Friday, 30 December 2016

கிழக்கிலிருந்து ஓரு கூட்டம்

தற்போதுள்ள வஹாபிய இயக்கங்களெல்லாம் பல்வேறு பெயர்களில் பல்வேறு இடங்களில் தொற்றமெடுத்தாலும் , இவர்களுக்கெல்லாம் மூலகர்த்தாவாக விளங்கியவர்கள் பூமியின் எந்தப் பிரதேசத்தில் இருந்து வெளிப்படடார்கள் என்பதை அடுத்து வரும் நபிமொழிகள் விளக்குகின்றன


"கிழக்குப் பிரதேசத்தில் இருந்து ஒரு கூட்டம் வெளிப்படும் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் .எவ்வாறு வில்லை விட்டுச் சென்ற அம்பு மீண்டும் வில்லுக்கு திரும்பாதோ அவர்களும் மார்க்கத்திற்கு திரும்ப மாட்டார்கள் . இன்னும் அவர்களின் அடையாளம் தலையை சிரைப்பது ஆகும் ".
[நூல் - கன்ஸூல் உம்மால் ,பாகம் 11,பக்கம் 143 ] 


"கிழக்கிலிருந்து பல கூட்டம் வெளிப்படும் . அவர்கள் தமது தலையைச் சிரைத்திருப்பர் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .வில்லில் இருந்து அம்பு பாய்ந்து விரைந்தோடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டும் வெளியேறி விடுவார்கள் ."
[நூல் - கன்ஸூல் உம்மால் ,பாகம் 11,பக்கம் 143 ] 


"கிழக்கிலிருந்து ஓரு கூட்டம் வெளிப்படும் .அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . ஒவ்வொரு கூட்டமும் மறையும் தருவாயில் இன்னொரு கூட்டம் தோற்றம் எடுக்கும் . இவ்வாறு அவர்கள் தஜ்ஜால் வெளிப்படும் வரை தோன்றிக் கொண்டிருப்பார்கள் "
[நூல்- முஸ்னத் அஹ்மத் ,பாகம் 2,பக்கம் 692,எண் 6952 , முஸ்னத் அப்துர்ரஸ்ஸாக் ,எண் 20790] 


"அருமை நாயகம் அவர்கள் கிழக்குத் திசையை முன்னோக்கி நின்றவர்களாக இங்கிருந்து தான் ஷைத்தானுடைய கொம்பு உதயமாகும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் . இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும்  எனக் கூறினர் "
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,கிதாப் பித்தன்,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]


"உம்முல் மூஃமினீன் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டில் இருந்து வெளிவந்த வாய்மையுள்ள வள்ளல் நபி அவர்கள் கிழக்குத் திசையைச் சுட்டிக் காட்டி ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு இங்கிருந்து தான் குஃப்ரின்  தலைமைப் பீடம்   வெளியாகும் என்றனர் " 
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,கிதாப் பித்தன்,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]


"அருமை நாயகம் முஹம்மத் ﷺ அவர்கள் மிம்பரில் அருகில் நின்றவர்களாக ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு குழப்பம் இங்கிருந்து தான் ,குழப்பம் இங்கிருந்து தான்எனக் கூறினார்கள் "
[நூல் - புஹாரி ஷரீப் , பத்ஹுல் பாரி ,பாகம் 13,பக்கம் 49 ]



"அருமை நாயகம் முஹம்மத் ﷺ அவர்கள் குத்பாவுக்காகத் தயாரான பொழுது அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டின் பக்கமாக சைக்கினை செய்து ஷைத்தானுடைய கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு இங்கிருந்து தான் குழப்பம் தோன்றும் என்று மூன்று முறை கூறினார்கள் "
[நூல்- புஹாரி ஷரீப் ,கிதாபுல் ஜிஹாத் , நுஸ்கத்துல் காரி,பாகம் 6,பக்கம் 318]


"ஷைத்தானுடைய இரு கொம்பு வெளிப்படுவதைக் கொண்டு குழப்பம் இங்கிருந்து தான் வெளியாகும் . குழப்பம் இங்கிருந்து தான் தோற்றமெடுக்கும் ,குழப்பம் இங்கிருந்து தான் வெளியாகும்  என்று மூன்று முறை  கிழக்குத் திசையை நோக்கி தங்களின் முபாரக்கான கரத்தைக் கொண்டு சைக்கினை செய்தார்கள்  ".
[நூல் - ஸஹீஹ் முஸ்லீம் ஷரீப் ,இஃமால் ,பாகம் 8 ,பக்கம் 447 ]


"கிழக்குத் திசையிலிருந்து தலையை சிரைத்துள்ள கூட்டமொன்று தோன்றும் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது< . அவர்களை கொல்லுவோருக்கே சோபனம் என்பதாக ஏந்தல் நபிகளார் ﷺ அவர்கள் நவின்றார்கள் "
[நூல் - தாரீக் திமிஷ்குல் கபீர் ,பாகம் 25,பக்கம்  278]


"கிழக்குத் திசையிலிருந்து சிலர் தோன்றுவார்கள் அவர்கள் குரானை ஓதுவார்கள் .ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . அவர்களில் இறுதி மனிதன் தஜ்ஜாலுடன் இணையும் வரை அவர்கள் அவர்கள் தோன்றிக் கொண்டிருப்பார்கள் "
[நூல்- கன்ஸூல் உம்மால் ,எண்  31244]


"கிழக்குப் பக்கமிருந்து வெளிப்படும் கூட்டமானது அவர்கள் குரானை ஓதுவர் . ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . அத்துடன் அவர்கள் வில்லிலிருந்து அம்பு விரைந்தோடுவதைப் போல மார்க்கத்திலிருந்து வெள்யேறிப் போய் விடுவார்கள் "
[நூல்- கன்ஸூல் உம்மால் ,பாகம் 11,பக்கம் 205]

மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் ,இன்று நாம் கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்துக்கும் அடித்தளம் ,புண்ணிய பூமியான மதீனா முனவ்வராவின் கிழக்குப் பகுதியில் இருந்துதான் தோன்றியது என்பதைத் தெளிவுபடுத்துவதோடு அவர்கள் தமீமுடைய வம்சத்தவர் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது . 



ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் - 2




"எனது உம்மத்திலுள்ள சிலர்,அவர்களது அடையாளம் தலையை சிரைப்பது ஆகும் . அவர்கள் அவர்கள் குரானை ஓதுவார்கள் ,ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது. >அவர்கள் வில்லில் இருந்து பாய்ந்து செல்லும் அம்பைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள். அதன்பின் அவர்கள் இஸ்லாத்தின் பக்கம் மீளவே மாட்டார்கள் . அவர்கள் படைப்புகளிலேயே மிகவும் மோசமானவர்கள் என்பதோடு இயற்கை அமைப்பிலேயே அவர்கள் கொடியவர்கள் என்பதாக ஏந்தல் நபி  நவின்றதாக ஹழ்ரத் அபூதர் கிபாறி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றனர் " .

[நூல் - கன்சுல் உம்மால் , பாகம் 11 , பக்கம் 139 ]  


"எனது சமுதாயத்தில் ஒரு கூட்டம் வெளியாகும்.அவர்கள் குரானை ஓதுவார்கள் அவர்கள் ஓதுவதை உங்கள் ஓதுதலோடும் ,அவர்களுடைய தொழுகையை உங்கள் தொழுகையோடும் ,அவர்கள் நோன்பை உங்கள் நோன்போடும் நீங்கள் ஒப்பிடுப் பார்ப்பீர்களேயானால் உங்களுடைய வணக்கங்களை நீங்கள் அற்பமாகப் பார்ப்பீர்கள். அத்துடன் குரான் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றது என்ற எண்ணத்துடன் அதை அவர்கள் ஓதுகின்றனர் . ஆனால் அது அவர்களுக்கு பாதகமாகவே இருக்கும் . இன்னும் அது அவர்களது தொண்டைக்குழிக்கு கீழே இறங்காது .  வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்லுவதைப்  போல அவர்கள் இஸ்லாத்தை விட்டும்  வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதாக அருமை நாயகம் ﷺ நவின்றதை ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் அறிவிக்கின்றனர் "

[நூல் -முஸ்லீம் ஷரீப் ,கிதாபுஸ் ஸகாத் ,பாபுத் தஹ்ரீழி அலா கத்லில் கவாரிஜி ,இஃமால் ,பாகம்  3,பக்கம்  618]

இதுவரை மேற்கூறப்பட்ட நபிமொழியாவும் ஹழ்ரத் அலீ இப்னு அபீதாலிப் கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் காலத்தில் வாழ்ந்த க்வாரிஜீய்யீன்களைக் குறித்து சொல்லப்படாதல்லவா என நீங்கள் யோசிக்கலாம் . அது ஒருவகையில் நியாயமும் கூட . இன்னும்  க்வாரிஜீய்யீன்களை குறித்து அருமை நாயகம் ﷺ இவ்வளவு கடுமையாக எச்சரித்ததன் காரணம் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்களேயானால் , இன்றுள்ள வஹாபிகளின் செயல்பாடுகளுக்கும்  க்வாரிஜீய்யீன்களின் நடவடிக்கைகளுக்கும் பெயர் மாறுபாடு மட்டும்தானேயன்றி , மற்றபடி இரு சாராரின் நடவடிக்கைகளும் ஒரே மாதிரி தான் அமைந்துள்ளது என்பதை சிந்திக்கும் ஆற்றல் உடையோருக்கு தெளிவாகத் தெரியும் .

அவ்வாறின்றி நீங்கள் இதை ஏற்க மறுப்பீர்களேயானால் ,
" தொண்டைக் குழிக்குக் கீழே இறங்காமல் குரானை அவர்கள் வாயளவில் மட்டுமே ஓதிக் கொண்டிருப்பர் ,இன்னும் அக்கூட்டம் தஜ்ஜாலுடைய வருகை வருகைவரை தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் "  என்ற நபிமொழியையும் 

"அக்கூட்டத்தில் இறுதியானவன் கொடியோன் தஜ்ஜாலாகும் " என்ற நபிமொழியையும் பொய்யாக வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்கின்றோம் . 

"ஹழ்ரத் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் க்வாரிஜீய்யீன்களை படைப்புகளிலேயே மிகக் கெட்டவர்களாக கருதினர் . காரணம் அவர்கள் நிச்சயமாகக் காபிர்கள் குறித்து இறக்கப்பட்ட திருமறை வசனங்களை மூஃமீன்கள் மீது திருப்புகின்றவர்களாக இருந்தனர் எனக் கூறுகின்றனர் "  
[நூல்- ஸஹீஹ் புஹாரி ]


"(இந்த க்வாரிஜீய்யீன்கள் ) திருமறைக்குரிய பொருளை மட்டுமல்ல அதன் விளக்கங்களையும் சூறையாடுபவர்களாகும் "
[ நூல் - ஷரஹ் முஸ்லீம் ,இமாம் நவவி , கிதாபுஸ் ஸகாத் ]

மேற்கண்ட விளக்கத்தைக் கொண்டு தற்காலத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜாமத்தினரைத் தவிரவுள்ள அனைத்து இயக்கங்களும் காபிர்களைப் பற்றி இறக்கப்பட்ட வசனங்களையெல்லாம் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீது திருப்புவதன் மூலம் மூஃமீன்களையெல்லாம் முஷ்ரிக்குகளாக ஆக்குவதையும் , திருமறை வசனங்களுக்கு இமாம்கள் தப்ஸீர்களில் கொடுத்துள்ள விளக்கங்களை எல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு தன்னிச்சையாகப்  பொருள்    தருகின்றனர் . அதனால் தான் மேற்கூறப்பட்ட நபிமொழிகள் அனைத்தும் இவர்களையே சாரும் . 


Thursday, 29 December 2016

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் வஹாபிகள் - 1

கண்மணி நாயகம் ﷺ  அவர்களின் எச்சரிக்கை ,



Sahih Muslim Vol 3 Page 617

"இறுதிக் காலத்தில் கூட்டமொன்று வெளியாகும் . அவர்கள் நாகரீகமாக பேசக் கூடியவர்களாகவும் ,குறைந்த வயதுடையவர்களாகவும்,,மடையர்களாகவும் இருப்பர். அவர்களும் அண்ணல் நபியவர்களின் ஹதீதுகளை எடுத்துச் சொல்வர் . எனினும் அவர்கள் வில்லிலிருந்து பாய்ந்து செல்லும் அம்பைப் போல இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் .அவர்களுடைய ஈமான் வாய் பேச்சைத் தவிர தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .இத்தகையோரைக் கண்டால் அந்த இடத்திலேயே அவர்களைக்  கொன்று விடுங்கள் .அவ்வாறு கொல்பவருக்கு யுகமுடிவு நாளில் அதற்குரிய நன்மை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் ﷺ   அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என செய்யிதினா அலிய்யுன் கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் கூறுகின்றனர் "

[நூல்  - ஸஹீஹ் முஸ்லிம் ஷரீப் ,கிதாபுஸ் சகாத் ,பாபுத் தஹ்ரீழி அலா கத்லில் கவாரிஜி ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 617 ]


Sahih Muslim Page 610

இறுதிக் காலத்தில் ஒரு கூட்டமொன்று வெளியாகும் . அவர்களின் தொழுகையைப் பார்க்கும் நீங்கள் உங்கள் தொழுகையை அற்பமெனக் கருதுவீர்கள் . இன்னும் அவர்கள் குரானை ஓதுவார்கள் ,அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது . அத்துடன் அவர்கள் வில்லில் இருந்து அம்பு வெளியேறுவதைப் போல மார்க்கத்தை விட்டும் வெளியேறிப் போய் விடுவார்கள் என்பதாகக் அருமை நாயகம் ﷺ   அவர்கள் சொல்லக் கேட்டேன் என்கிறார்கள்  ஹஸ்ரத் அபூ சயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு )  அவர்கள்  "

[ நூல்  - முஸ்லீம் ஷரீப் ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 610 ]


Sahih Buhari Page 196
"அருமை நாயகம் ﷺ   அவர்கள்  எங்களிடையே (போரில் கைப்பற்றப்பட்ட ) கனீமத்துப் பொருட்களைப் பங்கீடு செய்து கொண்டிருந்தனர் . அப்போது தமீமுடைய வம்சத்தைச் சார்ந்த துல்குவைசரா என்பவன் நபியவர்களைப் பார்த்து , அல்லாஹ்வின் ரசூலே ! நீதமாகப் பங்கீடு செய்யுங்கள் என்று சொல்ல ,அதுகேட்ட நபியவர்கள் ;நீ ஒழிந்து போ என்று சாபமிடடவர்களாக நான் நீதமாக நடக்காவிட்டால் வேறு யார்தான் நீதமாக நடப்பார்கள் என்றனர் .அப்போது செய்யிதுனா உமர் (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அவனைக் கொல்வதற்கு அனுமதி கோர,

அவனை விட்டு விடுங்கள் .நிச்சயமாக அவனுக்கு சில தோழர்கள் இருக்கிறார்கள் .அவர்களில் ஒருவனுடைய தொழுகை அல்லது நோன்பை உங்களில் ஒருவருடைய தொழுகைக்கும் ,நோன்புக்கும் ஒப்புநோக்கிப் பார்ப்பீர்களேயானால் உங்களுடைய அமல்களை மிக மிக அற்பமான ஒன்றெனக் கருதுவீர்கள் .ஆனால் அவர்கள் < வில்லில் இருந்து பாய்ந்து செல்லும் அம்பைப் போல மார்க்கத்திலிருந்து  வெளியேறிப் போய் விடுவார்கள் எனக் கூறியதாகக் ஹழ்ரத் அபூ சயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றனர் " 

[நூல்- முஸ்லீம் ஷரீப் ,கிதாபுஸ் ஸகாத் ,இஃமால் ,பாகம் 3,பக்கம் 610,
             புஹாரி ஷரீப் ,பாகம் 4,பக்கம் 196 ]



"உங்களில் ஒரு கூட்டம் வெளியாகும் . அவர்களுடைய தொழுகைக்கு முன்னால் உங்களுடைய தொழுகையையும் ,அவர்களுடைய நோன்புக்கு முன்னால் உங்களுடைய நோன்பையும் அவர்களுடைய வணக்கத்திற்கு முன்னால் உங்களுடைய வணக்கத்தையும் நீங்கள் துச்சமாகக் கருதுவீர்கள் .இன்னும் அவர்கள் குரானை ஓதுவார்கள் .அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் " 


"எனக்குப் பின் எனது உம்மத்திலிருந்து ஒரு கூட்டம் வெளியாகும் . அவர்கள் குரானை ஓதுவார்கள் .அது அவர்களின் தொண்டைக் குழிக்கு கீழே இறங்காது .அவர்கள் முஸ்லிம்களை கொலை செய்வார்கள் .சிலை வணக்கத்தாரை விட்டு விடுவார்கள் .அவர்கள் வில்லில் இருந்து அம்பு பாய்ந்து செல்வதைப் போன்று அவர்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி விடுவார்கள் .நான் அவர்களைப் பெறுவேனாயின் ஆதுடைய கூட்டத்தாராக் கொலை செய்வது போல் கண்டிப்பாக நான் அவர்களைக் கொல்வேன் என்பதாக அருமை நாயகம்  ﷺ   அவர்கள் கூறியதாகக் ஹழ்ரத் அபூ சயீதுல் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றனர் " 

[நூல்- புஹாரி ஷரீப் ,முஸ்லீம் ஷரீப் , கன்சூல் உம்மால்,பாகம்  11 ,பக்கம் 138]