Monday, 27 January 2020

இந்தியாவில் வஹாபியிசம்

ஆசிய கண்டத்தில் குறிப்பாக இந்திய நாட்டில் முஸ்லிம்கள் பெருமையோடு , தலைநிமிர்ந்து யாருக்கும் அஞ்சாமல் நடமாடிய ஒரு காலமிருந்தது . முஸ்லிங்கள் என்றால் அவர்கள் அனைவரும் ஒரே கொள்கையுடைவர்களாக அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினராக இருந்ததோடு, தஸவ்வுப்   உடைய காதிரிய்யா , ஷாதுலிய்யா , சிஷ்தியா , நக்ஷ்பந்தியா , ரிபாயிய்யா போன்ற தரீக்காக்களில் இணைந்தவர்களாகவும் , நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர் . முகல்லிதுகளான தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளும் தம்மை சிஷ்தியா தரீக்கா வழிமுறையை பின்பற்றுவோர் என்று சொன்னவர் தாம் .

இதில் அல்லாஹ்வின் நேசர்களான வலிமார்கள் தான் இந்த தரீக்காக்களை அமைத்து இஸ்லாத்தை நாடு தழுவிய அளவுக்கு எடுத்துச் சென்றவர்களாகும் . ஹிந்துல் வலி கரீப் நவாஸ் ஹழ்ரத் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி   அஜ்மீரி رضي الله عنه‎  அவர்களின் கரம்பற்றி 90 லட்சம் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள் என்றால் இது அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அருட்கொடையாகும் .

ஆம் .இஸ்லாத்தின் வளர்ச்சியை எப்போதுமே சகித்துக் கொள்ள முடியாத காபிர்கள்  அரபு மண்ணில் கண்ட வெற்றியைப் போல அஜமிகளையும் அவ்வாறு சிக்க வைப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிநோக்கி காத்திருந்தனர் .
யார் மூலமாக இதை செயல்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இஸ்லாத்தை கூறுபோட்டு , முஸ்லிம்களிடையே மார்க்கத்தின் பெயரால் கலகத்தை ஏற்படுத்தி , முஸ்லிம்களே முஸ்லிம்களை துண்டாடுவதற்காக சிலரை அவர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஊதியமும் வழங்கி ஊக்குவித்தனர் .  அவர்கள் யாரென்று  பாருங்கள் .

1 . இந்தியாவின் அலிகர் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சர் செய்யித் அஹ்மத் .

2. லாகூரிலுள்ள ஸீனபுவாலி பள்ளிவாசலின் இமாம் அப்துல்லாஹ் சக்டாலவி   .

3. அஹ்மத் தீன் பங்வீ .

4. அஸ்லம் சிறாஜ்புரி .

5. நியாஸ் பதஹ்பூரி .

6. மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி

ஆகியோராகும் .

குலாம் அஹ்மத் காதியானி

இதில் பிரபலமான குலாம் அஹ்மத் காதியானியை வெறுக்கத் தெரிந்த நமக்கு அவருடைய பேச்சுக்கும் , கருத்துக்கும் அடித்தளம் அமைத்து தந்தவர் யார்  என்பதை மட்டும் நாம் தெரிந்து கொள்ள முயலவில்லை . அவர்தான் இங்கே முதல் நபராக குறிப்பிடப்பட்டிருக்கும் சர்
செய்யித் அஹ்மத் .
சர்  செய்யித் அஹ்மத்

ஸெய்யிதினா ஹழ்ரத் ஈஸா عليه السلام அவர்கள் இறந்து விட்டார்கள் என்னும் காதியானிகளின் கருத்தை முதன் முதலில் இந்திய மண்ணில் பேசியவர் சர்
 செய்யித் அஹ்மத்  தானென்று கூறுகிறார் மவ்லவி ரபீக் சாஹிப் திலாவரி என்பவர் . இத்தகவல் ரயீஸ் காதியான் என்னும் நூலின் பாகம் -1, பக்கம் 176 ல் குறிப்பிடப்பட்டிருப்பதோடு , 20/05/1916ல் வெளியான ' அல் பழ்ல் ' என்னும் காதியானிகளின் பத்திரிக்கையிலும் பிரசுரிக்கப்படுள்ளது   .

இதில் சர் செய்யித் அஹ்மதை மவுனமாக்கி மிர்ஸா குலாம் அஹ்மதை பிரபல்யப்படுத்தியது ஆங்கிலேயர்கள் தான் . இது இந்திய தேசத்தில் காபிர்களுக்கெதிரான இந்திய முஸ்லிம்களின் குரலை திசை திருப்புவதற்காக ஆங்கிலேயர்களால் கையாளப்பட்ட குள்ளநரித்தனமான செயலாகும் .

காதியானிகள் தங்களின் கருத்துக்களை பிரபல்யப்படுத்தி முஸ்லிம்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியதோடு மறுபக்கம் சர் செய்யித் அஹ்மதை  காபிர்களுக்கு எதிராக பேசப்படும் பேச்சுக்களை நிறுத்திவிட்டு காபிர்களோடு அறப்போர் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மூடி மறைத்துவிட்டு முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை முதலில் சரி செய்ய வேண்டுமென பிரச்சாரம் செய்வதற்காக அவரை தூண்டி விட்டனர் .

இஸ்மாயீல் திஹ்லவி

இதற்காகப் பயன்படுத்தப்பட்டவர் தான் இஸ்மாயீல் திஹ்லவி என்பவராகும் . இவர் செய்யித் அஹ்மத் ரேபரேலியின் முரீது என்பதே அதன் மூல காரணமாகும் . இஸ்மாயீல் திஹ்லவி என்றழைக்கப்படும் இவர் கைர் முகல்லிதுகளான அஹ்லே ஹதீத் தரப்பாலும் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினராலும்  முஜத்தித் என்றும் , ஷஹீத் என்றும் புகழ்ந்து பேசப்படுகிறார் .

இஸ்லாமிய மார்க்கத்தில் தோன்றிய  பிரிவினைவாதிகளில், நான்கு  மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்ற முகல்லிதுகளான வஹாபியக் கொள்கையுடையோரும் , நான்கு  மத்ஹபுகளில் எதையுமே ஏற்றுக்கொள்ளாத கைர் முகல்லிதுகளான வஹாபிகளும் என இரு பிரிவினர் தான் வெவ்வேறு பெயர்களில் முஸ்லிம்களிடையே  அறிமுகமாகியுள்ளனர் என்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .

இதில் முகல்லிதுகளான தேவ்பந்தி வஹாபிகளும் , கைர் முகல்லிதுகளான வஹாபிகளும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்பவர்கள் என்றல்லவா நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் . அத்துடன் இருவரும் இருவேறு கொள்கையுடையவர்கள் என்று நீங்கள் யோசிக்கலாம் .ஆனால் உண்மை அதுவல்ல . இவ்விஷயத்தில் இவ்விருவர் மட்டுமல்ல . மூன்றாவதான காதியானிகள் கூட இவர்களோடு மோதிக் கொள்ளத்தான் செய்கிறார்கள் .

ஒருவரை ஒருவர் எதிர்த்தும் பேசுகின்றனர் . நூல்கள் தொகுத்து வெளியிடுகின்றனர் . இப்படியெல்லாம் செய்தால்தானே இவர்களைப் பின்பற்றும் அப்பாவிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வர் . இதற்காகத்தானே ஆங்கிலேயர்களும் இவர்களை உருவாக்கினார்கள் . ஆனால் இவர்களைப் பொறுத்தவரை இவர்கள் உள்ளுக்குள்ளே ஒரே கொள்கையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல . பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் வளர்ப்புப் பிள்ளைகளும் கூட .

முஸ்லிம்களை துண்டாடி அவர்களுக்கிடையே பகைமை என்னும் நெருப்பை கொளுந்து விட்டெறியச் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஆயுதமாகும் . இன்னொரு மாபெரும் உண்மையென்னவெனில் இந்த ஆங்கிலேயர்கள் வகுத்து தந்த கொள்கைகள் தாம் ஷைகு நஜ்தியால் சொல்லப்பட்ட கருத்துக்களாகும் .

மேலும் இந்த இயக்கங்களுடைய மறுபக்கத்தை அறியாதவர்களும் , இவர்களின் பூர்வீக சரித்திரத்தை தெரியாதவர்களும் தான் தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தினர் , வஹாபியிசத்தையும் காதியானிகளையும் வன்மையாக எதிர்ப்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு அலைகின்றனர் . ஆனால் இவர்களனைவரும் காபிர்களால் வளர்க்கப்பட்டவர்கள் . அவர்களிடம் மாதாமாதம் ஊதியம் வாங்கித் தின்று அவர்களின் காலை நக்கிக் கொண்டிருப்பவர்கள் .

 இந்த உண்மையை மறைப்பதற்காகவே பல பேருடைய பெயரால் பல இயக்கங்களை இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்துகின்றனர் . எனவே இவ்வியக்கங்களில் ஒன்று மற்றோன்றை எதிர்ப்பதைப் பார்த்து நம்மவர்கள் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .


ஏனெனில் தேவ்பந்திகளும் , அஹ்லே ஹதீத் , தவ்ஹீத் ஜமாத்,ஜமாத்தே இஸ்லாமி , காதியானி  இயக்கத் தலைவர்கள் போன்ற இவர்கள் எல்லோருமே ஆங்கிலேயரின் அடிமைகள்தான் . இவர்களின் இயக்கங்களும் , இவர்களால் வெளியிடப்படும் நூற்களும் வஹாபிய நச்சுக் கருத்துக்களை கொண்டதாகத் தான் அமைந்ததுள்ளது  .   ஆனால் தற்போதுள்ள தொழுகைக்கு அழைக்கும் தப்லீக் ஜமாத் இயக்கத்திலுள்ளவர்கள் அப்படிபட்டவர்கள் இல்லையே என்று நீங்கள் யோசிப்பீர்களாயின் அதற்குமுன் 'தாம்பரம் கமால் ' என்பவர் எழுதிய "நீங்கள் எந்த கூட்டம் " என்ற பக்வாசஸுக்குரிய நுலைப் படித்தபின் முடிவு செய்யுங்கள் .

ஜனாப் கமால் அவர்கள் அந்த நூலில் , ஹாமித் பக்ரி , பீ. ஜைனுல் ஆபிதீன் போன்றோரையும் ,அவர்களை ஆதரிப்போரையும் நாத்திகர்களை விட கேவலமானவர்கள் என்று கூறுகிறார் . குர்ஆனின் வசனங்களையெல்லாம் திரித்து கூறுவதாக  குற்றம் சாட்டும் இவரும் , இவரைச் சார்ந்த இயக்கமும் அதே காரியத்தைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும் ! ஆதலால் இவர்களனைவருமே வழி தவறிய கூட்டமென்றுதான் நாம் சொல்லுவோம் .

மேலும் இவ்வியக்கங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோர் " வஹ்ஹாபியத் கா போஸ்ட்மார்ட்டம் , நஜ்த் ஸே காதியான் பிராஸ்தா தேவ்பந்த் , வஹ்ஹாபி மத்ஹப் " போன்ற உர்து மொழியிலுள்ள நூற்களை பார்க்க வேண்டும் .  அத்துடன் அந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாம் பொய்யனாவை ,இட்டுக்கட்டப்பட்டவை ,பொறாமையால் புளுகியவை என்றெல்லாம் சொல்லப்படுவதை கண்டு ஏமாந்துவிடாதீர்கள் .


உதாரணமாக , முகல்லிதுகளான (மத்ஹபை பின்பற்றுபவர்கள் ) தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளான தொழுகைக்கு அழைக்கும்   இயக்கம் என்று தம்மை கூறிக் கொள்பவர்களைச் சார்ந்தவர்களின்  முன்னோடி மவ்லவி அஷ்ரப் அலி தானவி  என்பார் , ஹிஜ்ரி 1336ஆம் ஆண்டு ஸபர் மாதம் வெளிவந்த அல் இம்தாத் என்னும் பத்திரிக்கையின் கேள்வி பதில் பகுதியில் , அஷ்ரப் அலி தானவியை விரும்பும் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்கின்றார் .



அதாவது , நான் கனவில் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்னும் கலிமாவை ஓதுவதற்குப் பதிலாக அஷ்ரப் அலி ரஸுலுல்லாஹ் என்று ஓதுகின்றேன் . இவ்வாறு ஓதுவது தவறென்று எனக்கு தெரிகின்றது . அதே நேரம் நான் என் வசத்தில் இல்லை . அதன்பின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அத்தவறை திருத்திக் கொள்ளும் வகையில் ஸலவாத்து சொல்ல நினைத்து ஸலவாத்தை ஓதிய பொழுது , அது அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா வநபியினா  வமவ்லானா அஷ்ரப் அலி என்று வருகின்றது . இதே நிலை மறுநாளும் தொடர்கின்றது . அதற்காக நான் மிகவும் அழுதேன் . என்ன செய்வது ? நான் என் வசத்தில் இல்லை . அத்துடன் நிர்பந்திக்கப்பட்டவனாகவும் இருக்கின்றேன் . இதன்றி வேறுபல காரணங்களும் உள்ளன . நான் தங்களை மிகவும் நேசிக்கின்றேன் . இதற்கு மேல் என்ன சொல்ல ? எனக் கேட்கின்றார் .


அதற்கு மவ்லவி அஷ்ரப் அலி தானவி ,இச்சம்பவத்தில் அமைதி இருக்கின்றது . நீர் யாரை நோக்கி திரும்புகின்றீரோ அவர் சுன்னத்துகளை பின்பற்றுவராகும் என்று பதில் கூறுகிறார் . இதைத் தவறென்று ஸுன்னத் வல் ஜமாத்தைச் சேர்ந்த பல்வேறு உலமாக்கள் எடுத்துக் காட்டியதற்கு ,  தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தின் மவ்லவி ஜகரிய்யா என்பார் , ' தேவ்பந்த் ஸே பரேலி தக் ' என்னும் நூலில் , ' பவாயிதுஸ்   ஸாலிகீன் ' என்னும் நூலை ஆதாரமாகக் காட்டி , ஹிந்துல் வலி ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் அஜ்மீரி சிஷ்தி  رضي الله عنه‎  அவர்களிடம் பைஅத்து பெறுவதற்காக வந்த ஒருவரிடம் சிஷ்தி ரஸுலுல்லாஹ் என்று கூறுமாறு சொன்னதாகவும் , இதேபோல் அல்லாமா ஷிப்லி رحمه الله அவர்களிடம்  பைஅத்து  பெறுவதற்காக வந்த ஒருவரிடம் ஷிப்லி ரஸுலுல்லாஹ் என்று கூறுமாறு சொன்னதாகவும், அப்படியானால் இவர்களை பற்றி என்ன கூறுவீர்கள் என்று கேட்கின்றார் .

இது மொட்டை தலைக்கும்  முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்ற வேலை . அத்துடன் இஸ்லாத்தை சீர்குலைக்க நினைக்கும் எவர் வேண்டுமானாலும் மேற்கண்ட மவ்லவி ஜகரிய்யா  கூறுவதைப் போல தம்மை ரஸூல் என்று வாதித்து விட்டு அதன்பின் நான் என் சுயநினைவில் சொல்லவில்லை . அத்தோடு ஷிப்லி رحمه الله மற்றும் காஜா முயீனுத்தீன்  رضي الله عنه‎  அவர்களும் தம்மை ரஸூல் என்று வாதித்திருக்கும் போது நான் மட்டும் சொன்னால் தவறாகி விடுமா ? எனக் கேட்பதைப் போலுள்ளது இவருடைய வாதம் . ஆக தொழுகைக்கு  அழைக்கும் இயக்கம் என்னும் பெயரில் முகல்லிதீன்களிலுள்ள  வஹாபிகளான இவர்கள் வடிகட்டிய வஹாபிகள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் .

ஆனால் அதேநேரம் சமீபகாலமாக தமிழகத்தில்  தங்களை சிஷ்தியாவுடைய தரீக்காவாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களான ( நூரிஷாஹ் உடைய தொடர்பில் உள்ள பைஜி ஷா , ஜூஹூரி ஷா ,ஐனி ஷா , முஹிப்பி ஷா ,இர்பானி ஷா ,ஆமிரி ஷா,நிஜாமி ஷா  , பிலாலி ஷா இன்னும் மற்ற ஷாக்கள் மற்றும் ஆரணி கமாலுத்தீன் பாகவி உடைய தொடர்பில் உள்ள ஸில்ஸிலா ,அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்திற்கு மாற்றமான  போலி தரீக்காவாதிகள் ) என்று குறிக்கொள்வோர் வெளியிட்டுள்ள  நூரிஷா நினைவு மலரில் மவ்லானா ஸகரிய்யா உடைய அதே வாதத்தை தான் இவர்கள் மீண்டும் வாந்தி எடுத்துள்ளனர் .மேலும் நூரி ஷா , ஆரணி பாகவி ஆகியோருடைய ஸில்ஸிலாவும் இந்த தேவ்பந்தி தப்லீக் ஜமாத் வஹாபிகளின் முன்னோடிகள் மூலம் தான் தொடர்கின்றது . 


ஆக இவர்கள் தரீக்கா என்னும் பெயரில் உலா வந்து கொண்டுள்ள வஹாபிகளாகும் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்  .    இதெல்லாம் அவர்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களால் கையாளப்படும் தந்திரங்களில் ஒன்றாகும் . இந்த இயக்கங்கள் பற்றி இந்திய தேச உலமாக்களால் சொல்லப்பட்டிருப்பதோடு , அவர்கள் சவால் விட்டதற்குரிய ஆதாரமும் இருக்கின்றது  என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒன்றாகும் .

ஆதலால் தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று பொதுவில் சொல்லப்படும் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத்தை  ஆதரிக்கும் உலமாக்கள் மவ்லவி இல்யாசால் ஆரம்பிக்கப்பட்ட தப்லீக் ஜமாத்தை விட்டு நீங்கி விட்டு நல்லடியார்களான நாதாக்களுடன் இணைந்து சத்தியத்தை பாதுகாக்க துணை புரியுமாறு பணிவன்புடன் அழைக்கின்றோம் . இல்யாஸி தப்லீக் ஜமாத் நல்லெண்ணத்திலோ , குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டோ தோற்றுவிக்கப்ட்ட இயக்கமல்ல என்பதை அவ்வியக்கத்தின் பின்புலம் , வரலாறு தெரியாத உலமாக்களுக்கு மீண்டும் , மீண்டும்  தாழ்மையாக சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம் .






Wednesday, 15 January 2020

வஹாபியக் கொள்கை

இப்னு தைமிய்யாவின் கொள்கையைத் தான் ,இப்னு அப்துல் வஹாபும் அவரை பின்பற்றுவோரும் ,ஏனைய இயக்கங்களனைத்தும் செயல்படுத்தி வருகின்றன . ஆதலால் அவர்களின் கொள்கைகளிலிருந்து உதாரணத்திற்காக ஒரேயோரு கொள்கையை   மட்டும் உங்களின் பார்வைக்குத் தருகிறோம் . தூய சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும் உடையோர் முடிவை தாமாகவே யூகித்துக் கொள்வர் .

1.  நபிமார்களையும் , வலிமார்களையும் அழைத்து உதவி தேடுவது   ஷிர்க்கை உண்டாக்கும் .

[  நூல் : கிதாபுல் வஸீலா ,இப்னு தைமிய்யா ,பக்கம் -63 ]

2. நிச்சயமாக முஹம்மத் அவர்கள் தமக்கே ஒரு நல்லதை  செய்யவோ அல்லது தீயதைத் தடுக்கவோ சக்தி பெற்றவரல்ல .

[ நூல் : கஷ்புஷ் ஷுபுஹாத் , இப்னு அப்துல் வஹாப் நஜ்தி , பக்கம் - 6 ]

3. அல்லாஹ்வையும் ,அவனது ரஸூலையும் ,இறுதி நாளையும் ஈமான் கொண்ட ஒருவர் ,வலிமார்கள் ஒரு நல்லதைச் செய்யவோ அல்லது தீமையைத் தடுக்கவோ சக்தி படைத்தவர்கள் என்று நம்பிக்கை கொள்வதானது குப்ரை ஏற்படுத்தும் .

[ நூல் : அத்துரருந் நழீத் ஃபீ  இக்லாஸி கலிமதித் தவ்ஹீத் ,காழீ ஷவ்கானீ ,  பக்கம் -53 ]

4. அல்லாஹ் அல்லாத வேறொருவரிடம் உதவி தேடுபவர் குப்ரை செய்துவிட்டார் .

[ நூல் : மஜ்மஅத்துத் தவ்ஹீத் , அப்துல் அஜீஸ் ஆலு சவூத் ,பக்கம் -112 ]

5. முஹம்மத் என்றும் அலீ என்றும் பெயர் வைக்கப்பட்டவர் எதற்கும் சக்தி கொண்டவரல்ல .

[ நூல் : தக்வீயத்துல் ஈமான் , தேவ்பந்தி தப்லீக் ஜமாத் மற்றும் அஹ்லே ஹதீத் இயக்கத்தின்  முன்னோடி  இஸ்மாயீல் திஹ்லவி ,பக்கம்- 42 ]

6. நபிமார்கள் ,வலிமார்கள் ,ஷுஹதாக்கள் , ஸாலிஹீன்கள் போன்ற அனைவருமே சரி சமமானவர்களே . ஆனால் சிலர் சிலரை அழைத்து உதவி தேடுகின்றனர் . இது தவறாகும் .

[ நூல் : தப்ஹீமுல் குர்ஆன் , ஜமாத்தே இஸ்லாமியின் முன்னோடி மவ்தூதி,  2: 532,533 ]

மேற்கொண்டோரின் கூற்றினை கொண்டு நபிமார்களும் , வலிமார்களும் , ஸாலிஹீன்களும் , ஷுஹதாக்களும் எதற்குமே லாயக்கில்லாதவர்கள் ( நவூதுபில்லாஹ் )    என்பதுதான் இவர்களனைவரின் கருத்தாகும் . இதில் இவர்கள் ஒவ்வொருவரும் அதைச் சொல்வதற்கென ஒரு பிரத்யேகமான பெயரையும் ,இயக்கத்தையும் தோற்றுவித்துக் கொண்டுள்ளனர் .

ஆக மொத்தத்தில் இவர்களனைவரும் அல்லாஹ் , ரஸுலுடைய மற்றும் வலிமார்களுடைய விரோதிகள் என்பதே எதார்த்தமாகும் . இனி இவர்கள் தமது கூற்றுக்களை உண்மையாக்குவதற்காக எடுத்து வைக்கும் ஆதாரங்களைக் பாருங்கள் ....


وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏

" இறுதிநாள் வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க முடியாத அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழிகெட்டவர்கள் யார் ? தங்களை அழைப்பதையே அவர்களால் அறிய முடியாது . "

[ ஸுரா அல் அஹ்காப் , வசனம்  5 ]

وَالَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَكُمْ وَلَاۤ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ‏

" அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் ,தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள் " 

[ ஸுரா அல் அஃராப் ,வசனம் 197 ]


 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏

" உமக்கு எவ்வித நன்மையையோ ,தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாத எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் . அவ்வாறு செய்வீராயின் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர் "

[ ஸுரா யூனுஸ் ,வசனம் 106 ]


وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَؕ‏

" அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்திக்கிறார்களோ அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்  .அவர்களால் பிரார்திக்கப்டுபவர்களும் படைக்கப்பட்டவர்களே "

[ ஸுரா அந் நஹ்ல் ,வசனம் 20 ] 

அத்துடன் ...



"நீர் கேட்டால் அல்லாஹ்விடமே கேளும் . இன்னும் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடும் " என்ற ஏந்தல் நபி ﷺ  அவர்களின் அமுதவாக்கையும் தங்களின் ஆதாரமாக காட்டுகின்றனர் . 

இவ்விஷயத்தில் இப்னு தைமிய்யா , முஹம்மத் இப்னு அப்துல் வஹாப் , மவ்தூதி , தேவ்பந்தி , அஹ்லே ஹதீத் , கைர் முகல்லிதீன்கள் என எல்லோருமே குர்ஆன் , ஹதீதுக்குரிய அதன் அஸல் பொருளைத் திருடி தங்களின் சுய விருப்பப் பிரகாரம்  பொருள் சொன்ன க்வாரிஜஜீன்களின் வாரிசுகள் தான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் ? 

மேற்கண்ட குர்ஆன் வசனங்களின் பொருட்கள் நம்மிடமுள்ள தர்ஜுமத்துல்  குர்ஆனிலிருந்து  எடுக்கப்பட்டதாகும் . இந்நூலின் ஆசிரியர் கூட இக்கூட்டங்களைச் சேர்ந்தவர் தான் என்பதே அப்பொருட்கள் சொல்லும் செய்தியாகும் .

இனி இவர்களின் கருத்துக்கு எதிராக குர்ஆனும் , ஹதீதும் என்ன சொல்கிறதென்பதைப் பார்ப்போம் . 


 مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ 

" அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார் என்று ஈஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் கேட்டபோது நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்பதாக ஹவாரிய்யீன்கள் சொன்னார்கள் "

[ ஸுரா ஸஃப் , வசனம்  -14 ] 


 وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏  هٰرُوْنَ اَخِى ۙ‏ اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏ 

" இன்னும் எனக்கு  எனது குடும்பத்திலிருந்து  ஒரு அமைச்சரை ஆக்குவாயாக . அவர் எனது சகோதரர் ஹாரூனாகும் . அவர் மூலமாக எனது பலவீனத்தை அகற்றி உறுதிப்படுத்துவாயாக என நபி மூஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள் "

[ ஸுரா தாஹா , வசனம் - 29,30,31 ] 


 فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ‏

" நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவியாளனாகும் . இன்னும் ஜிப்ரீலும் ,ஈமான் கொண்டவர்களில் நல்லடியாளர்களும் பின்னர் அமரர்களும் உதவியாளர்களாகும்  " 

[ ஸுரா அத் தஹ்ரீம் , வசனம் 4 ] 




"அருமை நாயகம் ﷺ   அவர்களால் எங்களுடைய வெளிரங்க அந்தரங்க விஷயங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்ற எண்ணம் கொள்பவர் காபிராகும் . மேலும் இரு உலகிலும் கைசேதப்படக் கூடியவர்களாகும் "  

[ தப்ஸீர் ஸாவி ]  



"ஹாபிழ் இப்னு முக்ரி  رضي الله عنها அவர்கள் கூறுகின்றனர் : நானும் ,ஹாபிழ் தப்ரானியும் , ஹாபிழ் இப்னு ஹிப்பானும் மதீனா முனவ்வராவில் இருக்கும் போது அத்தியாவசியத் தேவைகளுக்குரிய பொருட்கள் இல்லாததால் இரவு ,பகலாக நோன்பு நோற்றோம் .இஷாவுடைய தொழுகைக்கான நேரம் வந்தபோது நான் ,நாயகம் ﷺ  அவர்களின் ரவ்ளா ஷரீபிற்கு சென்று , அல்லாஹ்வுடைய ரஸுலே ! நாயகமே ! பசிக்கிறது ! என்று சொன்னேன் . அப்போது இமாம் தப்ரானி  رضي الله عنها உணவு வரும் அல்லது மரணம் வரும் எனக் கூறியவராக என்னை அமரச் சொன்னார்கள் . பின்னர் நானும் ,இப்னு ஹிப்பானும் தொழுகைக்கு தயாரான பொழுது வாசல்படியில் அலவி ஒருவர் வந்து நின்றார் . நான் கதவைத் திறந்த போது அவருடன் இன்னும் இரு வேலையாட்களும் இருந்தனர் . அவர்களது கரங்களில் மிகுதமான உணவு வர்க்கங்ககளைக் கொண்ட இரு பாத்திரங்கள் இருந்தன .அப்போது அவர் நாயகம் ﷺ  அவர்கள் எனது கனவில் தோன்றி ,நீங்கள் பசிப்பதாக முறையிட்டதாகவும் இவைகளையெல்லாம் உங்களுக்கு கொடுக்கும்படியாக உத்தரவிட்டார்கள் என்றும் கூறினார் "

[ நூல்  - ஸியர் அஃலாமின்    நுபலாஃ , பாகம்  -12 ,பக்கம் - 452 ] 



"அபுல் கைர் அல் அக்தஃ அத்தீனாதி என்பார் கூறுகிறார் : நான் பசித்தவனாக அருமை நாயகம் ﷺ  அவர்களின் ரவ்லா ஷரீபிற்கு வருகைதந்து ஆஜராகி ,அல்லாஹ்வின் ரஸுலே ! நான் உங்களுடைய விருந்தாளி ( எனக்குப் பசிக்கிறது ) என்றேன் . அதன்பின் மிம்பருக்குப் பின்னால் உறங்கி விட்டேன் . அப்போது தூக்கத்தில் நபியவர்களைக் கனவில் கண்டு அவர்களின் இரு கண்களுக்கும் இடையில் முத்தமிட்டேன் .  அப்போது நபியவர்கள் எனக்கு ஒரு ரொட்டியைக் கொடுக்க அதில் பாதியை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கண்விழித்து விட்டேன் . அப்போது மீதிப் பாதி எனது கையில் இருந்தது . "

[ நூல் - அத்துர்ரதுஸ் ஸமீனா ஃபீ தாரீகில் மதீனா , பக்கம் -225 . அவ்லியா வ கறாமத் ,பக்கம் -74 ] 

இன்னொரு சம்பவத்தை பாருங்கள் . அபுல் ஃபதஹ் இப்னு ஹசன் என்பார் அபூ அலிய்யுல் கஸ்ஸானி என்பவருக்குச் சொன்னதாக சொல்லப்படுவது : 
ஸமர்கந்த் என்னும் ஊரில் சில வருடங்களாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது . மக்கள் பலமுறை மழைக்காக பிரார்த்தித்து மழை பொழியவில்லை . இச்சந்தர்ப்பத்தில் அந்த ஊரை சேர்ந்த நீதிபதியிடம் ஸாலிஹான ஒருவர் வருகை தந்து , நான் ஒருகனவு கண்டேன் . அதன்படி நீங்களும் இவ்வூர் மக்களும் இமாம் புஹாரி  رضي الله عنها அவர்களின் கப்ருக்கச் சென்று அவர்களிடம் மழை வேண்டி பிரார்த்திப்போம் . அல்லாஹ் நமக்கு மழையை தரக் கூடும் என்று சொன்னார் .

அதுகேட்ட நீதிபதி உமது கனவு நனவாகட்டும் என்று கூறி அவரும் ,அவ்வூர் மக்களும் அங்கு சென்று மழைக்காக பிரார்த்தித்தனர் . அப்போது அல்லாஹ்வுடைய பேரருளால் மழை பொழிந்தது . கடுமையான அம்மழை காரணமாக ஏழு நாட்கள் வரை தமது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர்  . இமாமவர்களின் கப்ரு ஷரீபிற்கும் ஸமர்கந்திற்கும் இடைப்பட்ட தூரம் மூன்று மைல்களாகும் " 
   
[ நூல் - ஸியர் அஃலாமின்    நுபலாஃ , பாகம்  -10 ,பக்கம் - 320 ]

வஹாபிய முகல்லிதுகளும் ,கைர் முகல்லிதுகளும் அல்லாஹ் அல்லாதவர்களிடம் கேட்பது ஷிர்க்கென்று சொல்வது சரியா ? அல்லது குர்ஆனும் , ஹதீதும் சொல்வது சரியா ? என்பதை நீங்களே முடிவு செய்வதுடன் , இவ்வியக்கங்களின் குள்ள நரித்தனமான மார்க்கப் பணியைக் கண்டு ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கின்றோம் .

அத்துடன் உங்கள் மனைவி ,மக்கள் ,சுற்றத்தார் இவர்களிடமிருந்து காப்பாற்றி விடுங்கள் . யாருடைய உள்ளங்களை இவர்கள் வளைத்துப் போடுகிறார்களோ , யார் இவர்களுடைய இயக்கங்களை ஆதரிக்கிறார்களோ அவர்கள் எப்படியாவது திருந்தி விடுவார்களென்று மட்டும் நினைக்காதீர்கள் .

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடலாம் , அவர்களை அழைக்கலாம் என்று நாம் சொல்வதாக நீங்கள் எண்ணி விடக் கூடாது . நபிமார்களையும் ,வலிமார்களையும் இந்த நஜ்து கொள்கைவாதிகள் அல்லாஹ் அல்லாதவர்கள் என்று பேசியதை வைத்துதான் நாமும் அவ்வாறு பேசினோமேயன்றி மற்றபடி நாம் அவர்களுடைய கருத்தை ஆதரிப்பவர்களல்ல . இனி அல்லாஹ் அல்லாதவர்கள் யார் என்பதுபற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாதாக்களின் நல்லாசியால் விளக்குவோம் .இன்ஷா அல்லாஹ் !

இன்னும் இப்னு தைமிய்யா முதல் இவ்வுலகில் தோன்றிய வஹாபிய இயக்கமனைத்தும் நபிமார்களிடமும் ,வலிமார்களிடமும் உதவி தேடுவதை ஷிர்க் என்றும் பெரும் பாவம் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்களே !அதற்குரிய ஆதாரம் என்னெவென்று இதுவரை அவர்களிடம் நீங்கள் கேட்டதுண்டா ? ஒருமுறை அவர்களிடம் கேட்டுத்தான் பாருங்களேன் .

ஆம் .உயிரோடுள்ள ஒருவர் உயிரோடுள்ள இன்னொருவரிடம் உதவி தேடலாம் . அல்லது அவர் போருட்டாலும் கேட்கலாம் என்னும் விஷயத்தில் எந்தக் கருத்து வேற்றுமையும் கொள்ளாத வஹாபிய இயக்கத்தை சேர்ந்த அனைவரும் எதற்காக நபிமார்களிடமும் ,வலிமார்களிடமும் உதவி தேடக் கூடாதென்று சொல்கிறார்கள் தெரியுமா ?

நாம் உதவி தேடுபவர்களெல்லாம் இறந்து மண்ணோடு மண்ணாகி மக்கிப் போய் விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தரும் விளக்கமும் ,இவர்களால் செய்யப்படும் பிரச்சாரமும் . இவர்களின் இப்பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான மிக மிகக் கீழ்த்தரமான பொய் பிரச்சாரமாகும் என்பதை குர்ஆன் ,ஹதீதைக் கொண்டே நம்மால் நிரூபிக்க முடியும் .

இருப்பினும் நாகூர் ஆளும் ஷாஹுல் ஹமீது ஸெய்யிது அப்துல் காதிர் பாதுஷா நாயகம் அவர்களது வழித்தோன்றல் , அல் ஆரிபுபில்லாஹ்    அல்லாமா முஹம்மது பாக்கர் ஸாஹிப் ஆலிம் அவர்களால் எழுதப்பட்ட 'ஹிதாயத்துல் அனாம் இலா ஸியாரத்தில் அவ்லியாயில் கிராம் ' என்னும் நூலின் 70,71ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஓர் நிதர்சனமான சம்பவத்தை மட்டும் உங்களின் பார்வைக்கு தருகிறோம் . அதாவது, 

நபி பெருமானார் ﷺ அவர்களது  ஸஹாபாத் தோழர்களான ஹழ்ரத் ஹுதைபதுல் யமனீ رضي الله عنها   ,ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜாபிருள் அன்சாரி  رضي الله عنه ஆகிய இருவரும் ஷஹீதாகி இராக்கில் பகுதாது நகருக்குச் சமீபமாக ஆற்றோரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார்கள் . பிற்காலத்தில் வெள்ளப்பெருக்கால் இரு கப்ருகளுக்கும் சேதம்  ஏற்பட்டது . அவை ஆற்றில் மூழ்கிப் போய்விடுமோ என்ற பீதியும் ஏற்பட்டது . அதுசமயம் இராக்கில் ஆட்சிபுரிந்த அமீர் பைஸல் (மக்கா ஷரீஃப் ஹுஸைனுடைய மகன் ) உலமாக்களிடம் பத்வா வாங்கி அவ்விரு கப்ருகளையும் தோண்டி எடுத்து ,அவற்றை வேறு இடத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு செய்தார் . இவ்விஷயம் விளம்பரபடுத்தப்பட்டது . உலகின் நாலா பக்கங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட தேதியில் அங்கு ஆஜராயினர் . அவ்விரு கப்ருகளும் 1300 ஆண்டுகளுக்கு தோண்டப்பட்டு அவ்விரு சடலங்களும் வெளியே எடுக்கப்பட்டு உயர்ந்த மேஜை மீது வைக்கப்பட்டன . திரேகத்தில் எவ்வித பேதமும் ,மாறுபாடும் காணப்படவில்லை . வியர்வை சொட்ட அவ்விரு முகங்களும் ஒளிப்பிரகாசத்துடன் இலக்கின . 

அனைவரும் அக்கட்சியைக் கண்டு பேராச்சரியத்தில் மூழ்கிப் போயினர் .  காரீ ஒருவர் 


'وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ ؕ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ‏  '
அன்றி, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து (எதிரி களால்) வெட்டப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிரோடு இருக்கிறார்கள். ஆனால் (அதை) நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.  
[ அல் குர்ஆன்  - 2:154 ]


என்ற குர்ஆனின் வேத வாக்கை ஓத ஆரம்பித்தார் .



அதற்கு அத்தாட்சியாக கண்முன் பிரத்தியட்சமாக அவ்விரு நாதாக்களின் பரிசுத்த திருமேனிகள் இருக்கும் காட்சியை நோக்கும் போது இந்த ஆயத் அவ்வமயந்தான் அருளப்பட்டது போல காணப்பட்டதாம் .

பிறகு அங்கு கூடியிருந்த ஜனசமுத்திரம், அலைகள்போல் அடுத்து நின்று தொழுது பகுதாதுக்கு 20 மைல் தூரத்தில் பாழடைந்து இருபிளவாகப் பிளந்து கிடக்கும் கிஸ்ரா கோட்டைக்குச் சமீபமாக , சஹாபி ஸல்மான் பார்ஸீ  رضي الله عنه  அவர்களது கபூர் ஷரீபுக்கு அடுத்தன்மையாக மற்றோரு கட்டிடத்தினுள் இரு ஸஹாபிகளும் நல்லடக்கம் செய்யப்பட்டனர் . இந்நிகழ்ச்சி ஆங்கில வருடம் 1932ஆம் ஆண்டு நடைபெற்றது .பத்திரிகைகள் பலவற்றிலும் இச்சேதி வெளியிடப்பட்டது . மதராஸில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கை ஸைபுல் இஸ்லாமிலும், வட நாட்டின் உருது பத்திரிக்கைகளிலும் இவ்விபரம் வெளிவந்துள்ளது .






                                  பத்திரிகையில் வெளிவந்த செய்தி  !


6-11-1964 , நூருல் இஸ்லாம் தமிழ் வாரப் பத்திரிக்கையில் 
"வாடாமலர் " என்ற பகுதியில்  "இஸ்லாத்தின் அதிசய நிகழ்ச்சி " என்னும் தலைப்பில் வந்துள்ளதையும் நோட்டமிட்டு பாருங்கள் .

" இதர தேசங்களின் இராஜாங்க பிரதிநிதிகளும் இராக் அரசாங்கத்தின் சர்வ அதிகாரிகளும் திரண்டிருக்க ஷாஹ் பைஸல் அரசருக்கெதிரே முதன் முதலாக ஹழ்ரத் ஹுதைபா رضي الله عنها  அவர்களின் பரிசுத்த பிரேதம்  க்ரேன் மூலமாக அதிஜாக்கிரதையாக  பூமியிலிருந்து அப்படியே தூக்கப்பட்டது . அந்த ஜனாஸா ஸ்டெரெச்சர் மீது அழகாய் அமைந்துஹ் விட்டது . பின்னர் ,க்ரேனிலிருந்து ஸ்டெரெச்சரை தனியாக பிரித்து ,அதை மாட்சிமை தாங்கிய ஷாஹ் பைஸல் ,முப்தியே அஃலம் இராக் ,துருக்கி ஜனநாயகப் பொது அமைச்சர்,மிஸ்ரு இளவரசராயிருந்த பாரூக் முதலானோர் தோல் மீது தூக்கிச் சென்று அழகிய கண்ணாடி பெட்டகத்திற்குள் வைத்தனர் .     இதற்குப் பின் ஹழ்ரத் ஜாபிர் பின் அப்துல்லா  رضي الله عنها  அவர்களின் பரிசுத்த மேனியும் அடக்கஸ்தலத்திலிருந்து இதே வகையில் அழகிய முறையில் வெளியே எடுக்கப்பட்டது .


மாபெரும் டாக்டர்களான வைத்தியர்கள் பலர் இந்நிகழ்ச்சியைக் கண்டு திடுக்கிட்டனர் . ஒன்றும் புரியாமல் திகைத்தனர் . பிரஸ்தாப நிகழ்ச்சியின் போது பிரபலமான ஜெர்மன் கண் டாக்டர் ஒருவர் இருந்தார் . இவர் இந்நிகழ்ச்சியின் போது ஆர்வமாக பங்கு கொண்டார் . அவர் இத்தகைய தோற்றத்தைக் கண்டதும்  ,பிரஸ்தாப பெரியார்களான ஸஹாபாக்களின் பிரேதங்கள் , கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே ஒன்றும் புரியாமல் ,இராக் பிரதம முப்தி அவர்களின் கரங்களைப் பிடித்துக் கொண்டு , 'தங்களின் மார்க்கமான இஸ்லாம் சாத்தியமானது தான் ' என்பதற்கு இந்த  ஸஹாபாக்களின்    பெருமைமிக்க இந்த நிகழ்ச்சியை விட வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கிறது ? இதோ யானும் முஸ்லிமாகி விட்டேன்  . 'லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ' என்று கூறி முஸ்லிமாகி விட்டார் .

இத்தகைய சந்தர்ப்பத்தில் திரைப்படம் பிடிக்கும் ஒரு ஜெர்மன் கம்பெனி , அதிக தொலை தூரத்திலிருந்தெல்லாம் இந்நிகழ்ச்சியைக் காண வந்திருந்தவர்களை பெரிய  உபகாரம்  செய்தது . பிரஸ்தாபப் படம் எடுக்கும் கம்பெனியார் ,இராக் அரசின் அனுமதி பெற்று தங்கள் செலவிலேயே ஒரு காரியம் செய்தனர் . 

அடக்கஸ்தலத்தின் மேலே இருநூறு அடி உயரமுள்ள நான்கு கம்பாஸ்களின் மீது ஏறக்குறைய முப்பது அடி நீளமும் , இருபது அடி அகலமும் உள்ள டெலிவிஷன் திரைகளைப் பொருத்தினர் . இதனால் அங்கு குழுமியிருந்த இலட்சக்கணக்கான மக்கள் நின்றவண்ணமாகவும் , அமர்ந்தவண்ணமாகவும் பிரஸ்தாப அடக்கஸ்தலங்களிலிருந்து கவ்ரவமிக்க இரு ஸஹாபா பெருமக்களின்  பிரேதங்களைத் திறப்பதையும் , வெளியே எடுப்பதையும் தங்கள் கண்களால் நிதர்சனமாக நல்ல முறையில் காணும் சந்தர்ப்பம் கிட்டியது .

மறுநாள் பக்தாது நகரிலுள்ள சினிமா காட்சி சாலைகளில் எல்லாம் இந்நிகழ்ச்சி திரையிடப்பட்டு மக்களுக்கு காண்பிக்கப்பட்டது . இவ்விஷய நிகழ்ச்சிக்குப் பின் பக்தாது நகரிலேயே ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . அளவற்ற வகைகளில் யூதர்களும் ,கிருஸ்தவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் எவ்விதக் கட்டாயமுமின்றி பள்ளிவாயில்களுக்கு வந்து மனமுவந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் . நிதர்சனமான இந்நிகழ்ச்சி பண்டைய கால வரலாற்று ஏடு  அல்ல .


இது நமது காலத்திலேயே நமது கண்களால் நிதர்சனமாக கண்ட ஒரு நிகழ்ச்சியாகும் .இத்தகைய அதிசயம் கி.பி.1932ஆம் ஆண்டில் நடந்த ஒரு விஷயமாகும் . இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு மதத்தினரும் ,அந்நிய நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் கண்ணாரக் கண்டனர் . அகிலத்திலுள்ள பல பத்திரிகைகள் விஷேசமாய்ப் பிரசுரம் செய்தனர் . அன்றியும் ,இவ்வடக்கஸ்தலங்கள் பெயர் தெரியாத ஒரு சிலரைச் சார்ந்ததல்ல . இறுதி நபியாம் முஹம்மது ﷺ அவர்களது அந்தியத்த நண்பர்களான இரு ஸஹாபாக்களின் பிரேத நிகழ்ச்சியாகும் . அவர்கள் யாரென்பதை முஸ்லீம் உலகம் முன்னரே அறியும் .அவர்கள் எத்தகையோர் என்பதை முஸ்லீம் உலகம் ஏற்றுக் கொண்டே இருக்கின்றது .தற்சமயமோ ஆயிரக்கணக்கான மக்கள் பிரஸ்தாப அடக்கஸ்தலத்திற்கு சென்று தரிசித்து வருகின்றனர் . "

இதேபோல முஃதாவுடைய யுத்தத்தில் ஷஹீதான அருமை ஸஹாபாக்கள் ஏறக்குறைய 1342 வருடங்களுக்குப் பிறகும் அவர்களின் புனித தேகம் அழியாமல் இருந்தது கண்டுபிரிக்கப்பட்டது மட்டுமல்ல ,அவர்கள் தமது தலைகளில் அணிந்திருந்த வெள்ளை ,பச்சை மற்றும் சிவப்பு நிறத்தாலான தலைப்பாகைகள் கூட அப்படியே இருந்ததாக 'அல் ஜாமியத்துல் இஸ்லாமியா ' என்னும் சஞ்சிகையின் 201ஆம் இதழ் வெள்ளிக்கிழமை ,24 துல்கஃதா , 1351ல்  முஃதாவின் ஷஹீதுகள் என்னும் தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருந்தது . 

[ நூல்  - நபஸுர் ரஹ்மான் , பக்கம் -196 ] 

புனித இஸ்லாமிய மார்க்கத்திற்காக தமதுயிரை அர்ப்பணம் செய்த தியாகிகளின் புனித தேகங்கள் கூட இன்றும் அழியாமல் கப்ருக்குள் உயிரோடு இருக்கிறார்கள்  என்றால் அவர்களைவிட எவ்வளவோ மேலான படித்தரங்களைக் கொண்டுள்ள நபிமார்களும் ,ஸித்தீக்கீன்களும் தமது திரேகத்தோடு ஏன் உயிரோடு இருக்க மாட்டார்கள் ! இனி அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்கள் எனில் அவர்களிடம் உதவி தேடுவது எவ்வாறு ஷிர்க் ஆகும் ? இப்போது இன்னொரு ஆச்சரியமான அதேசமயம் அதிசயத்திற்குரிய  நிகழ்ச்சியைப் பாருங்கள் .....

துஸ்தர் என்னும் நகரம் ஹழ்ரத் ஸெய்யிதினா உமர்  رضي الله عنها அவர்களின் ஆட்சிக் காலத்தில்   ஹழ்ரத் அபூ மூஸா அஷ்அரி   رضي الله عنها அவர்களால் கைப்பற்றப்பட்ட நகரமாகும் . அதுபோது நடைபெற்ற சம்பவமொன்றை தாபயீன்களில்   ஒருவரான ஹழ்ரத் ருபைஃ பின் மிஹ்ரான் (அபூ ஆலியா )  رضي الله عنها அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர் ....

  "நாங்கள் அந்த நகரத்தை வெற்றி கொண்ட போது ஒரு வீட்டில் இறந்துபோன ஒருவருடைய தேகம் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்தோம் .அத்துடன் அவருடைய தலைமாட்டில் வேதநூல் ஒன்றும் இருந்தது . அந்த நூலை நாங்கள் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக்  رضي الله عنها அவர்களின் சபைக்கு கொண்டு சென்றோம் . அப்போது அதில் கூறப்பட்டுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக பல மொழிகளை சரளமாக பேசும் ஹழ்ரத் கஃபுல் அஹ்பார்  رضي الله عنها அவர்களை அழைக்கப்பட்டு வாசிக்கப்பட்டது .

அதுபோது அவரை என்ன செய்தீர்கள் ? என்றும் , அவரைக் கொண்டு என்ன பிரயோஜனங்களைப் பெற்று கொண்டீர்கள் என்றும் கேட்டபோது , அவருடைய தேகம் சிதைந்து விடக்  கூடாதென்பதற்காக  இரவோடிரவாக அவரை நல்லடக்கம் செய்து ,அவருடைய கப்ரையும் சமப்படுத்தி விட்டோம் என்றனர் . இன்னும் ....

' அந்நகர மக்கள் மழை பொழியாமல் தடுக்கப்படும் போது  அவரை வெளியே கொண்டு வருவார்கள் . உடனே மழை பொழியும் ' ,  அப்போது அவர் யார் ? எத்தனை காலமாக இந்த நிலையில் அவரை நீங்கள் பெற்றுக் கொண்டுள்ளீர்கள் எனக்கேட்க .....

அவர் தானியால் என்று சொல்லப்படுகிறார் . அவரை நாங்கள் சுமார் முந்நூறு ஆண்டுகளாக இறந்த நிலையில் பெற்றிருக்கின்றோம் . அவருடைய பிடரியிலுள்ள ஒரு சில முடிகளைத்  தவிர  வேறு எந்த மாற்றமும் அவரில் ஏற்படவில்லை என்றும் கூறினர் . "

 இச்சம்பவம் இப்னு தைமிய்யாவின் 'அஸ் ஸிராத்துல் முஸ்தகீம் ' என்னும் நூலில் 668ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதைக் கொண்டு அவர் நிரூபிக்க முனைவது கப்ரு பற்றிய விஷயமாகும் . இன்னும் அல்பானியும் " தக்ரீஜு அஹாதீதி ஃபழாயிலிஷ் ஷாமி வத்திமிஷ்கி " என்னும் நூலில் 51 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டு விட்டு அவரும் இப்னு தைமிய்யாவின்   கருத்தையே எடுத்துக் காட்டுகிறார் . மேலும் இந்த சம்பவத்தை இமாம் இப்னு கதீர் அவர்கள் பதிவுசெய்துவிட்டு இது ஸஹீஹான தகவல் என்றும் கூறுகிறார் .

[ நூல் - அல் பிதாயா வந் நிஹாயா ,பாகம் 2, பக்கம்  40 ] 

இச்சம்பவத்தைக் கொண்டு இப்னு தைமிய்யா  மற்றும் அல்பானி போன்றோரின் கொள்கை ஆதரவாளர்களிடம் நாம் கேட்பது என்ன தெரியுமா ? 

அச்சம்பவம் அமீருல் முஃமினீன் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக்  رضي الله عنها அவர்களின் காலத்தில் நடைபெற்றுள்ளதால் இதனை நீங்கள் எதற்குமே ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதுதான் . அவ்வாறின்றி இந்த நிகழ்ச்சியை உங்களின் கொள்கை கருத்துக்கு ஆதாரமாகக் கொள்வீர்களாயின் ஸெய்யிதினா ஹழ்ரத் உமர் பாரூக் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் . 

அடுத்து மேற்கண்ட நபர் தனது இறப்புக்கு பின்னர் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஒரு கட்டிலில் வைக்கப்பட்டுள்ளாரே  ! இவர் என்ன நபியா ? அத்துடன் அந்நகர மக்கள் தங்களுக்கு மழை வேண்டுமென்றால் அவரைக் கொண்டுதான் பெற்றுள்ளனர் என்னும்போது இது ஷிர்க்கான காரியமல்லவா ? பின்னும் ஷிர்க்கான காரியத்தை தடுத்த நிறுத்த அல்லாஹ் அவருடைய தேகத்தை மறைத்திருக்கலாம்  அல்லவா ? 

இந்நிலையில் ஒருவருடைய தேகத்தை கொண்டு ஷிர்க் நடைபெறுவதற்கு அல்லாஹ்வும் உடந்தையாக இருந்தான் என்று எனக் கூறலாமா ? தயை கூர்ந்து பதில் தாருங்கள் . மரணித்தவர்களால் எதையுமே செய்ய முடியாது என்பது அல்லாஹ்வுடைய விரோதிகளின் கொள்கையாகும் .இதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தினரைத் தவிர உள்ள அனைத்து இயக்கங்களும் நபிமார்கள் ,வலிமார்கள்  போன்றோரிடம் உதவி தேடுவதை பெரும் பாவமென்று சொல்வதால் இவர்களனைவரும் அல்லாஹ்வின் விரோதிகள் என்பது இதைக் கொண்டு வெள்ளிடை மலை போல தெளிவாக்கப்பட்டு விட்டது .