Thursday, 18 June 2020

நஜ்திய உலமாக்களுடன் ஒரு நிமிடம் - 2

ஷைகு நஜ்தி முஹ்ம்மத் இப்னு அப்துல் வஹாபுக்கு பின்னர் தோன்றிய வழிகேடர்களில் அண்மைக்காலத்தில் தோன்றிய அல்பானி குறிப்பிடத்தக்கவராகும் .  இவரைப் பற்றிய சில தகவல்களை இங்கே உங்களின் பார்வைக்கு வைப்பது உசிதம் என்று நினைக்கின்றேன் .


அல்பானி என்னும் இந்நபர் 1614ஆம் ஆண்டு அல்போனியாவின் தலைநகரான அஸ்கொதரா  என்னும் ஊரில் ஒரு வறிய குடும்பத்தில் தோன்றி ஹிஜ்ரி 1420ஆம் ஆண்டு ஜமாதில் ஆகிர் 22ஆம் நாள் சனிக்கிழமை அன்று (கி.பி. 1999ல் ) இறந்து போனவராகும். அல்போனியாவின் அதிபர் அஹ்மத் சுகே அந்நாட்டில் மதசார்பற்ற ஆட்சியைப் பிரகடனப்படுத்தியதால் மேற்கத்திய கலாச்சாரம் அம்மக்கள் மத்தியில் பரவி மார்க்க பற்றுள்ள பலர் அந்நாட்டை துறந்து துருக்கி,சிரியா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர் .

இதில் அல்பானியின் குடும்பமும் சிரியா தலைநகரான டமாஸ்கஸ் நோக்கி நகர்ந்தது . திருமறை முதல் அரபி இலக்கணம் , மொழி இலக்கணம் , பிக்ஹ் போன்ற மார்க்க கல்விகளை தமது தந்தையிடமும் , நண்பர்களிடமும் கற்றார் . சிரியா நாட்டுப் பெரியார் ஒருவரிடம் ஹதீதுக் கலைக்கான இஜாஸத்தை -அனுமதியை பெற்றதாக சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல . இதுபற்றி அஸ்ஸெய்யித் ஹசன் அலி சக்காப் என்பார் அல்பானி ஹதீதுக் கலைக்கு இஜாஸா பெற்றிருந்தால் அதைக் காட்டுமாறு அப்போதே சவால் விட்டிருந்தார் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்றாகும் .

இவருடைய தந்தை நூஹ் ஹாதி நஜாத்தி என்பார் ஹனபி மத்ஹபின் அறிஞர்களில் ஒருவராக இருந்தார் என்பதாக 'மகாலத்துல் அல்பானி ' என்னும் நூலின் 231ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . இனி இப்னு தைமிய்யாவின் குடும்பம் முழுவதுமே ஹன்பலி மத்ஹபை பின்பற்றுபவர்களாகவும் , அதன்படியே தீர்ப்பு வழங்குபவர்களாகவும் இருந்தனர் . இவ்வாறே முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் குடும்பத்தினரும் ஹன்பலி மத்ஹபின் அடிப்படையில் தான் செயல்பட்டு வந்ததோடு அதன்படியே தீர்ப்பு வழங்குபவர்களாகவும் இருந்துள்ளனர் . இந்நிலையில் தமது பெற்றோர்களை வழிகேடர்கள் என்று அவர்களாகவே கூறிக்கொள்கின்றனர். இந்தநிலை இவர்களுக்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா ? இவர்கள் நமது உயிரினும் மேலான நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் அருமை பெற்றோரை தவறாக விமர்சித்ததால் அல்லாஹ் அவர்களுடைய பெற்றோர்களை அவர்களைக் கொண்டே விமர்சனம் செய்ய வைத்துள்ளான் .

இதில் , அல்பானி நமது அஹ்லுஸ் ஸுன்னத்  வல் ஜமாத்தின் முன்னோர்கள் அனைவரையும் குறை கண்ட நபராகும்.  முன்னோர்களால் எழுதப்பட்ட எந்த ஒரு கிரந்தத்திலும் இவர் தவறு காணாமல் விட்டதில்லை . இமாம் ஸுயூத்தி , இமாம்  தஹபி, இமாம் ஹாக்கிம் , இமாம் முன்திர், இமாம் இப்னு ஹஜர் , இமாம் சுப்கி , இமாம் மனாவி, ஜாஹித் அல் கவ்தாரி, ஸுவைப் அர்நாவூத், மஹ்முத் ஸயீத் மம்தூஹ் போன்றோர் மட்டுமல்ல . ஹதீதுகலையின் காற்றைக் கூட சுவாசித்திராத இவர் சிஹாஹ் சித்தாக்கள் என்று போற்றப்படும் அனைத்து கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகளுடன் மேற்கண்ட மேற்கண்ட நூற்களையும்   சேர்த்து  கிட்டத்தட்ட 6000 ஹதீதுகளுக்கு முன்னுக்குப் பின் முரணான தீர்ப்பை சொன்னவராகும் . இன்னும் இவர் எதற்குமே அருகதை இல்லாதவர் என்பதே நல்லடியார்களின் ஏகமானதான தீர்ப்பாகும் .

மேலும் அல்பானியைக் குறித்து அவரது மாணவர்களில் ஒருவரான இப்ராஹீம் பாஜிஸ் அப்துல் அஜீஸ் என்பாரால் சொல்லப்பட்டுள்ள தகவலொன்று 'மகாலத்துல் அல்பானி 'நூலில் 233ஆம் பக்கத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது ....


" இவருடைய பண்புகளோடு இவரிடம் ஒத்துப் போன அறிஞர்கள் மிக மிகக் குறைவாகும் . இவருடைய குணங்களில் முக்கியமானதொரு குணம் என்னவெனில் இவர் எந்த   தகவலை உண்மையானதென்றும் , சரியானதென்றும் நினைக்கிறாரோ அதையே பிடித்துக் கொள்பவராகும் .      இந்நிலையில் அவரால் சரிகாணப்பட்ட அத்தகவல் ஏகோபிக்கப்பட்ட
தீர்ப்புக்கு மாற்றமானதாகவோ அல்லது எதிரானதாகவோ இருந்தாலும்
சரியே. இதனால் பெரும்பான்மையான மத்ஹபுவாதிகளும் சூபிஸவாதி
களும் பித்அத்துக்காரர்களும் இவரை பகைத்துக் கொள்ளலாயினர்." 
என்று கூறுகிறார். 

இன்னும் இவருடைய பிரத்யேகமான ஆராய்ச்சியின் பலனாக சமுதாயத்திற்கு தரப்பட்ட ஒருசில மார்க்கத்தீர்ப்புக்களை பாருங்கள்.

1. தங்க ஆபரணங்கள் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டதைப்
போல பெண்களுக்கும் ஹராமாகும்.

2. வேண்டுமென்றே தொழுகையை விட்டாலும் அதை கழா செய்
வது ஹராமாகும்.

3. பெருந்தொடக்குடைய பெண்கள் குர்ஆனை ஓதலாம். தொடலாம்.
சுமக்கலாம்.

4. நமது நாயகம் صلى الله عليه و سلم அவர்களின்
புனிதமிகு ரௌழா ஷரீபை ஸியாரத்துச் செய்வதற்காக பிரயாணம்
செய்வதும், அவர்களிடம் ஷபாஅத்துத் தேடுவதும் மிகப்பெரும் வழி
கேட்டுக்குரிய செயலாகும்.

5. தஸ்பீஹ் மணியை கையில் சுமந்துகொண்டு உலவுவது வழி
கேடாகும்.

6. நாயகம் صلى الله عليه و سلم அவர்களின் ரௌழா
ஷப் மஸ்ஜிதுன் நபவியின் உட்பகுதியில் இருப்பது மாபெரும் குற்றத்திற்குரிய காரியமாகுமாதலால் ரௌழா ஷர்பை பள்ளியின் உட்பகுதி
யிலிருந்து அகற்றுவது அவசியமாகும்.

7. அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிருன்.

8. விந்தை தன்னிச்சையாக வெளியேற்றுவதால் நோன்பு முறியாது.
என்பன போன்றவை குறிப்பிடத்தக்கவைகளாகும்.

இப்போது நாம் இந்த அல்பானியுடன் இணைந்து பல ஆண்டு
கள் அவருக்கு அடிபணிந்து அவரை ஒரு மாபெரும் மார்க்க
அறிஞரென்று எண்ணி அவருடன் மார்க்க விஷயத்தில் இணைந்து
செயலாற்றியவர்களில் இருநபர்களை பற்றி பார்ப்போம். 

இவ்விருவரில் முக்கியமானவர் அல் மக்தபுல் இஸ்லாமிய்யா என்னும்
அச்சக உரிமையாளரான   ஸூஹைர் ஷாவீஷ் என்பாராகும் .இவர் அல்பானியின் சீடருமாவார் . இவரை பலமுறை அல்பானி பேசி  பெருமைபடுத்தியிருக்கிறார். அவசியம் எனக்கருதுவோர் ஷரஹ் தஹாவியின் முன்னுரையை பார்க்க வேண்டுகி
றோம். ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலமாக ஒன்றாக இணைந்தி
ருந்தவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் நிலை வந்தபோது
அல்பானி தனது பிறவிக்குணத்தை காட்டும் வண்ணம் 
ஷாவீஷ்  உணவுக்காக தமது உருவத்தை மாற்றிக் கொள்பவர் எனத்தூற்றத்
துவங்கி விட்டார்.


இன்னும் ஷாவீஷின் அச்சகத்தில் தான் அல்பானியின் நூல்கள்
அனைத்தும் அச்சிடப்பட்டுவந்தன. இதில் இவ்விருவருக்குமிடையே
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குரிய பிரச்னைகள் அனைத்தும்
ஊடகங்களில் எல்லாம் வெளியானது உலகறிந்த உண்மையாகும். இந்த இடத்தில் நாம் அல்பானியால் ஷாவீஷுக்கு எழுதப்
பட்ட கடிதமொன்றை  உங்களின்
பார்வைக்காக தருகிறோம். இக்கடிதம் 8-18-1999 புதன்கிழமை
அன்று வெளியான 1059ம் இதழான அல்லிவா என்னும் பத்திரிக்
கையின் 15ம் பக்கத்தில் வெளியான தகவலாகும்.

அடுத்து ஷாவீஷின் அச்சகத்தில் அச்சிடப்பட்டாலும் அச்சகத்
தின் பெயர் குறிப்பிடப்படாமல் வெளியான ஒரு நூல் -  'கிதாபுன் 
மஃப்தூஹுன் இலஷ் ஷெய்கி நாஸிரித்தின் அல்பானி ' என்பதாகும். இந்நூலை எழுதியவர் அல்பானியின் இரண்டாவது மாணவரான உஸ்தாத் மஹ்முத் மஹ்தி என்பாராகும். இவர் இஸ்தான்புல்
நாட்டைச் சேர்ந்தவர். இவர் அல்பானியை விட இரண்டு வயது
மூத்தவராக இருந்தும் அல்பானியுடன் நாற்பதாண்டு காலமாக
இணைந்திருந்தவர்.

 இதில் அல்பானியை பற்றி தெரிந்து கொள்ள
விரும்புவோர் மேற்கண்ட நூலை அவசியம் படித்துப் பார்க்க
வேண்டுகிருேம். மஹ்மூத் அவர்கள் அந்த நூலின் 12ம் பக்கத்தில்
இவ்வாறு கூறுகிறார்,...



"அல்பானியே! இது உமது தீய நடத்தை மற்றும் முட்டாள்தனத்தில்
நின்றுமுள்ளதாகும்." எனக் கூறுகிறார், அல்பானியுடன்
கரம் கோத்து நின்றவர்கள் அனைவரும் இறுதியில் அவரை தூற்றத்தான் 
செய்தனர்.


இன்னும் இந்த அல்பானி மிகக்கெட்ட வழிகேடரும் வழி
கெடுப்பவருமாகும். இவரைத்தான் இன்றுள்ள வஹ்ஹாபிகளெல்லாம் தங்களின் இமாமாக எண்ணி பின்பற்றுகின்றனர்
இவர் தனது சுயவிருப்பப்பிரகாரம் ஹதீதுகளுக்கு தீர்ப்புக்கூறி 
எண்ணிலடங்காக ஹதீதுகளை  ஓரங்கட்டச்செய்தவராகும். இவர்
எந்த ஹதீதை ஸஹீஹானதென்று சொன்னாரோ அதைத்தான்
இவருடைய சகாக்கள் ஆதாரமாகக்கொள்கின்றனர். மற்றபடித்த
ரங்களை உடையலத்துகள் எல்லாம் ஓரங்கட்டி விட்டனர்.

மேலும் இந்த அல்பானி ஹதீதுகளுக்குத்  தந்த தீர்ப்புக்கள்
சரியானவை தானா? அல்லது ஒரு ஹதீதுக்கு பல்வேறுவகையான
தீர்ப்புக்கள் சொன்னா என்பதை தெரிந்துகொள்ள விரும்பு
வோர் "தனாகுழாத் அல்பானில் வாழிஹாத்" என்னும் பலபாகங்களை கொண்டதும் நூலை பார்வையிட வேண்டுகிறோம்.

இன்னும் அல்பானி ஹதீதுக்குரிய ஆய்வுகளில் தவறாக தீர்ப்ப
ளித்தவர் என்பதை அவரை அல்லாமா எனப்போற்றிப் புகழும்
நாஸிர் லாலிம் என்பார் "அல்கௌலுல் மன்வூத் பி தஃப்ஸீலில்
பஸ்மலத்தி வல்குனூத்" என்னும் நூலின் 18ம் பக்கத்தில்,...



"நான் கூறுகிறேன். இந்த ஹதீதுக்கு தரப்பட்ட தீர்ப்பு: அல்பானியின்
கற்பனையாகும். பின்னும் இந்த ஹதீதுடைய விஷயத்தி (தீர்ப்பி)ல்
அல்பானி தவறிழைத்து விட்டார்" என்று கூறுகிறார்.

வாசகர்களே! இவரால் தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட ஹதீத்  எது
தெரியுமா? பஸ்மலா - அதாவது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்
ரஹிம் பற்றிய ஹதீதாகும். இந்த ஹதீத் ஸுனன்  அபூதாவுதில்
எண்4001லும், இமாம் அஹ்மத் அவர்கள் தமது நூலின் 6ம்
பாகம், 302ம் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக "இர்வா
வுல் அலில், 2-60ல் குறிப்பிட்டுள்ளார். "

தமிழக இஸ்லாமியரிடையே அல்பானியை அல்லாமா எனக்கூறுவோர் இதை நமக்குக் காட்டித் தருவார்களா? இவருக்கும் பெயர் ஷைகுதான். அதேநேரம் இவருடைய தோழர்களுடைய பட்டப்பெயரும் ஷைகுதான். தனது கற்பனைக்கேற்றவாறும் சுயவிருப்பப்படியும் ஹதீதுக்கு தீர்ப்பளிக்கும் ஒருவரைதனது முன்னோடியாகக் கொள்ளும் சமூகத்தைவிட ஒருமோச
மான கீழ்த்தரமான சமூகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா 
என்ன?

இன்னும் அல்பானி ஹதீதுகளை மோசடித்தனம் செய்பவராகும் என்பதோடு ஹதீதுக்கு சுயமானதோர் விளக்கம் தருபவர்
கண்டிப்பாக முன்னோர்களின் விளக்கத்திற்கு மாறான புதியதோர்
விளக்கத்தை தான் கூறுவார். இப்படி சுய விளக்கம் தருவோரை
குறித்து நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள்
இவர்கள் பொய் தஜ்ஜால்கள் என்றும், இத்தகையோரை பின்பற்
றுவதை குறித்து உங்களைதான் எச்சரிக்கிறேன் என்றும் கூறியுள்ள
வார்த்தை உங்களுக்கு நினைவிருக்குமென்று எண்ணுகிறோம்.


நஜ்திய உலமாக்களே! சுவூதிய மன்னர்களே! 

எங்களின் உயிர் நாடியான உயிருக்கும் மேலான உயிருக்குள்
உயிராக உறைந்துள்ள உத்தமத் திருநபி صلى الله عليه و سلم   வர்களின் புனித தேகத்தை தனக்குள் கொண்டுள்ள
இடமானது எங்களுக்கு ஹரமை விட என்பதல்ல. அர்ஷை
விடவும் மேலான ஒன்றாகும். ஆனால் அப்புனித இடம் உங்கள்
பார்வைக்கு நீங்கள் சிலை வணங்கிகளின் அரவணைப்பில் வாழுவதால் சிலையாகத் தென்படுகிறது. அதனால் தான் அதை உடைக்க
வேண்டும். 

கட்ரை அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம்
மாறி மாறி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலும்.
ஆம். 450 வருடங்களாக ஓலமிட்டு வரும் நீங்கள் அல்லாஹ்வின்
மீதாணையாக ஒருக்காலும் செய்யவே முடியதென்பது மட்டும்
திண்ணம்.

இன்னும் நீங்கள் இஸ்லாத்திற்குச் செய்த ஏன் இன்றைக்கும்
செய்து கொண்டுள்ள அராஜகங்களில் இதுவும் ஒன்றாகும்.
அதாவது, உங்களின் கொள்கைக்கு மாற்றமான நூல்களை
இல்லாமலாக்குவதும், அதனுடைய அறிவிப்பாளர்களை ஆய்வு
செய்வது போல பாசாங்குக் காட்டி அவர் மீதுள்ள குற்றச்சாட்டை
மட்டும் எடுத்துக் காட்டி ஹதீதைப் பொய்யாக்குவதும் அல்லது
வசனங்களை மாற்றியமைப்பதும் தான் நீங்கள் இஸ்லாத்திற்கு
செய்யும் துரோகங்களில் மாபெரும் துரோகமாகும். 

இதற்கு உதாரணமாக "அல் அத்கார் என்னும் நூல் இமாம் நவவிக்குச் சொந்தமானதாகும். இந்த நூல் ஹிஜ்ரி 1409ல்  ரியாதிலுள்ள தாருல் ஹுதா பதிப்பகத்தில் அச்சானபோது அந்நூலின் 295ம் பக்கத்தில் நாயகம் ஸல்லல்லாஹு அவர்களின் ரவ்லா ஷரீபை தரிசிப்பது தொடர்பான பாடம் எனத் தலைப்பிட்டிருந்த தலைப்பானது , நாயகம் அவர்களின் பள்ளியை தரிசிப்பது தொடர்பான பாடம் என்பதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதில் சொல்லப்பட்டிருந்த உத்பா உடைய சம்பவம்  உட்பட பலவிஷயங்கள் அகற்றப்பட்டு அச்சிடப்பட்டிருந்தது. அந்நூலின் முஹக்கிக்கான அப்துல் காதிர் அர்னாவூத் என்பார் அந்த அச்சகத்தாரிடம் கேட்ட பொழுது அவர்களால் தரப்பட்ட பதிலுக்குரிய எழுத்துப் பிரதி நம்மிடம் இருக்கிறது ".

"ஹனபி மத்ஹபின் சட்டக் கோர்வையான இப்னு ஆபிதீனுடைய ஹாஷியாவில் அவ்லியாக்கள் , அப்தால்கள் , நல்லடியார்கள் பற்றிய பகுதி நீக்கப்படுள்ளது . "

"இப்னு தைமிய்யாவுடைய  பத்வாவுடைய 10ஆம் பாகமான தஸவ்வுப் தொடர்பான பாகம் நீக்கப்படுள்ளது ". என்பன போன்றவைகளை குறிப்பிடலாம் . 





No comments:

Post a Comment