுக்கும் தவறான
அர்த்தம் செய்து முஸ்லிம்களை கொலை செய்வதும், அவர்களின்
பொருட்களை சூரையாடுவதும் ஆகுமான ஒன்றெனக் கூறிய கவாரிஜிய்யீன்கள் தொடர்பாக இறக்கப்பட்டதாகும். அவர்களைச் சேர்ந்தோர் தான் ஹிஜாஸ் மாநிலமான - மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா போன்ற இடங்களில் காணப்படும் வஹ்ஹாபிகள் எனப்படும் கூட்டமாகும்.

அவர்கள் சத்தியத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு
வாதிக்கின்றனர். ஆனால் அவர்கள் பொய்யர்களாகும். அவர்களை
ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பை அவர்களை விட்டும்
மறக்கடித்து விட்டான். அவர்கள் நஷ்டமடையும் ஷைத்தானின்
கூட்டாளிகளாகும். அவர்களை அடியோடு அழித்து விடுமாறு
அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்”  என்று கூறுகின்றனர்.

எனவே வஹ்ஹாபிகள் எனப்படுவோர் கவாரிஜிய்யீன்கள்
தான். அவர்கள் தற்போது நமக்கு மத்தியில் இருக்கும் எந்தக்
கூட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரியே  என்பதை இங்கே
மீண்டுமொரு முறை உங்களுக்கு நினைவூட்டியவர்களாக இந்த
உண்மையை இவ்வெளியோர்கள் மூலமாக சமுதாயத்திற்கு
எடுத்துச் சொல்வதற்குரிய வாய்ப்பைத் தந்து அதை ஏற்றுக்
கொண்ட எல்லாம் வல்ல வல்லோனாகிய அல்லாஹ்வுக்கே புகழ
கனைத்தும் உரித்தாகுமாக, இன்னும் அவனது ஹபீபாகிய நமக்
கெல்லாம்  ஷஃபீ. ஆகிய ஷஃபீவுல் முத்னிபீன், ஸர்தாரே தோ
ஆலம், ஸர்வரே காயினாத் ஸாஹிபே லவ்லாக் صلى الله عليه و سلم
அவர்களுக்கே சதா ஸலாத்தும் ஸலாமும்
உண்டாகட்டுமாக !




Thursday, 18 June 2020

நஜ்திய உலமாக்களுடன் ஒரு நிமிடம் - 2

ஷைகு நஜ்தி முஹ்ம்மத் இப்னு அப்துல் வஹாபுக்கு பின்னர் தோன்றிய வழிகேடர்களில் அண்மைக்காலத்தில் தோன்றிய அல்பானி குறிப்பிடத்தக்கவராகும் .  இவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே உங்களின் பார்வைக்கு வைப்பது உசிதம் என்று நினைக்கின்றேன் .


அல்பானி என்னும் இந்நபர் 1614ஆம் ஆண்டு அல்போனியாவின் தலைநகரான அஸ்கொதரா  என்னும் ஊரில் ஒரு வறிய குடும்பத்தில் தோன்றி ஹிஜ்ரி 1420ஆம் ஆண்டு ஜமாதில் ஆகிர் 22ஆம் நாள் சனிக்கிழமை அன்று (கி.பி. 1999ல் ) இறந்து போனவராகும். அல்போனியாவின் அதிபர் அஹ்மத் சுகே அந்நாட்டில் மதசார்பற்ற ஆட்சியைப் பிரகடனப்படுத்தியதால் மேற்கத்திய கலாச்சாரம் அம்மக்கள் மத்தியில் பரவி மார்க்க பற்றுள்ள பலர் அந்நாட்டை துறந்து துருக்கி,சிரியா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் .

இதில் அல்பானியின் குடும்பமும் சிரியா தலைநகரான டமாஸ்கஸ் நோக்கி நகர்ந்தது . திருமறை முதல் அரபி இலக்கணம் , மொழி இலக்கணம் , பிக்ஹ் போன்ற மார்க்க கல்விகளை தமது தந்தையிடமும் , நண்பர்களிடமும் கற்றார் . சிரியா நாட்டுப் பெரியார் ஒருவரிடம் ஹதீதுக் கலைக்கான இஜாஸத்தை -அனுமதியை பெற்றதாக சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல . இதுபற்றி அஸ்ஸெய்யித் ஹசன் அலி சக்காப் என்பார் அல்பானி ஹதீதுக் கலைக்கு இஜாஸா பெற்றிருந்தால் அதைக் காட்டுமாறு அப்போதே சவால் விட்டிருந்தார் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்றாகும் .

இவருடைய தந்தை நூஹ் ஹாதி நஜாத்தி என்பார் ஹனபி மத்ஹபின் அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்பதாக 'மகாலத்துல் அல்பானி ' என்னும் நூலின் 231ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . இனி இப்னு தைமிய்யாவின் குடும்பம் முழுவதுமே ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் , அதன்படியே தீர்ப்பு வழங்குபவர்களாகவும் இருந்தனர் . இவ்வாறே முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் குடும்பத்தினரும் ஹன்பலி மத்ஹபின் அடிப்படையில் தான் செயல்பட்டு வந்ததோடு அதன்படியே தீர்ப்பு வழங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் . இந்நிலையில் தமது பெற்றோர்களை வழிகேடர்கள் என்று அவர்களாகவே கூறிக்கொள்கின்றனர். இந்தநிலை இவர்களுக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா ? இவர்கள் நமது உயிரினும் மேலான நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் அருமை பெற்றோரை தவறாக விமர்சித்ததால் அல்லாஹ் அவர்களுடைய பெற்றோர்களை அவர்களைக் கொண்டே விமர்சனம் செய்ய வைத்துள்ளான் .

இதில் , அல்பானி நமது அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமாத்தின் முன்னோர்கள் அனைவரையும் குறை கண்ட நபராகும்.  முன்னோர்களால் எழுதப்பட்ட எந்த ஒரு கிரந்தத்திலும் இவர் தவறு காணாமல் விட்டதில்லை . இமாம் ஸுயூத்தி , இமாம்  தஹபி, இமாம் ஹாக்கிம் , இமாம் முன்திர், இமாம் இப்னு ஹஜர் , இமாம் சுப்கி , இமாம் மனாவி, ஜாஹித் அல் கவ்தாரி, ஸுவைப் அர்நாவூத், மஹ்முத் ஸயீத் மம்தூஹ் போன்றோர் மட்டுமல்ல . ஹதீதுகலையின் காற்றைக் கூட சுவாசித்திராத இவர் சிஹாஹ் சித்தாக்கள் என்று போற்றப்படும் அனைத்து கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகளுடன் மேற்கண்ட மேற்கண்ட நூற்களையும்   சேர்த்து  கிட்டத்தட்ட 6000 ஹதீதுகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பை சொன்னவராகும் . இன்னும் இவர் எதற்குமே அருகதை இல்லாதவர் என்பதே நல்லடியார்களின் ஏகமானதான தீர்ப்பாகும் .

மேலும் அல்பானியைக் குறித்து அவரது மாணவர்களில் ஒருவரான இப்ராஹீம் பாஜிஸ் அப்துல் அஜீஸ் என்பாரால் சொல்லப்பட்டுள்ள தகவலொன்று 'மகாலத்துல் அல்பானி 'நூலில் 233ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது ....


" இவருடைய பண்புகளோடு இவரிடம் ஒத்துப் போன அறிஞர்கள் மிக மிகக் குறைவாகும் . இவருடைய குணங்களில் முக்கியமானதொரு குணம் என்னவெனில் இவர் எந்த   தகவலை உண்மையானதென்றும் , சரியானதென்றும் நினைக்கிறாரோ அதையே பிடித்துக் கொள்பவராகும் .      இந்நிலையில் அவரால் சரிகாணப்பட்ட அத்தகவல் ஏகோபிக்கப்பட்ட
தீர்ப்புக்கு மாற்றமானதாகவோ அல்லது எதிரானதாகவோ இருந்தாலும்
சரியே. இதனால் பெரும்பான்மையான மத்ஹபுவாதிகளும் சூபிஸவாதி
களும் பித்அத்துக்காரர்களும் இவரை பகைத்துக் கொள்ளலாயினர்." 
என்று கூறுகிறார். 

இன்னும் இவருடைய பிரத்யேகமான ஆராய்ச்சியின் பலனாக சமுதாயத்திற்கு தரப்பட்ட ஒருசில மார்க்கத்தீர்ப்புக்களை பாருங்கள்.

1. தங்க ஆபரணங்கள் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டதைப்
போல பெண்களுக்கும் ஹராமாகும்.

2. வேண்டுமென்றே தொழுகையை விட்டாலும் அதை கழா செய்
வது ஹராமாகும்.

3. பெருந்தொடக்குடைய பெண்கள் குர்ஆனை ஓதலாம். தொடலாம்.
சுமக்கலாம்.

4. நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின்
புனிதமிகு ரௌழா ஷரீபை ஸியாரத்துச் செய்வதற்காக பிரயாணம்
செய்வதும், அவர்களிடம் ஷபாஅத்துத் தேடுவதும் மிகப்பெரும் வழி
கேட்டுக்குரிய செயலாகும்.

5. தஸ்பீஹ் மணியை கையில் சுமந்துகொண்டு உலவுவது வழி
கேடாகும்.

6. நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரௌழா
ஷப் மஸ்ஜிதுன் நபவியின் உட்பகுதியில் இருப்பது மாபெரும் குற்றத்திற்குரிய காரியமாகுமாதலால் ரௌழா ஷர்பை பள்ளியின் உட்பகுதி
யிலிருந்து அகற்றுவது அவசியமாகும்.

7. அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிருன்.

8. விந்தை தன்னிச்சையாக வெளியேற்றுவதால் நோன்பு முறியாது.
என்பன போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

இப்போது நாம் இந்த அல்பானியுடன் இணைந்து பல ஆண்டு
கள் அவருக்கு அடிபணிந்து அவரை ஒரு மாபெரும் மார்க்க
அறிஞரென்று எண்ணி அவருடன் மார்க்க விஷயத்தில் இணைந்து
செயலாற்றியவர்களில் இருநபர்களை பற்றி பார்ப்போம். 

இவ்விருவரில் முக்கியமானவர் அல் மக்தபுல் இஸ்லாமிய்யா என்னும்
அச்சக உரிமையாளரான   ஸூஹைர் ஷாவீஷ் என்பாராகும் .இவர் அல்பானியின் சீடருமாவார் . இவரை பலமுறை அல்பானி பேசி  பெருமைபடுத்தியிருக்கிறார். அவசியம் எனக்கருதுவோர் ஷரஹ் தஹாவியின் முன்னுரையை பார்க்க வேண்டுகி
றோம். ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலமாக ஒன்றாக இணைந்தி
ருந்தவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் நிலை வந்தபோது
அல்பானி தனது பிறவிக்குணத்தை காட்டும் வண்ணம் 
ஷாவீஷ்  உணவுக்காக தமது உருவத்தை மாற்றிக் கொள்பவர் எனத்தூற்றத்
துவங்கி விட்டார்.


இன்னும் ஷாவீஷின் அச்சகத்தில் தான் அல்பானியின் நூல்கள்
அனைத்தும் அச்சிடப்பட்டுவந்தன. இதில் இவ்விருவருக்குமிடையே
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குரிய பிரச்னைகள் அனைத்தும்
ஊடகங்களில் எல்லாம் வெளியானது உலகறிந்த உண்மையாகும். இந்த இடத்தில் நாம் அல்பானியால் ஷாவீஷுக்கு எழுதப்
பட்ட கடிதமொன்றை  உங்களின்
பார்வைக்காக தருகிறோம். இக்கடிதம் 8-18-1999 புதன்கிழமை
அன்று வெளியான 1059ம் இதழான அல்லிவா என்னும் பத்திரிக்
கையின் 15ம் பக்கத்தில் வெளியான தகவலாகும்.

அடுத்து ஷாவீஷின் அச்சகத்தில் அச்சிடப்பட்டாலும் அச்சகத்
தின் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியான ஒரு நூல் -  'கிதாபுன் 
மஃப்தூஹுன் இலஷ் ஷெய்கி நாஸிரித்தின் அல்பானி ' என்பதாகும். இந்நூலை எழுதியவர் அல்பானியின் இரண்டாவது மாணவரான உஸ்தாத் மஹ்முத் மஹ்தி என்பாராகும். இவர் இஸ்தான்புல்
நாட்டைச் சேர்ந்தவர். இவர் அல்பானியை விட இரண்டு வயது
மூத்தவராக இருந்தும் அல்பானியுடன் நாற்பதாண்டு காலமாக
இணைந்திருந்தவர்.

 இதில் அல்பானியை பற்றி தெரிந்து கொள்ள
விரும்புவோர் மேற்கண்ட நூலை அவசியம் படித்துப் பார்க்க
வேண்டுகிருேம். மஹ்மூத் அவர்கள் அந்த நூலின் 12ம் பக்கத்தில்
இவ்வாறு கூறுகிறார்,...



"அல்பானியே! இது உமது தீய நடத்தை மற்றும் முட்டாள்தனத்தில்
நின்றுமுள்ளதாகும்." எனக் கூறுகிறார், அல்பானியுடன்
கரம் கோத்து நின்றவர்கள் அனைவரும் இறுதியில் அவரை தூற்றத்தான் 
செய்தனர்.


இன்னும் இந்த அல்பானி மிகக்கெட்ட வழிகேடரும் வழி
கெடுப்பவருமாகும். இவரைத்தான் இன்றுள்ள வஹ்ஹாபிகளெல்லாம் தங்களின் இமாமாக எண்ணி பின்பற்றுகின்றனர்
இவர் தனது சுயவிருப்பப்பிரகாரம் ஹதீதுகளுக்கு தீர்ப்புக்கூறி 
எண்ணிலடங்காக ஹதீதுகளை  ஓரங்கட்டச்செய்தவராகும். இவர்
எந்த ஹதீதை ஸஹீஹானதென்று சொன்னாரோ அதைத்தான்
இவருடைய சகாக்கள் ஆதாரமாகக்கொள்கின்றனர். மற்றபடித்த
ரங்களை உடையலத்துகள் எல்லாம் ஓரங்கட்டி விட்டனர்.

மேலும் இந்த அல்பானி ஹதீதுகளுக்குத்  தந்த தீர்ப்புக்கள்
சரியானவை தானா? அல்லது ஒரு ஹதீதுக்கு பல்வேறுவகையான
தீர்ப்புக்கள் சொன்னா என்பதை தெரிந்துகொள்ள விரும்பு
வோர் "தனாகுழாத் அல்பானில் வாழிஹாத்" என்னும் பலபாகங்களை கொண்டதும் நூலை பார்வையிட வேண்டுகிறோம்.

இன்னும் அல்பானி ஹதீதுக்குரிய ஆய்வுகளில் தவறாக தீர்ப்ப
ளித்தவர் என்பதை அவரை அல்லாமா எனப்போற்றிப் புகழும்
நாஸிர் லாலிம் என்பார் "அல்கௌலுல் மன்வூத் பி தஃப்ஸீலில்
பஸ்மலத்தி வல்குனூத்" என்னும் நூலின் 18ம் பக்கத்தில்,...



"நான் கூறுகிறேன். இந்த ஹதீதுக்கு தரப்பட்ட தீர்ப்பு: அல்பானியின்
கற்பனையாகும். பின்னும் இந்த ஹதீதுடைய விஷயத்தி (தீர்ப்பி)ல்
அல்பானி தவறிழைத்து விட்டார்" என்று கூறுகிறார்.

வாசகர்களே! இவரால் தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட ஹதீத்  எது
தெரியுமா? பஸ்மலா - அதாவது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்
ரஹிம் பற்றிய ஹதீதாகும். இந்த ஹதீத் ஸுனன்  அபூதாவுதில்
எண்4001லும், இமாம் அஹ்மத் அவர்கள் தமது நூலின் 6ம்
பாகம், 302ம் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக "இர்வா
வுல் அலில், 2-60ல் குறிப்பிட்டுள்ளார். "

தமிழக இஸ்லாமியரிடையே அல்பானியை அல்லாமா எனக்கூறுவோர் இதை நமக்குக் காட்டித் தருவார்களா? இவருக்கும் பெயர் ஷைகுதான். அதேநேரம் இவருடைய தோழர்களுடைய பட்டப்பெயரும் ஷைகுதான். தனது கற்பனைக்கேற்றவாறும் சுயவிருப்பப்படியும் ஹதீதுக்கு தீர்ப்பளிக்கும் ஒருவரைதனது முன்னோடியாகக் கொள்ளும் சமூகத்தைவிட ஒருமோச
மான கீழ்த்தரமான சமூகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா 
என்ன?

இன்னும் அல்பானி ஹதீதுகளை மோசடித்தனம் செய்பவராகும் என்பதோடு ஹதீதுக்கு சுயமானதோர் விளக்கம் தருபவர்
கண்டிப்பாக முன்னோர்களின் விளக்கத்திற்கு மாறான புதியதோர்
விளக்கத்தை தான் கூறுவார். இப்படி சுய விளக்கம் தருவோரை
குறித்து நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள்
இவர்கள் பொய் தஜ்ஜால்கள் என்றும், இத்தகையோரை பின்பற்
றுவதை குறித்து உங்களைதான் எச்சரிக்கிறேன் என்றும் கூறியுள்ள
வார்த்தை உங்களுக்கு நினைவிருக்குமென்று எண்ணுகிறோம்.


நஜ்திய உலமாக்களே! சுவூதிய மன்னர்களே! 

எங்களின் உயிர் நாடியான உயிருக்கும் மேலான உயிருக்குள்
உயிராக உறைந்துள்ள உத்தமத் திருநபி صلى الله عليه و سلم   வர்களின் புனித தேகத்தை தனக்குள் கொண்டுள்ள
இடமானது எங்களுக்கு ஹரமை விட என்பதல்ல. அர்ஷை
விடவும் மேலான ஒன்றாகும். ஆனால் அப்புனித இடம் உங்கள்
பார்வைக்கு நீங்கள் சிலை வணங்கிகளின் அரவணைப்பில் வாழுவதால் சிலையாகத் தென்படுகிறது. அதனால் தான் அதை உடைக்க
வேண்டும். 

கட்ரை அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம்
மாறி மாறி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.
ஆம். 450 வருடங்களாக ஓலமிட்டு வரும் நீங்கள் அல்லாஹ்வின்
மீதாணையாக ஒருக்காலும் செய்யவே முடியதென்பது மட்டும்
திண்ணம்.

இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்குச் செய்த ஏன் இன்றைக்கும்
செய்து கொண்டுள்ள அராஜகங்களில் இதுவும் ஒன்றாகும்.
அதாவது, உங்களின் கொள்கைக்கு மாற்றமான நூல்களை
இல்லாமலாக்குவதும், அதனுடைய அறிவிப்பாளர்களை ஆய்வு
செய்வது போல பாசாங்குக் காட்டி அவர் மீதுள்ள குற்றச்சாட்டை
மட்டும் எடுத்துக் காட்டி ஹதீதைப் பொய்யாக்குவதும் அல்லது
வசனங்களை மாற்றியமைப்பதும் தான் நீங்கள் இஸ்லாத்திற்கு
செய்யும் துரோகங்களில் மாபெரும் துரோகமாகும். 

இதற்கு உதாரணமாக "அல் அத்கார் என்னும் நூல் இமாம் நவவிக்குச் சொந்தமானதாகும். இந்த நூல் ஹிஜ்ரி 1409ல்  ரியாதிலுள்ள தாருல் ஹுதா பதிப்பகத்தில் அச்சானபோது அந்நூலின் 295ம் பக்கத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அவர்களின் ரவ்லா ஷரீபை தரிசிப்பது தொடர்பான பாடம் எனத் தலைப்பிட்டிருந்த தலைப்பானது , நாயகம் அவர்களின் பள்ளியை தரிசிப்பது தொடர்பான பாடம் என்பதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதில் சொல்லப்பட்டிருந்த உத்பா உடைய சம்பவம்  உட்பட பலவிஷயங்கள் அகற்றப்பட்டு அச்சிடப்பட்டிருந்தது. அந்நூலின் முஹக்கிக்கான அப்துல் காதிர் அர்னாவூத் என்பார் அந்த அச்சகத்தாரிடம் கேட்ட பொழுது அவர்களால் தரப்பட்ட பதிலுக்குரிய எழுத்துப் பிரதி நம்மிடம் இருக்கிறது ".

"ஹனபி மத்ஹபின் சட்டக் கோர்வையான இப்னு ஆபிதீனுடைய ஹாஷியாவில் அவ்லியாக்கள் , அப்தால்கள் , நல்லடியார்கள் பற்றிய பகுதி நீக்கப்படுள்ளது . "

"இப்னு தைமிய்யாவுடைய  பத்வாவுடைய 10ஆம் பாகமான தஸவ்வுப் தொடர்பான பாகம் நீக்கப்படுள்ளது ". என்பன போன்றவைகளை குறிப்பிடலாம் . 





Tuesday, 16 June 2020

நஜ்திய உலமாக்களுடன் ஒரு நிமிடம் -1

ஷைகுன் நஜ்தி முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபால் தோற்றுவிக்கப்பட்ட மத்ஹபானது வழிகேட்டின் ஊற்றுக்   கண்ணாக திகழ்ந்ததோடு , முஸ்லீம்களும் ,முவஹ்ஹிதீன்களும் காபிர்களெனத் தீர்ப்பளிக்கப்பட்டு ,ஆண்கள் கொல்லப்பட்டும் ,பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டும் கேவலப்படுத்தப்பட்டனர் .அத்தோடு தாங்கள் விரும்பியவாறு எல்லாம் மனம் போன போக்கில் குர்ஆனுக்கும் , ஹதீதுக்கும் விளக்கமளித்தனர் . இவையனைத்தும் உண்மையிலேயே புண்ணிய பூமியான குர்ஆன் இறங்கிய மண்ணில் நபிகள் நாயகம் அவர்களும் ,அவர்களது அருமைத் தோழர்களும் நடமாடிய மண்ணிலேயே இப்படிப்பட்டதோர் நிலை ஏற்படுத்தப்பட்டதென்றால் அவர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் ?

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை முஷ்ரிக்குகள் என்றும் .அஜமிகளான நம்மை அடிமைகளென்றும் கருதக்கூடிய சவூதிய நஜ்த் உலமாக்களையும் , இப்னு சவூதின் மன்னர்களையும் இப்போதும்கூட மதிப்பவர்கள் ,அவர்கள் தங்களின் நாவால் ஏகத்துவ கலிமாவை உச்சரிக்கிறார்களே என்னும் ஒரே காரணத்திற்காக தான் . நாவால் கலிமாவை உச்சரித்து உள்ளத்தால் முனாஃபிக்குகளாக இருந்தாலும் அவர்களை குறித்து இப்படிப்பட்ட நிலைப்பாட்டை உடைய , சகல நிலைகளிலும் மூஃமின்களாக உள்ள  அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரை  உதாசீனப்படுத்தும் வேலையைத் தான் அவர்கள் செய்கின்றனர் .

இவர்களால் முன்னொரு காலத்தில் தானே இப்படியெல்லாம் நடந்தது . இப்போது அப்படியெல்லாம் இல்லையே . முன்பு நடந்ததைச் சொல்லி இப்போது முஸ்லிம்களின் ஒற்றுமையை நாம் சிதைக்கப் பார்க்கின்றோம் என்று நீங்கள் சொல்லலாம் . அதனால் தான் இவர்கள் இஸ்லாமியர்களுக்கு இழைத்த கொடுமைகளை எல்லாம் இவர்களை ஆதரிக்கும் இந்திய உலமாக்களைக் கொண்டே ஆதாரப்படுத்திய நாம் ,அவைகளெல்லாம் அப்பட்டமான உண்மை என்பதோடு இன்னும் அதே நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை குவைத் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சரும் , இஸ்லாமிய சட்டசபை அமைச்சருமாக இருந்த ஷெய்கு அஸ்ஸெய்யித் யூசுப்  இப்னு ஹாஷிமுர்   ரிபாயி அவர்களின் நூலாகிய "நஜ்திய சகோதர உளமக்களுக்கு ஓர் உபதேசம் (நஸீஹா லி இக்வானினா உலமா நஜ்த் )" என்னும் நூலிலிருந்து சில கருத்துக்களை எடுத்து உங்களின் பார்வைக்கு தருகின்றோம் .

ஷெய்கு அஸ்ஸெய்யித் யூசுப்  இப்னு ஹாஷிமுர்   ரிபாயி


* "உங்களோடு தொழுது கொண்டும் , நோன்பு நோற்றுக் கொண்டும் ,ஸகாத் கொடுத்துக் கொண்டும் , திரும்பத் திரும்ப ஆண்டவனே உனக்கே நாங்கள் வழிபட்டோம் . உனக்கு யாரும் நிகரில்லை . நிச்சயமாக புகழனைத்தும் உன்னையே சாரும் . அதிகாரமும் உனக்கே உரியது எனக் கூறும் முவஹ்ஹிதீன்களான முஸ்லிம்கள் மீது பழி சுமத்தக் கூடாது "  என்று சொல்லப்பட்ட பண்புக்குரிய நல்லடியார்களுடைய விஷயத்தில் இப்போதும் முஷ்ரிக்குகள் என்னும் கருத்தில்தான் இவர்கள் இருக்கின்றனரா இல்லையா ?



*  " இஷா தொழுகை முடிந்ததும் நாயகம் அவர்களின் கண்ணியத்திற்குரிய பள்ளிவாசலை மூடி விடுகிறீர்கள் . இது இஸ்லாமிய வரலாற்றில் எங்குமே காணப்படாத ஒன்றாகும் . இவ்வாறே அப்பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பதையும் , தஹஜ்ஜத் தொழுவதையும் தடுக்கிறீர்கள் " இது ஏன் ? இதற்கு என்ன காரணம் ? இந்த உரிமையை உங்களுக்கு தந்தது யார் ? உங்களை யாராலும் கேட்க முடியாது என்ற அகம்பாவம் தானே ? உங்களுக்கு உலகத் திருத்தூதர் நாயகம் அவர்கள் மீது ஏன் இந்த வெறுப்பு ?


  * " புண்ணிய பூமியான மதீனா முனவ்வரா மற்றும் மக்கா முகர்ரமாவின் வெளிப்பகுதியில் இறப்பெய்தும் முஸ்லிம்களை அங்குள்ள ஜன்னத்துல் முஅல்லாவிலும் ,ஜன்னத்துல் பஃகீ யிலும்   நல்லடக்கம் செய்வதை ஏன் தடுக்கின்றீர்கள்   ? அல்லாஹ்வும் , அவன் றஸுலும் நேசிக்கின்ற அப்புண்ணிய பூமியில் நல்லடக்கம் செய்ய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகளை பெற்றுக் கொள்வதை விட்டும் முஸ்லிம்களை நீங்கள் தடுக்கின்றீர்கள் ".

ஜன்னத்துல் பகீஃ பற்றி அண்ணலெங்கோமான்  அவர்கள் என்ன சொலிகிறார்கள் என்று பாருங்கள் .


" அதிலிருந்து மறுமை நாளன்று பதினான்காம் பக்கத்து நிலவைப் போன்ற தோற்றத்தில் எழுபதாயிரம் பேர் எழுப்பப்படுவார்கள் . அவர்களனைவரும் கேள்வி கணக்கின்றி சுவர்கத்துக்குள் நுழைவார்கள் ".


"எங்களது இம்மையவாடியில் யார் அடக்கம் செய்யப்படுகிறாரோ அவருக்கு நாம் ஷபாஅத்து செய்வோம் . அல்லது அவருக்கு நாம் சாட்சி சொல்வோம் என்கிறார்கள் ஏந்தல் நபி அவர்கள் "

[ நூல் :  அத்துர்ரதுஸ்  ஸமீனா ஃபீ தாரீகில் மதீனா  ,   பக்கம் -229]

ஸவூதியின் வஹாபிய உலமாக்களே ! இந்த நபிமொழிகள் உங்களுக்கு தெரியாதா ? அல்லது நீங்கள் ஷபாஅத்தை பொய்ய்யாக்கும் கூட்டமா ?

" விசுவாசிகளே ! உங்களின் தொனியை நபிகள் நாயகம் அவர்களின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் . இன்னும் உங்களில் ஒருவரை இன்னொருவர் அழைப்பதைப் போன்று நபியவர்களை அழைக்காதீர்கள் . அன்றி அவ்வாறு செய்வீர்களாயின் உங்களது  வணக்கமெல்லாம் தவிடு பொடியாகிவிடும் . ஆனால் அதை உங்களால் புரிந்து கொள்ளமுடியாது . "

என்பதாக அல்லாஹ் வன்மையாக எச்சரித்த பின்னும் நாயகம் அவர்களின் தர்பாரில் அவமரியாதையாக நின்று கொண்டு உரத்த குரலில் சப்தமிடுவதற்காக சிலரை அமர்த்தீயுள்ளீர்களே .அல்லாஹ்வை அஞ்சாத யூத ,கிறிஸ்தவர்களின் பொம்மைகளா நீங்கள் ?


* அருமை நாயகம் அவர்கள் தங்கள் முபாரக்கான கரத்தால் சகோதரர் உஸ்மான் இப்னு மழ்வூன் அவர்களின் கப்ரை அடையாளம் கண்டு கொள்வதற்காக கல் ஒன்றை வைத்தார்கள் .

"யார் அக்கல்லை பாய்ந்து தாண்டுகிறாரோ அவர் எங்களில் அதிக  உயரம் தாண்டுபவர் என்று கணிக்கப்படும் அளவுக்கு அக்கல் உயரமானதாக இருந்தது ".

அனால் நீங்கள் அருமை ஸஹாபா பெருமக்கள் , உம்மஹாத்துல் முஃமினீகள் ,அஹ்லுஸ் பைத்தினர்களின் சங்கைமிகு கப்ருகளையெல்லாம்      சுடுகாட்டைப் போலாக்கி விட்டீர்கள் .குப்பாக்கள் மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்வு ?

* " அருமை நாயகம் அவர்களின் தர்பாருக்கு அருகிலேயே காரியாலயம் ஒன்றை அமைத்து நபியவர்களின் முன் அழுது பிரார்த்திப்பவரையும் , உள்ளச்சத்தோடு காணப்படுபவரையும் அதிகமாக ஸியாரத்துச் செய்பவரையும் அழைத்து விசாரணை நடத்துவது ஏன் ? "



* " கொடை வள்ளல்களில் ஒருவர் தமது சொந்த செலவில் கந்தக் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஹழ்ரத் செய்யிதினா ஸித்தீகுல் அக்பர் அவர்களின் அப்பள்ளிவாசலை உடைத்து புனர்நிர்மாணம் செய்வதற்கு அனுமதித்தீர்கள் . ஆனால் பழைய பள்ளிவாசல் உடைக்கப்பட்ட பின் அப்பள்ளியை புனர்நிர்மாணம் செய்யவிடாமல் அவரை ஏன் தடுத்து விட்டீர்கள் . அத்துடன் அப்பள்ளி அடைக்கப்பட்டதைக் கண்டு சந்தோசம் அடைகின்றீர்கள் "

* " ஆரிபுபில்லாஹ் முஹம்மத் ஸுலைமான் ஜஸுலி  அவர்களால் கோர்வை செய்யப்பட்ட  ஸலவாத் நூலை  ஓதுவதை தடுப்பதோடு ,மவ்லித் ,மீலாத் போன்ற நிகழ்ச்சிகளையும் வன்மையாக ஏன் கண்டிக்கின்றீர்கள் ? "

* " நாஸிருல் அல்பானி , முக்பில் இப்னு ஹாதி போன்ற  அல்லாஹ் ரஸூலின் விரோதிகளை அவர்கள் விரும்பும் கருத்துகளை சொல்ல அனுமதித்தது ஏன் ? "

அல்பானி 'அஹ்காமுல்  ஜனாயிஸி வபிதஹியாவிலும் ' , முக்பில் இப்னு ஹாதி   போன்ற அல்லாஹ் ரசூலின் விரோதிகளை அவர்கள் விரும்பும் கருத்துகளை சொல்ல அனுமதித்தது ஏன்


அல்பானி 'அஹ்காமுல் ஜனாயிஸி வபிதயிஹாவிலும்' மற்றும்  

முக்பில் இப்னு ஹாதி ' ஹவ்வில் அல் குப்பத்த மப்னிய்யத அலா கப்ரிர் ரஸூல் ' என்பதிலும் பகிரங்கமாக நபியவர்களின் ரவ்லா ஷரீபின் மீது கட்டப்பட்டுள்ள குப்பா பித்அத் என்று தீர்ப்பளித்து அப்பள்ளியில் இருந்து நபி அவர்களின் கபூரை அப்புறப்படுத்த வேண்டும், குப்பாவை உடைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்த பின்னரும் அந்நூலை ஏன் பிரசுரித்து கொண்டு இருக்கிறீர்கள் ?


அப்படி என்றால் நீங்கள் எல்லாம் முன்னொரு காலத்தில் காத்தமுன் நபி அவர்களின் திருவுடலை திருட வந்த திருட்டுக் கூட்டத்தின் சகாக்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா ?


இந்த முக்பில் இப்னு ஹாதியின் மாணவர்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் பின் யஹ்யா என்பார் ' கவாரிவுல் அஸி ன்னத்தி பிர்ரத்தி அலா அதாயிஸ் ஸுன்னத்தி ' என்னும் நூலின் 28 வது பக்கத்தில் சிலை வணங்கிகள் என்னும் தலைப்பில் எங்களுடைய காலத்தில் சிலை வணக்கங்கள் அதிகரித்து விட்டன .அச்சிலைகளில் ஒன்றுதான் நபியவர்களுடைய புனித மிகு ரவ்ழாவாகும் எனக் கூறுகிறார் .

ஷைகு நஜ்தியின் குடும்பத்தார் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அவர்களின் புனித ரவ்லா ஷரீப் இனை ஒரு சராசரி மனிதன் கூட சொல்ல முடியாத
வாக்கியங்களைக் கொண்டுகொஞ்சம் கூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர் . அதேநேரம் இவர்களுக்கு முழுக்க முழுக்க உதவிசெய்யும் அந்நாட்டு மன்னர்களில் ஒருவரான அமீர் பைஸல் , அந்த நாட்டின் துணை பிரதமராக இருந்தபோது (1959ஆம் ஆண்டு ) இந்தியாவுக்கு வருகை தந்தவர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதாக நவாயே வக்த் என்னும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டியிருந்தது கவனிக்கத்தக்கதாகும் .

[ நூல் - தாரீக் நஜ்தோ ஹிஜாஸ் , பக்கம் 424]