Monday, 24 June 2019

ஷைகுன் நஜ்தின் தோற்றம்

அருமை நாயகம் முஹம்மது صَلّى اللهُ عليهِ واٰله وسلّم அவனியில் மனித கோலம் கொண்டு வெளியாகி தனது 35வது வயதை எட்டிய பொழுது குறைஷிகளால் கஃபா புனர் நிர்மாணம் செய்யப்பட்டது .

Hajar al-Aswad

அப்போது கட்டிட வேலைகளெல்லாம் பூர்த்தியானதும் சுவர்கத்தில்  இருந்து இறக்கப்பட்ட ஹஜ்ருல் அஸ்வத் கல்லை வைப்பது யார் என்னும் பிரச்சினையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இறுதியில் அல் அமீனாகிய அண்ணல் நபி صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களே தங்களது புனிதமிகு திருக்கரத்தால் அதை வைக்க வேண்டுமென குறைஷிகள் முடிவெடுத்தனர் . அப்போது ......



' அல்லாஹ்வின் விரோதியாகிய இப்லீஸ் நஜ்த் தேசத்துடைய பெரியாரின் தோற்றத்தில் அச்சபையில் இருந்தான் . (அப்போது மக்காவைச் சார்ந்தோரில் முஹம்மது صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்களே சிறந்தவர்களென அனைவராலும் கணிக்கப்பட்டதால் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது ) .ஆனால் அதை சகித்துக் கொள்ள முடியாத இப்லீஸ் உரத்தக் குரலில் சப்தமிட்டு , குறைஷிகளே ! உங்களில் மதிப்புக் குறியவர்கள் எல்லாம் இருக்கும் பொழுது ஒரு யத்தீமான சிறுவன் அக்கல்லை வைப்பதற்கு முடிவு செய்துள்ளீர்களே ! இம்முடிவு நல்லதல்ல . இவர் உங்களிடையே பிரச்சனைகளை தோற்றுவிப்பார் ' என்று சொன்னான் .

[நூல் - ஸீரத்துன் நபவிய்யா இப்னு ஹிஷாம் , அர்ரெளழுல்  உல்ப் , பாகம் 1, பக்கம் 346 , 2:307 ] 

அரபு மண்ணில் அருமை நாயகம் صَلّى اللهُ عليهِ واٰله وسلّم  அவர்கள்  ஏகத்துவ கொள்கையை வெளிப்படுத்துவதற்காக அம்மக்களில் ஒருவராக அனுப்பப்பட்டிருந்ததோடு , அங்கிருந்த அனைவராலும் மதிக்கதக்க ஒருவராக , போற்றப்படும் புண்ணியராக இருந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சியாகும் இது . அந்த சந்தர்ப்பதில் கூட இப்லீஸ் நஜ்துடைய ஒரு பெரியாரின் தோற்றத்தில் வருகை தந்து ...


மக்கத்து குறைஷிகள் அவரை நம்பிக்கையாளர் என்றும் , உண்மையாளர் என்று ஏற்றுக் கொண்டாலும் கூட நஜ்த் வாசிகள் அதற்கு மாற்றமான எண்ணமுடையோர் தான் என்பதை அப்போதே தெளிவுபடுத்தினான் .

அத்துடன் நஜ்த் வாசிகள் தனது சகாக்கள் தான்  என்பதையும் ஷைத்தான் தெரிந்து வைத்திருந்தான் . அதனால் தான் அப்பகுதியைச் சார்ந்த மக்களின் அபிப்பிராயம் என்னவென்பதையும் அவன் தெளிவுபடுத்தினான் .

இன்னும் நபியவர்கள் நம்பிக்கையாளர் ,உண்மையாளர் என்பதை குரைஷிக் காபிர்கள் ஏற்றுக் கொண்ட பிறகும் கூட அவ்வாறு நம்பிக்கை கொள்ள நஜ்த்வாசிகள் தயாராக  இல்லை என்றால் அவர்கள் நபியவர்களின் எதார்த்தத்தை ஒரு போதும் நம்ப மாட்டார்கள் என்பதையும் அவர்களின் தலைவனான ஷைத்தான் தெளிவு படுத்தி விட்டதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் .


No comments:

Post a Comment