நபியவர்கள் அல்லாஹ்வின் ஆணைக்கினங்க மக்காவைச் சார்ந்த காபிர்களை ஏகத்துவத்தின் பக்கம் அழைக்கின்றனர் . அத்துடன் தான் ஒரு நபியே என தெளிவுபடுத்துகின்றார்கள் . அப்போது அவ்ர்களைப் போற்றி புகழ்ந்து வந்த நாவுகள் எல்லாம் தூற்றத் துவங்கிற்று . நபியவர்களை இம்சிக்க துவங்கினர் . இதனால் சொல்லணா துயரங்களுக்கும் , துன்பங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் . இறுதியில் மக்காவில் இனியும் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பொழுது ......
இதற்கிடையே இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருவதைக் கண்ட முஷ்ரிக்குகள் அந்த வளர்ச்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் குஸைமா பின் கிலாஃப் என்பானின் இல்லத்தில் ,உத்பா ,ஷைபா , அபூ ஸுஃப்யான் , துஅய்மை பின் அத்தி, ஹபீப் பின் முத்யிம் , ஹாரிஸ் பின் அமிர், அபுல் புக்தரி பின் ஹிஷாம் , ரபீஆ பின் அஸ்வத் , ஹகீம் பின் ஹிஷாம் , அபூஜஹ்ல், நுபைஹ், உமைய்யா , முனப்பஹ் போன்ற தலைவர்களெல்லாம் ஒன்று திரண்டனர் .
" அந்நாளை யவ்முஸ் ஸஹ்மா என்று அழைக்கப்பட்டது . குரைஷித் தலைவர்களெல்லாம் ஒன்று திரண்டபின் அல்லாஹ்வின் விரோதியாகிய இப்லீஸ் மதிப்புக்குரிய ஒரு பெரியாரின் தோற்றத்தில் அவர்கள் திரண்டிருந்த வீட்டின் வாசல்படியில் வந்து நின்று கொண்டிருந்தான் . அவனைக் கண்ட குரைஷித் தலைவர்கள் ,யார் இந்த பெரியார் என்று வினவ ,நான் நஜ்தை சேர்ந்த பெரியார் என்றான் . அத்துடன் அவன் ,நீங்களெல்லாம் குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் . அவ்விஷயத்தில் நீங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவும் , உங்கள் திட்டம் செயலற்று போய் விடக் கூடாது என்பதற்காகவும் தான் நான் வந்தேன் என்றான் . அதுகேட்ட குறைஷியர்கள் ,சரி அப்படியானால் உள்ளே வாரும் என்றழைக்க அவனும் உள்ளே வந்து அவர்களோடு சேர்ந்த கொண்டான் .
இவ்வாறு மீண்டும் ஒருமுறை இப்லீஸ் நஜ்துடைய பெரியாரின் தோற்றத்தில் வருகை தந்து குரைஷிக் காபிர்களோடு இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கினர் .
' அப்போது அவர்களில் ஒருவன் ,அவரைக் கைது செய்து அறைக்குள் வைத்து பூட்டி விடுவோம் என்றான் '.
இதற்கிடையே இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து வருவதைக் கண்ட முஷ்ரிக்குகள் அந்த வளர்ச்சிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் குஸைமா பின் கிலாஃப் என்பானின் இல்லத்தில் ,உத்பா ,ஷைபா , அபூ ஸுஃப்யான் , துஅய்மை பின் அத்தி, ஹபீப் பின் முத்யிம் , ஹாரிஸ் பின் அமிர், அபுல் புக்தரி பின் ஹிஷாம் , ரபீஆ பின் அஸ்வத் , ஹகீம் பின் ஹிஷாம் , அபூஜஹ்ல், நுபைஹ், உமைய்யா , முனப்பஹ் போன்ற தலைவர்களெல்லாம் ஒன்று திரண்டனர் .
" அந்நாளை யவ்முஸ் ஸஹ்மா என்று அழைக்கப்பட்டது . குரைஷித் தலைவர்களெல்லாம் ஒன்று திரண்டபின் அல்லாஹ்வின் விரோதியாகிய இப்லீஸ் மதிப்புக்குரிய ஒரு பெரியாரின் தோற்றத்தில் அவர்கள் திரண்டிருந்த வீட்டின் வாசல்படியில் வந்து நின்று கொண்டிருந்தான் . அவனைக் கண்ட குரைஷித் தலைவர்கள் ,யார் இந்த பெரியார் என்று வினவ ,நான் நஜ்தை சேர்ந்த பெரியார் என்றான் . அத்துடன் அவன் ,நீங்களெல்லாம் குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன் . அவ்விஷயத்தில் நீங்கள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காகவும் , உங்கள் திட்டம் செயலற்று போய் விடக் கூடாது என்பதற்காகவும் தான் நான் வந்தேன் என்றான் . அதுகேட்ட குறைஷியர்கள் ,சரி அப்படியானால் உள்ளே வாரும் என்றழைக்க அவனும் உள்ளே வந்து அவர்களோடு சேர்ந்த கொண்டான் .
இவ்வாறு மீண்டும் ஒருமுறை இப்லீஸ் நஜ்துடைய பெரியாரின் தோற்றத்தில் வருகை தந்து குரைஷிக் காபிர்களோடு இணைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கினர் .
' அப்போது அவர்களில் ஒருவன் ,அவரைக் கைது செய்து அறைக்குள் வைத்து பூட்டி விடுவோம் என்றான் '.
"அதைக்கேட்ட நஜ்துடைய அந்த ஷெய்கு , அல்லாஹ்வின் மீதாணையாக இது சரியான முடிவல்ல என்றான் . அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் அவரை கைது செய்து அடைப்பீர்களாயின் அதற்குள் அவருடைய தோழர்கள் நீங்கள் மூடி வைத்த அவ்விஷயத்தின் வாயிலை அவர்கள் நிச்சயமாக வெளிப்படுத்தி விடுவார்கள் என்றும் சொன்னான் . "
" அதையடுத்து வேறொருவன் ,நாம் அவரை அவருடைய குடும்பத்தை விட்டு பிரித்து நாட்டை விட்டே கடத்தி விடுவோம் .அவர் நம்மை விட்டும் விலகிப் போய் விட்டால் அதன்பின் நாம் பயப்படத் தேவையில்லை . அவர் சம்பந்தமான எண்ணங்களும் நம்மைவிட்டு அகன்றுபோய் நாம் நிம்மதியாக நமது காரியங்களை கவனிக்கலாம் என்றான் ".
"இந்த யோசனையும் சரியல்ல என்று குறுக்கிட்ட நஜ்துடைய ஷெய்கு , நீங்கள் அவருடைய பேச்சில் இருக்கும் ஈர்ப்புச் சக்தியையும் , மனிதர்களின் உள்ளங்களில் அவருடைய பேச்சின் தாக்கத்தையும் இதுவரை பார்க்கவில்லையா என்ன ? அல்லாஹ்வின் மீதாணையாக அப்படியொருமுடிவை நீங்கள் எடுப்பீர்களாயின் அவர் அரேபியரின் வேறொரு கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு மத்தியில் பேசுவாராயின் அவரை அம்மக்கள் பின்தொடரும் விஷயத்தில் அச்சமற்று விட்டீர்களா ? என்று சொன்னான் ."
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான அபிப்பிராயங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது நஜ்துடைய ஷெய்கு குறுக்கிட்டு இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை என ஒவ்வொன்றாக தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தான் . கடைசியாக அங்கே திரண்டிருந்தோரின் தலைவனாகிய அபூஜஹ்ல் அங்கிருந்தோரை நோக்கி ....
" அல்லாஹ்வின் மீதாணையாக அவர் சம்பந்தமாக என்னிடம் ஒரு ஆலோசனை உண்டு . உங்களில் யாருமே அதை எடுத்துச் சொல்லவில்லை என்று சொல்ல ,அது என்ன ? என்று அனைவரும் கேட்க ,அதற்கவன் ; நாம் ஒவ்வொரு கூட்டத்தாரில் இருந்தும் தைரியமான பொறுப்புள்ள குடும்பத்தாருக்கு மிகவும் வேண்டிய வாலிபனை தேர்நதெடுப்போம் .அவர்களில் ஒவ்வொருவரிடமும் கூர்மையான வாட்களை கொடுத்து எல்லோரும் ஒரேநேரத்தில் சேர்ந்து அவரை வெட்டிக் கொல்வோம் . அப்போது தான் நிம்மதி பெற முடியும் . அதன்பின் அவரை கொன்றது எல்லோரும் தான் என்று கூறுவோம் . அந்நிலையில் அவருடைய குடும்பத்தாராகிய அப்து மனாபுடைய மக்கள் எல்லோரிடமும் சண்டையிட சக்தி பெற மாட்டார்கள் .அத்துடன் பனு அப்து மனாப் அவரைக் கொன்றவனை கைது செய்வதையே விரும்புவர் . அதை நாமும் ஏற்றுக் கொள்ளலாம் என்று கூறினான் ".
"அவரைக் கொன்றேயாக வேண்டும் .அப்போதுதான் நாம் நிம்மதி அடைய முடியும் என்று அபூ ஜஹ்ல் சொன்னதும் இதுதான் சரியான முடிவு .இதைத் தவிர வேறு வழியே இல்லை .இதன் படியே செயல்படுவோம் என்றான் ஷெய்கு நஜ்தி . இக்கருத்தை எல்லோருமே ஆமோதித்தனர் .அதன்பின் அதை செயல்படுத்த அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர் ".
அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்களை கொலை செய்வது தான் சரியான வழியென முடிவெடுத்த நஜ்திகள் அந்த நபியின் கப்ரை தரிசிப்பதற்காக பயணம் செய்வதை மட்டும் நன்மையான காரியமென எப்படிச் சொல்வார்கள் ? இவர்கள் நபியவர்களின் பரமவிரோதிகளாதலால் அவர்களின் அகமியங்களையும் ,எதார்த்தங்களையும் பேசுவதை விட கசப்பான ஒன்று அவர்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியுமா என்ன ?
மேலும் காபிர்கள் ஒன்று கூடி நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவர்கள் சம்பந்தமாக செய்த சதி ஆலோசனையை அல்லாஹ் சொல்லிக் காட்டும் போது ...
"நபியே ! உம்மை சிறைபிடிக்கவோ ,உம்மை கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு ) வெளியேற்றவோ நிராகரிப்போர் சதி செய்வதை நினைவு கூறுவீராக .அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் . அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக மறைவாக திட்டமிட்டு கொண்டிருந்தான் ".
[ அல் குர்ஆன் , சூறா அன்பால் , வசனம் 30 ]
காபிர்கள் தங்கள் ஆலோசனைப்படி அருமை நபியவர்களை கொலை செய்யும் திட்டத்தோடு புறப்பட்டதை வல்லோனாம் அல்லாஹ் தனது ஹபீபுக்கு இவ்வாறு அறிவித்து தருகின்றான் .
"ஹழ்ரத் ஜிப்ரீல் عليه السلام அவர்கள் முஹம்மது முஸ்தபா عليه الصلاة والسلام அவர்களிடம் வருகை தந்து நபியவர்கள் வழமையாக ஓய்வெடுக்கும் படுக்கையில் இரவு தங்க வேண்டாம் என்கின்றனர் . (அறிவிப்பாளர் கூறுகின்றார் ) அன்றிரவு நடுநிசியில் எதிரிகள் நபியவர்களின் இல்லத்தை சூழ்ந்து கொண்டனர் . அதாவது நபியவர்கள் உறங்கியதும் அவர்கள் மீது படையெடுக்க காத்திருந்தனர் . அல்லாஹ்வின் கட்டளைப்படி காபிர்களின் நடவடிக்கையை கண்ணுற்ற நாயகம் அவர்கள் தமது விரிப்பில் ஹழ்ரத் அலீயவர்களை உறங்கச் செய்து தமது போர்வையை எடுத்து போர்த்திக் கொள்ளுமாறு சொன்னார்கள் . அவ்வாறு போர்த்திக் கொண்டால் எதிரிகளிடமிருந்து எவ்வித தீங்குகளும் நேராது . ஏனெனில் நாயகம் عليه الصلاة والسلام அவர்கள் அப்போர்வையில் தான் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்கள் எண்ணிக் கொள்வார்கள் "
அதன்பின் அல்லாஹ்வின் உதவியோடு நாயகம் عليه الصلاة والسلام அவர்கள் அங்கிருந்து புறப்படுகின்றார்கள் .













